தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நீ வல்லராச இரு.. பேரரசா இரு.. எனக்கு எல்லாம் அரசும் ஒன்று தான். என உலக நாடுகளுக்கே சவால் விட்டு உயிர்களை கொன்று குவித்து வருகிறது கொரோனா வைரஸ்.
உலகளவில் உயிர் பலி எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி வருகிறது.
இந்த வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகிறது.
பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில் உலகளவில் கொரானாவை முற்றிலும் ஒழித்த முதல் நாடு என்ற பெருமையை நியூசிலாந்து நாடு பெற்றுள்ளது.
ஜெசிந்தா ஆர்டெர்ன் என்ற பெண் பிரதமர் ஆளுகிற இந்த நாட்டில் மொத்தம் 1,154 பேருக்குத்தான் கொரானா தொற்று ஏற்பட்டதாம்.
ஆனால் பலியானவர்களின் எண்ணிக்கை வெறும் 23 மட்டுமே என கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரியில் கொரானா இந்த நாட்டில் நுழைந்துள்ளது.
ஆனால் மார்ச் 25-ந் தேதி தான் அங்கு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இதனையடுத்து கடுமையாக பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்னர்.
நியூசிலாந்து மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.
இறுதியாக சிகிச்சைக்கு பெற்றவர்கள் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.
சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் 48 மணி நேரம் எந்த அறிகுறியும் இன்றி, குணமான நிலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கடந்த 2 வாரங்களாக புதிதாக ஒருவருக்கு கூட அங்கு கொரானா வைரஸ் தொற்று கிடையாது.
இதை பிராந்திய பொது சுகாதார துறை உறுதி செய்துள்ளது.