ஏமாந்தது போதும்… வரியே இல்லா தமிழகம்.. இலவச நீர் மருத்துவம் கல்வி வழங்க உதயமானது ‘மை இந்தியா பார்ட்டி’

ஏமாந்தது போதும்… வரியே இல்லா தமிழகம்.. இலவச நீர் மருத்துவம் கல்வி வழங்க உதயமானது ‘மை இந்தியா பார்ட்டி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anil Kumar Ojhaஇந்தியாவின் முன்னணி நிறுவனமான எஸ்எல்ஓ குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அணில் குமார் ஓஜா, தொழில்துறை மட்டுமின்றி சமூகப் பணிகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

புல்லாதேவி அறக்கட்டளையின் அறங்காவலரான அணில் குமார் ஓஜா, இந்த அறக்கட்டளையின் மூலம் மக்களுக்கு பெரும் தொண்டாற்றி வருகிறார்.

குறிப்பாக பெண்கள் முன்னேற்றம் மற்றும் கல்விச் சேவையில் பல காலம் தொண்டாற்றி வருகிறார்.

தமது தொழிலில் மாற்றத்தை கொண்டுவந்து முன்னேற்றத்தை கண்ட அணில் குமார் ஓஜா, தற்போது அதே முன்னேற்றத்தை தமிழகத்திலும் ஏற்படுத்தி, தமிழ்நாட்டையும் தமிழக மக்களையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்ல புதிய திட்டங்களுடன் மை இந்தியா பார்ட்டி (எனது இந்தியா கட்சி) எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார்.

‘போதும்!… போதும்!!… ஏமாந்தது போதும்!!!…’ என்ற கோஷத்தை முன்வைத்து தொடங்கப்பட்டுள்ள இந்த கட்சியின் கனவுத் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் வருமாறு:

அனைவருக்கும் இலவச தண்ணீர்:

தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குழாய் இணைப்புடன் தூய்மையான குடிநீர் 24 மணி நேரமும் கிடைக்க வழிவகை செய்யப்படும். அரசாங்கம், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கிராமப்புற முன்னேற்றத்திற்காக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் கொடுக்கிறது, மாறாக அரசாங்கம் நினைத்திருந்தால் இந்த நிதியை வைத்து, நதிகளை இணைப்பதுடன், ஏரி, குளங்களை தூர்வாரி புத்துயிர் அளித்திருந்தால் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்திருக்கும், தண்ணீர் பஞ்சமும் தீர்ந்திருக்கும்.

ஆனால் செய்யவில்லை.
அனைவருக்கும் இலவச மருத்துவம்:
அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்படும். ஏழை, பணக்காரர் என வேறுபாடு இன்றி எந்த ஒரு தனியார் மருத்துவமனையிலும் இலவச சிகிச்சை பெறலாம்.

அனைவருக்கும் இலவச கல்வி:

ஏழை, பணக்காரர் என வேறுபாடு இன்றி அனைவருக்கும் கல்வி இலவசமாக்கபடுவதுடன், கட்டாயமும் ஆக்கப்படும்.

மேலும் மாணவர்களின் கல்விக் கடன்கள் அனைத்தும் மை இந்தியா பார்ட்டியின் ஆட்சி காலத்தில் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்.

தமிழகத்தில் தொழில் தொடங்க தமிழர்களுக்கே முன்னுரிமை:

இப்போது வியாபாரம் என்ற பெயரில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைத்து வந்து, நாட்டை கொள்ளையடிக்க வைக்கிறார்கள்.

மை இந்தியா பார்ட்டி ஆட்சிக்கு வரும் பொன்னாளில் தமிழகத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சட்டம் ஒழுங்கு ( ZERO CRIME STATE ):

மை இந்தியா பார்ட்டி ஆட்சிப் பொறுப்பெற்ற 6 மாதத்திற்குள், சட்டம் ஒழுங்கை சரி செய்து, குற்றமற்ற முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை மாற்றிக்காட்டுவோம்.

ஊழலை ஒழித்து தமிழகத்தை TAX FREE TAMILNADU ஆக மாற்றிக் காட்டுவோம்:

மை இந்தியா பார்ட்டி ஆட்சிக்கு வந்தால், ஊழலை வேருடன் அகற்ற வகை செய்யும், கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும்.

அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரியப்படுத்தப்படும். தேவையானவர்களுக்கு திட்டத்தின் முழு பலனும் எந்தவித ஊழல் குறுக்கீடுகளும் இல்லாமல் சென்றடையுமாறு நிறைவேற்றப்படும்.

