தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் இறுதி முதல் நாடெங்கிலும் பள்ளிகள் மற்றும் கல்லுரிகள் மூடப்பட்டன.
கிட்டதட்ட 6 மாதங்களை நெருங்கி கொண்டிருக்கிறது. தற்போது வரை கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் அதிகளவில் இருப்பதால் இந்தாண்டு 2020 டிசம்பர் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் எந்த அரசு பணியையும் செய்யாமல் அரசு ஆசிரியர்கள் மட்டும் லட்சணக்கணக்கில் சம்பளம் வாங்குவது சரியா? என கேள்வி நாடெங்கிலும் எழுந்துள்ளது.
ஒரு சில பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிக்காக சில ஆசிரியர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர். அப்படியே இருந்தாலும் மாணவர்களுக்கு பாடம் எடுக்காத ஆசிரியர்களுக்கு ஏன்? முழு சம்பளத்தை கொடுக்க வேண்டும் என கேள்வியும் கூடவே வருகிறது.
கொரோனா லாக்டவுனால் மக்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும்போது மக்கள் வரிப்பணத்தில் இவர்கள் சம்பளம் வாங்குவது எப்படி முறையாகும்? என்பதே பலரின் கேள்வியாகவுள்ளது.
மேலும் கொரோனா பணிக்காக தமிழக அரசு கிட்டதட்ட ரூ 6000 கோடியை செலவழித்துக் கொண்டிருக்கும்போது ஆசிரியர்களுக்கு சம்பளத்தை குறைத்து அதை அரசு நலப்பணிக்களுக்காக செலவிடலாமே என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.
ஒரு சில ஆசிரியர்கள்.. நாங்கள் பள்ளிக்கு சென்று வந்துக் கொண்டிருக்கிறோம் என்றாலும் யாருமே இல்லாத கடைக்கு யாருக்கு நீ போடுறீங்க என நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை அள்ளி விடுகின்றனர்.
பொதுமக்களின் கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.