‘தளபதி 67’ படத்தில் வாய்ப்பு இல்லை – நெருங்கிய நண்பரிடம் லோகேஷ் கனகராஜ்

‘தளபதி 67’ படத்தில் வாய்ப்பு இல்லை – நெருங்கிய நண்பரிடம் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீப காலமாக சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கும் திரைப்படம் விஜய்யின் ‘தளபதி 67’ தான்.

கெளதம் வாசுதேவ் மேனன் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க தன்னை அணுகியதை உறுதிப்படுத்திய நிலையில், த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், பிருத்விராஜ் சுகுமாரன், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான் மற்றும் பலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் கலையரசன் தனது நெருங்கிய நண்பர் லோகேஷ் கனகராஜால் தளபதி 67 படத்தில் நடிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதாக ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

உண்மைச்சம்பவம்: ‘வந்தியத்தேவன் மீது PCR வழக்கு’ வழங்கும் ஜெம்ஸ் பிக்சர்ஸ்

உண்மைச்சம்பவம்: ‘வந்தியத்தேவன் மீது PCR வழக்கு’ வழங்கும் ஜெம்ஸ் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மரப்பாச்சி, ஆண்கள் ஜாக்கிரதை, படங்களை தயாரித்த “ஜெம்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரே நேரத்தில், “வந்தியத்தேவன் மீது PCR வழக்கு, “அக்கினிப்பாதை என இரண்டு படங்களை தயாரிக்க உள்ளது.

அதில் ,”வந்தியத்தேவன் மீது பி சி ஆர் வழக்கு” படத்தை” ஒரு நடிகையின் வாக்குமூலம்” படத்தை இயக்கிய ராஜ் கிருஷ்ணா இயக்குகிறார் .

மற்றொரு படமான ‘அக்னி பாதை’ படத்தை தயாரிப்பாளர் முருகானந்தம் இயக்குகிறார்.

படத்தின் கதை, வசனத்தை தயாரிப்பாளர் முருகானந்தம் எழுதுவதோடு, கதையின் நாயகனாகவும் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவு :அருள்.
இசை :பாலகணேஷ் .
எடிட்டிங் :B.S.வாசு.
கலை : ஜனா .
மக்கள் தொடர்பு : மணவை புவன்.
இணை தயாரிப்பு – ஆயர்பாடி கண்ணன்
தயாரிப்பு – ஜெம் பிக்சர்ஸ் சார்பில் முருகானந்தம்.
இயக்கம் – ராஜ் கிருஷ்ணா

” வந்தியத்தேவன் மீது பி சி ஆர் வழக்கு ” படத்தைப் பற்றி இயக்குனர் ராஜ் கிருஷ்ணாவிடம் கேட்டபோது …

கடந்த ஆட்சியில் ஒரு கல்வியாளன், ஒரு அரசியல்வாதியால் பந்தாடப்பட்ட உண்மை சம்பவம் அடிப்படையாக கொண்டு இந்த கதையை உருவாக்கியுள்ளோம்.

உலகில் கல்வி என்பது ஒருவனுக்கு கிடைத்துவிட்டால் அது அவனது ஏழு தலைமுறையை காக்கும்.

ஆனால் அந்த கல்வியை காசுக்கு விற்கும் அரசியல்வாதிகள் கல்வியாளனாக மாறி நடத்தும் அநியாயங்கள் பற்றிய உண்மை சம்பவம் இது என்றார் ராஜ் கிருஷ்ணா.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 26 ஆம் தேதி தொடங்கி , ஒரே கட்ட படப்பிடிப்பில் முடித்து ஜனவரியில் திரையிட திட்டமிட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஜெம் பிக்சர்ஸின் அடுத்த படமான “அக்னி பாதை” படப்பிடிப்பை நவம்பரில் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் முருகானந்தம் தெரிவித்தார்.

