தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றதால் அந்த சமயத்தில் ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்த கூடாது என சிலர் தெரிவித்தனர்.
அதே சமயம் திரையுலகினரும் தங்கள் துறைக்காக வேலை நிறுத்தம் செய்து, புதுப்படங்களை வெளியிடாமல் க்யூப் டிஜிட்டல் கட்டணத்திற்கு எதிராக போராடி வந்தனர்.
தற்போது திரையுலகம் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.
ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான விசாரணை வழக்கு மே 3ஆம் தேதி வருகிறது.
இந்நிலையில் காவிரிக்காக தமிழ் திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா..? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ ஐபிஎல் போட்டிகள்போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா.. ? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே..” என தெரிவித்துள்ளார்.
48 நாட்களாக புதுப்படங்கள் வெளியாகாமலும் பெப்சி தொழிலாளர்கள் வேலையிழந்தும் இருந்து வந்தனர்.
அப்போது தன் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை ரி-ரிலீஸ் செய்தார். தற்போது ஸ்டிரைக் முடிவுக்கு வந்தபின் அவர் மீண்டும் இந்த பிரச்சினையை திசை திருப்ப பார்க்கிறார் என்ற கண்டனங்கள் எழுந்துள்ளன.
மேலும் ஐபிஎல் அணிகளில் ஒரு அணியை திமுக குடும்பத்தை சேர்ந்தவர்கள் வைத்துள்ளனர்.
அவர்கள் அந்த அணியை விளையாட விடாமல் செய்திருக்கலாம். அல்லது காவிரிக்காக தன் குடும்ப சேனல்களை நிறுத்தி வைத்திருக்கலாம்.
இப்படி எதையுமே செய்யாமல் மற்றவர்கள் குறை சொல்வதில் என்ன நியாயம்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
New Tamil movies release may postponed Udhayanidhi tweet made issue