தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டிஜிட்டல் முறையில் தியேட்டர்களில் படங்கள் திரையிடப்பட்டு வருகிறது.
இந்த கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கடந்த 1-ந் தேதி முதல் புதிய படங்களை திரையிட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.
இத்துடன் கேளிக்கை வரி குறைப்பு உள்பட சில கோரிக்கைகளையும் முன் வைத்து தியேட்டர் உரிமையாளர்களும் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் சென்னை தியேட்டர்கள் இதில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் தமிழக அரசு அதிகாரிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.
அதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இன்று முதல் தமிழகம் முழுவதும் காட்சிகள் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
தியேட்டர்கள் உரிமையாளர்கள் தங்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றாலும் புதுப்படங்கள் இன்று வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகவில்லை.
எனவே பிரபல நடிகர்களின் பழைய படங்கள், டப்பிங் படங்கள், ஆங்கிலம் மற்றும் பிறமொழி படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வருகின்றன.
புதிய படங்கள் திரைக்கு வராததால் படம் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரிய வந்துள்ளது.
தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்தை கைவிட்டு புதுப்படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதே சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.