‘ரோலக்ஸ்’ கேரக்டரில் நடித்தது ஏன்? மீண்டும் வருவாரா.?; சூர்யா விளக்கம்

‘ரோலக்ஸ்’ கேரக்டரில் நடித்தது ஏன்? மீண்டும் வருவாரா.?; சூர்யா விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகர் சூர்யா.

அப்போது அவரிடம் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்தது ஏன்? ரோலக்ஸ் திரும்பி வருவாரா.? என கேட்கப்பட்டது

அப்போது சூர்யா பேசுகையில்…

‘விக்ரம்’ படத்தில் கமலுக்காகவே ரோலக்ஸ் கேரக்டரில் நடித்தேன்.

ரோலக்ஸ் திரும்பி வருவாரா என்பதற்கு, காலம்தான் பதில் சொல்லும். ஒருவேளை திரும்ப நடிக்க வேண்டுமெனில் நிச்சயம் நடிப்பேன்” என பதிலளித்தார் சூர்யா.

விதிமீறி வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்ற நயன்தாரா.; தமிழக அரசு விசாரணை

விதிமீறி வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்ற நயன்தாரா.; தமிழக அரசு விசாரணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜூன் 9 தேதி நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று அக்டோபர் 9ஆம் தேதி மாலை தங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார்.

திருமணமாகி நான்கு மாதங்களில் குழந்தைகள் எப்படி? என நெட்டிசன்கள் பலரும் கேள்வி கேட்டனர்.

இவர்கள் ஏற்கனவே செய்துக் கொண்ட ஒப்பந்தம்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்திகளை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம். இந்த நிலையில் வாடகைத்தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றதில் விதிகளை மீறி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் தமிழ்நாடு அரசு விசாரணை நடத்தவுள்ளது.

“21-36 வயதுடையவர்களே சினை முட்டை தானம் செய்யவேண்டும். தானம் செய்பவர்களுக்குத் திருமணமாகி, கணவரின் ஒப்புதல் இருக்க வேண்டும்.

இதில் விதிமுறை பின்பற்றப்பட்டதா என்று நயன்தாராவிடம் விளக்கம் கோரப்படும்” என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சைதன்யா – ரித்திகா இணையும் சஸ்பென்ஸ் த்ரில்லரை தொடங்கி வைத்த ஆகாஷ் பூரி

சைதன்யா – ரித்திகா இணையும் சஸ்பென்ஸ் த்ரில்லரை தொடங்கி வைத்த ஆகாஷ் பூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gunas entertainment’s சாய் கார்த்திக் வழங்கும் மஹிந்திரா பிக்சர்ஸ் (Mahindhra Pictures) பேனரில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வி.ஸ்ரீனிவாச ராவ் தயாரித்துள்ள “புரொடக்‌ஷன் நம்பர்.1” திரைப்படம் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்தது.

சைதன்யா கதாநாயகனாக ரித்திகா கதாநாயகியாக நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் தொடக்க விழா, பூஜை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகனும் நடிகருமான ஆகாஷ் பூரி வருகை தந்தார்.

முதல் காட்சிக்கு கிளாப் (Clap) அடித்து தொடங்கி வைத்தார் ஹீரோ பூரி ஆகாஷ்.

பின்னர் படக்குழு ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்..

திரைப்பட இயக்குனர் சின்ன வெங்கடேஷ் பேசுகையில்…

“அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள். நான் சொன்ன கதை பிடித்ததால் இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்தார் தயாரிப்பாளர் வி.சீனிவாச ராவ். அவர்களுக்கு என் நன்றிகள்.

ஹீரோ ஆகாஷ் பூரி, தயாரிப்பாளர் வி. ராவ் வந்து எங்களை வாழ்த்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இது சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இருந்தாலும் காதல், குடும்பம் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான அம்சங்கள் உண்டு. இதில் பல முன்னணி தமிழ் நடிகர்கள் நடிக்கிறார்கள். இரண்டாவது ஷெட்யூல் ஹைதராபாத்தில் நடைபெறும் ” என்று கூறினார்.

