தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து அரசியல் கட்சி & சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தொடங்கியுள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தொடங்கியது.
முக்கிய கட்சிகள், கூட்டணிகளின் வேட்பாளர்கள் நேற்று முதல் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
வேட்புமனுத் தாக்கல் செய்ய வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் நேற்று, திங்கள்கிழமை, தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட்டுகிறார் சீமான்.
வேட்பு மனுவுடன் அவர் தாக்கல் செய்த சொத்து விவரத்தில்…
“தனக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.31,06,500 என்றும், அசையா சொத்துகள் ஏதுமில்லை என சீமான் தெரிவித்துள்ளார்.
தன் மனைவிக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.63,25,031 என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.25,30,000 என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.65,500 வருமானம் வந்துள்ளதாக சீமான் குறிப்பிட்டுள்ளார்.
இத்துடன் குறிப்பாக 2019-20ஆம் நிதியாண்டில் தமக்கு வந்த ஆண்டு வருமானம் ரூ.1,000 மட்டுமே என சீமான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினசரி கூலி வேலைக்கு செல்வோர் கூட தினம் 500-1000/- வரை சம்பாதிக்கும் இந்த காலக்கட்டத்தில் ஆண்டு வருமானம் வெறும் 1000 ரூபாய் என (பெரிய பொய்யை) சீமான் குறிப்பிட்டுள்ளதால் அவரை சமூக வலைத்தளங்களில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.
NTK leader Seeman revealed his property and income