தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சரி விஷயத்துக்கு வருவோம்..
அண்மைக்காலமாக கோலிவுட் ஹீரோக்களே படங்களை தயாரிக்க ஆரம்பித்து விட்டனர்.
இவையில்லாமல் பாடல் எழுதுவது.. பாடலை அவர்களே பாடுவது என இம்சை செய்ய ஆரம்பித்து விட்டனர்.
அதாவது பாடுவதாக நினைத்து பேசியே கொல்கின்றனர்.. ஹீரோக்களின் ரசிகர்கள் அதனை ரசிக்கலாம். ஆனால் பொதுஜனத்தின் நிலையை புரிந்து கொள்வார்களா.?
ரஜினிகாந்த் தன் 45 வருட சினிமா வாழ்க்கையில் மன்னன் & கோச்சடையான் ஆகிய 2 படங்களில் மட்டுமே பாடலில் தன் குரலை பதிவு செய்தார்.. அவருக்கே தெரிந்திருக்கும் போல.. அவர் அந்த ரிஸ்க்கை தொடரவில்லை.
கந்தசாமி & சாமி 2 படங்களில் விக்ரம் பாடுவதாக நினைத்து பேசினார்.
சூரரைப் போற்று படத்தில் பாடலின் நடுவே சூர்யாவும் வசனங்களை பேசினார்.
கமல் விஜய் & சிம்பு ஆகியவர்கள் பாடிய பாடல்கள் ஹிட்டடித்துள்ளன. ஆனாலும் அவர்கள் அதிகமாக பாடல்களை பாடுவதில்லை. சிம்பு அவ்வப்போது பாடி வருகிறார்.
அஜித் அந்த ரிஸ்க்கை இதுவரை எடுக்கவில்லை. ஜெய் ஒரு படத்தில் இந்த ரிஸ்க் எடுத்து ரசிகர்களை சோதித்தார்.
தனுஷ் & சிவகார்த்திகேயன் தங்கள் படங்களிலும் அடுத்தவர் படங்களிலும் பாடி வருகின்றனர். சில பாடல்கள் நிஜமாகவே சூப்பர் தான்.
ஆனால் எல்லா பாடல்களை பாட வேண்டும் என நினைப்பார்களோ என்னவோ.. அடிக்கடி பாடி இம்சைக்கின்றனர்.
இன்னா மயிலு என்ற பாடலில் சிவகார்த்திகேயன் பேசினார்.
சமீபத்தில் டாடா பை பை என்ற பாட்டும் நேத்து என்ற பாடலிலும் தனுஷ் பேசி இருந்தார்.
உங்கள் ரசிகர்கள் இதை ரசிக்கலாம். ஆனால் பாடலை இப்படி கொல்ல வேண்டாம்.
நாளைய தலைமுறையினர் பேசினாலே அது பாடல் என நினைத்துவிட போகிறார்கள். பின்னணி பாடகர்களின் வாய்ப்புகளை கெடுக்க வேண்டாம்.
எப்பொழுதாவது உங்களுக்கான பாடலை தேர்ந்தெடுத்து பாடுங்கள்.. நாங்களும் இன்பமாய் ரசிக்கிறோம்..
இசையமைப்பாளர்களே ஒரு சில படங்களில் தான் பாட்டு பாடுகின்றனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
அனிருத்தும் நிறைய படங்களில் பாடுகிறார். இளம் நாயகர்களுக்கு அவரது குரல் செட்டாகி விடுகிறது. ஆனால் தர்பார் படத்தில் ரஜினிக்கு அனிருத் குரல் செட்டாகவில்லை என்பதே நிஜம்.
Netizens slams celebrities singing songs