தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக விஷால் பதவி வகித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாகவே விஷாலின் தலைமையை பலர் எதிர்த்து வருகின்றனர்.
சங்க நிதியை கையாண்ட விதம், இளையராஜாவுக்கு நடத்திய பாராட்டு விழாவில் நடந்த முறைகேடு என பல குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்துள்ளன.
இதனிடையில் மற்றொரு பிரிவு தயாரிப்பாளர்கள் தமிழக அரசிடம் புகார் கொடுத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து சங்கத்தை நிர்வகிக்க தமிழக அரசு பதிவுத்துறை அதிகாரி என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக நியமித்துள்ளது.
தற்போது தனி அதிகாரி சேகர் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களை கொண்டு தனக்கு உதவி செய்ய தற்காலிக குழு ஒன்றை (அட்ஹாக் கமிட்டி) அமைத்துள்ளார்.
இதில் பாரதிராஜா, டி.ஜி.தியாகராஜன், கே.ராஜன், டி.சிவா, சிவசக்தி பாண்டியன், எஸ்.வி.சேகர், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், எஸ்.எஸ்.துரைராஜ், கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.