படத்தின் தயாரிப்பாளர் வி.சீனிவாச ராவ் பேசுகையில்….

“இது என்னுடைய முதல் படம். இயக்குனர் சின்ன வெங்கடேஷ் சொன்ன கதை எனக்கு பிடித்ததால் மஹிந்திரா பிக்சர்ஸ் பேனரில் இப்படத்தை தயாரிக்கிறேன்.

அனைத்து ரசிகர்களும் விரும்பும் அனைத்து அம்சங்களுடன் வரும் இப்படம் எங்கள் பேனருக்கு நல்ல பெயரை பெற்று தரும் என நம்புகிறேன்” என்றார்.

படத்தின் நாயகன் சைதன்யா கூறுகையில்…

“இது எனது 3வது படம். வெங்கடேஷ் என்னை எனது முதல் படத்தின் மூலம் தெரியும். இப்படி ஒரு நல்ல படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நல்ல டீம் மற்றும் நல்ல கதையுடன் உருவாகி வரும் இப்படம் கண்டிப்பாக அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும்” என்றார்.

பட நாயகி ரித்திகா சக்ரவர்த்தி கூறுகையில்..

“போம்ம அதிரிந்தி திம்ம திரிகிந்தி” படம் எனக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதையடுத்து, விஜய் தேவரகொண்டாவின் “குஷி” படத்தில், ‘ஆனந்தா’ படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறேன்.

இப்போது சஸ்பென்ஸ் த்ரில்லர் போன்ற நல்ல கதையில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி” என்றார்.

இசையமைப்பாளர் ஸ்வரூப்-ஹர்ஷா கூறியதாவது..

“இந்த படத்திற்கு அருமையான மெலடி பாடல்களை நல்ல பாடல் வரிகளுடன் வழங்குகிறோம். இவ்வளவு நல்ல படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி.” என்றார்.

தயாரிப்பு நிறுவனம் : மஹிந்திரா பிக்சர்ஸ்

தயாரிப்பாளர்: வி. ஸ்ரீனிவாச ராவ், சாய் கார்த்திக்

எழுத்தாளர் மற்றும் இயக்குனர்: சின்ன வெங்கடேஷ்,

DOP : சுதாகர் அக்கின பள்ளி

இசை: ஸ்வரூப் – ஹர்ஷா

கட்டு கட்டா கல்லா கட்டும் ‘காட்ஃபாதர்’.; சிரஞ்சீவி – சல்மான் ரசிகர்கள் ஹாப்பி

கட்டு கட்டா கல்லா கட்டும் ‘காட்ஃபாதர்’.; சிரஞ்சீவி – சல்மான் ரசிகர்கள் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி – பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடித்திருக்கும் அரசியல் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘காட்ஃபாதர்’ பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.

‘காட்ஃபாதர்’ திரைப்படம், வெளியான நான்கு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

‘காட்ஃபாதர்’ திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் மிகப் பெரும் வசூலை ஈட்டி வருகிறது. இந்த திரைப்படத்தை பார்ப்பதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

‘காட்ஃபாதர்’ திரைப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. காட்ஃபாதர் திரைப்படம் இந்தியிலும் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது.

நல்ல கதை அம்சமுள்ள படைப்புகளை மக்கள் வரவேற்பார்கள் என்பது இதன் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

நவராத்திரி விடுமுறைகளை முன்னிட்டு மக்கள் திரையரங்குகளில் வருகை தந்து படங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

மேலும் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘காட்ஃபாதர்’ படத்தை பற்றிய நேர்மறையான விமர்சனத்தை வெளிப்படுத்துகிறார்கள். இதன் காரணமாக ‘காட்ஃபாதர்’ வசூல் சாதனையில் புதிய இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Articles
Follows