மாநகராட்சி, நீர் மற்றும் கழிவு நீர் வரிகள் முற்றிலுமாக நீக்கப்படும்.

பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்கப்படும்.

மின்கட்டண விலை 20 சதவீதம் குறைக்கப்படும்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை 10 சதவீதம் குறைக்கப்படும்.

விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

இயற்க்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த விவசாயிகளுக்கு இலவச இயற்க்கை உரங்கள் வழங்கப்படும்.

60 வயதிற்க்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு ரூபாய் 5000 பென்ஷனாக வழங்கப்படும்.

கேஸ் விலை தற்போதைய விலைக்கு 100 ரூபாய் குறைக்கப்படும்.

மை இந்தியா பார்ட்டி ஆட்சிக்கு வந்தால் தமிழக நிறுவன முதலீட்டாளர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும்:

6000 கோடி முதலீட்டு செய்த நிசான் நிறுவனத்திற்கு, இந்திய அரசாங்கம் அந்த முதலீட்டு தொகைக்கு சமமான அளவிற்கு மானியம் கொடுத்துள்ளது.

இதே மானியம் தமிழக முதலீட்டாளர்களுக்கு அளித்திருந்தால் நம் மக்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்திருக்கும். மை இந்தியா பார்ட்டி ஆட்சிக்கு வந்தால் தமிழக நிறுவன முதலீட்டாளர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

New political party My India Party’s plans and policies

மக்கள் தியேட்டருக்கு வர வேண்டும்… ‘மாஸ்டர்’ மெகா ஹிட்டாக வேண்டும்..; விஜய் போடும் வியூகம்

மக்கள் தியேட்டருக்கு வர வேண்டும்… ‘மாஸ்டர்’ மெகா ஹிட்டாக வேண்டும்..; விஜய் போடும் வியூகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

master vijayஒரு படம் பிரபலமாக அதன் விளம்பரங்களே முக்கிய பங்கு வகுக்கின்றன.

தற்போது கொரோனா காலம் என்பதால் மக்களை தியேட்டருக்கு வரவைக்க பல்வேறு யுக்திகளை திரையுலகினர் கையாளுகின்றனர்.

விரைவில் ‘மாஸ்டர்’ படம் வெளியாகவுள்ளது. எனவே படம் ரிலீஸ் தொடர்பான வேலைகளில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

எனவே மக்களை கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மீண்டு தியேட்டருக்கு கொண்டு வர தியேட்டர் விசிட் அடிக்கவுள்ளாராம்.

தலைவா’ படத்திற்காக சன் டிவிக்கு விஜய் ஒரு பேட்டி கொடுத்தார்.

பிறகு டிவி பேட்டிகள் கொடுப்பதைத் தவிர்த்தார்.

அதேபோல, ‘வில்லு’ படத்திற்கு தமிழ்நாடு முழுக்க தியேட்டர் விசிட் அடித்தார் விஜய்.

அதன்பிறகு தியேட்டர் விசிட்டையும் தவிர்த்தார்.

தற்போது மாஸ்டர் படத்திற்காக தமிழ்நாடு முழுக்க தியேட்டர் விசிட் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Vijay plan to vist theatres when master release

தமிழருவி மணியன் அர்ஜுனமூர்த்தி சுதாகர் ஆகியோருக்கு போஸ்டர்களில் இடமில்லை..; ரஜினி உத்தரவு

தமிழருவி மணியன் அர்ஜுனமூர்த்தி சுதாகர் ஆகியோருக்கு போஸ்டர்களில் இடமில்லை..; ரஜினி உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthநடிகர் ரஜினிகாந்த் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கவுள்ளார்.

இந்த கட்சியில் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பாக இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில்…

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒட்டப்படும் போஸ்டர்களில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன், மாநில நிர்வாகி சுதாகர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

ரஜினி புகைப்படத்துடன் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Rajinikanth says no to photos of Party coordinator and supervisor

சன் ரைசர்ஸ் பாணியில் ‘அண்ணாத்த’ ரஜினிக்கு பயோ பபுளை உருவாக்கும் சன் நிறுவனம்

சன் ரைசர்ஸ் பாணியில் ‘அண்ணாத்த’ ரஜினிக்கு பயோ பபுளை உருவாக்கும் சன் நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

annaattheதனிக்கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட உள்ளார் ரஜினி.

