தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவை நேசிக்கும் அனைவருக்கும் சகலகலா வல்லவன் கமல்ஹாசனை நிச்சயம் பிடிக்கும்.
அந்த வரிசையில் நடிகர் சூர்யாவும் ஒருவர்.
இவரது பல பேட்டிகளில் கமல்ஹாசனை பற்றி பேசாமல் இருக்க மாட்டார்.
இந்த நிலையில் முன்னணி ஊடகத்திற்கு இவர் அளித்துள்ள பேட்டியில் நடிகர் கமல்ஹாசனை பற்றி தெரிவித்துள்ளார்.
அதில் சிலவற்றை இங்கே..
“கமல் சினிமா சந்தைக்கான படங்களையும் தருவார். பரிசோதனை முயற்சிகளையும் தொடர்வார். ஒரு போதும் சோர்வடைய மாட்டார்.
பெரிய தோல்விப் படத்தைக் கொடுத்திருப்பார், அடுத்தும் பெரிய படத்துடன் தான் வருவார். அதுவும் பாதுகாப்பான ஒரு படமாக இருக்காது, நான் யோசிப்பேன். ஒரு தோல்வியிலிருந்து அவர் நினைத்தால் மிக எளிதாக வெளியே வரலாம்.
சகலகலா வல்லவன் படம் சக்சஸ் ஃபார்முலா படங்களில் ஒன்றாக பேசப்படுவது. அடுத்து ஏன் அவர் அதே மாதிரி ஒன்றோடு திரும்ப வருவதில்லை?.
ஆனாலும் அவர் அபூர்வ சகோதரர்கள் தான் யோசிக்கிறார்?. இது எனக்கு வாழ்நாள் பாடம் போலவே இருக்கிறது.
“ஜெய் பீம்’ பார்த்து அரை மணி நேரம் பேசினார். இந்தப் படம் எங்கேயும் சினிமாவாகத் தெரியவில்லை. நான் இந்த மாதிரி படங்களைச் செய்யத்தான் ஆசைப்படுகிறேன் ஆனால், என்னிடம் யாரும் இப்படி ஒரு கதையை எடுத்து வரவே இல்லை” என கமல் என்னிடம் கூறினார்.
இவ்வாறு சூர்யா பேசியுள்ளார்.
#KamalHaasan
#Suriya l #filmistreet
no one came to me with like jai bhim story.; Kamal is worried about Surya