அதே போல ‘அண்ணாத்த’ படத்தை முடித்துக் கொடுக்க வேண்டியது தனது கடமை என ரஜினி கூறியிருந்தார்.

இந்நிலையில் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

செட் போடப்பட்டு இன்டோர் சூட்டிங் நடத்தவுள்ளனர்.

கொரோனா அச்சம் அதிகமாக உள்ளதால் படக்குழுவினர் அனைவரையும் உள்ளடக்கிய பயோபபுள் உருவாக உள்ளதாம்.

அதாவது… ஐபிஎல் தொடரில் சன் நிறுவனத்தின் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு இதே போல பயோ பபுள் உருவாக்கியிருந்தனர்.

முழுப்படப்பிடிப்பு முடியும் வரை எவரும் வெளியே செல்லக்கூடாதாம். சென்றால் உள்ளே வரக்கூடாதாம்.

இப்போது அண்ணாத்த படக்குழுவுக்கு பயோபபுள் உருவாக உருவாகிறது.

Rajinikanth and his team to shoot in bio bubble

வனிதா பாணியில் மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரீ கொடுக்கும் ஷனம்.?

வனிதா பாணியில் மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரீ கொடுக்கும் ஷனம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sanam shettyகமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வரை 65 நாட்களை கடந்துவிட்டது.

அக்டோபர் 4-ம் தேதி 16 பேருடன் இந்த சீசன் தொடங்கியது.

ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சுரேஷ் மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நடிகை விஜே அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வீட்டுக்குள் வந்தனர்.

இந்த வார நாமினேஷனில், சோம் சேகர், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி, ஆகியோர் உள்ளனர்.

கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டார்.

ஷனம் ஷெட்டியை ஒரு முறை கமல்ஹாசனும் பிக்பாஸ் மேடையில் பாராட்டினார்.

எனவே சனம் வெளியேறிய போது ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்தநிலையில் சனம் அவரின் வீட்டுக்கு செல்லாமல் ஹோட்டலில் தனிமைப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது சனம் ஷெட்டி மீண்டும் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சீசனில் வனிதா வெளியேற்றப்பட்டு மீண்டும் வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sanam Shetty To Re-Enter Bigg Boss Tamil 4 house As Wild-Card Contestant?

‘அவள் அப்படித்தான்’… சில்க் ஸ்மிதா பயோபிக் படத்தில் பிரபல தொகுப்பாளினி

‘அவள் அப்படித்தான்’… சில்க் ஸ்மிதா பயோபிக் படத்தில் பிரபல தொகுப்பாளினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1979ல் ‘வண்டிச்சக்கரம்’ பட மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சில்க் ஸ்மிதா.

கமல் & ரஜினி படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 450 படங்களுக்கு மேல் நடித்தவர்.

இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அப்போதே அது மிகப்பெரிய சர்ச்சையானது.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படத்தை வித்யா பாலனை வைத்து ‘தி டர்ட்டி பிக்சர்’ என்கிற பெயரில் ஹிந்தியில் உருவாக்கினர். அந்த படமும் நன்றாக பேசப்பட்டது.

ஆனால் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை தவறாக காண்பித்தனர் என்று விமர்சனம் எழுந்தது.

ஆனாலும் வித்யா பாலனுக்கு தேசிய விருது கிடைத்தது.

பின்னர் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படத்தை எடுக்க நடிகர் வினு சக்ரவர்த்தி முயற்சித்தார்.

ஆனால் அது பேச்சோடு நின்றது. நடக்கவில்லை.

இந்நிலையில் சில்க் வாழ்க்கை படம் ‘அவள் அப்படித்தான்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட புகழ் மணிகண்டன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

பிரபல தெலுங்கு டிவி தொகுப்பாளினியும் தெலுங்கு நடிகையுமான அனசுயா பரத்வாஜ் தான் சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார் என தகவல்கள் வந்துள்ளன.

ரங்கஸ்தலம் படத்தில் நடித்ததற்காக விருது பெற்றவர் அனசுயா.

காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிக்கின்றனர்.

அண்மையில் விஜய் சேதுபதியின் அருகில் நிற்கும் படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அதில் புதிய தொடக்கம்.. கோலிவுட் என கூறியிருந்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Actress Anasuya Bharadwaj to play the lead role in Silk Smitha’s Telugu biopic

anasuya bharadwaj latest photos

More Articles
Follows