நிர்பயா வழக்கு நால்வருக்கு தூக்கு.; விஜய் ஸ்டைலில் கமிஷ்னர் கெத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2012 ஆண்டு டிசம்பர் 16ல் டெல்லியில் மருத்துவ மாணவி, ‘நிர்பயா’ நண்பருடன் இரவில், தனியார் பஸ்சில் பயணம் செய்த போது, 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டார். அவளுடைய நண்பரும் தாக்கப்பட்டார்.

இதனையடுத்து பஸ் டிரைவர் ராம்சிங், அவரது சகோதரர் முகேஷ்சிங், ராஜஸ்தானில் கைது. வினய் சர்மா, பவன் குப்தா, 17 வயது சிறுவன் டெல்லியில் கைது. அக்‌ஷய்குமார் சிங் ஆகியோர் அவுரங்கபாத்தில் கைது செய்யப்பட்டார்.

அப்போது சப்தர்ஜங் மருத்துவமனையில், மாஜிஸ்திரேட்டிடம் நிர்பயா வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

இந்த சம்பவம் நாடெங்கும் பற்றி எரியவே குற்றவாளிகளை தூக்கிலிட வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.

நிர்பயா மேல் சிகிச்சைக்காக, சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை டிசம்பர்-29 நிர்பயா உயிரிழந்தார்

இது தொடர்பான வழக்கு கிட்டதட்ட 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

பல கட்ட விசாரணை, மனு தள்ளுபடி உள்ளிட்ட பல விஷயங்கள் அரங்கேறியது.

இன்று காலை இறுதியாக குற்றவாளி பவன் குப்தா சார்பாக அளிக்கப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

நிர்பயா வழக்கில் கைதான குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து திருநெல்வேலி கமிஷ்னர் அர்ஜீன் சரவணன் என்பவர் தெறி பட விஜய் ஸ்டையில் தன் ட்விட்டரில் ஒரு போஸ்டரை வெளியிட்டு… டீ சொல்லுங்க ராஜேந்திரன் என கெத்தாக பதிவிட்டுள்ளார்.

இது தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வழக்கை போல் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என பலரும் கமிஷ்னருக்கு வேண்டுகோள் விடுத்து கமெண்ட் அளித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் சங்க தேர்தல்; தயாரிப்பாளர் நலன் காக்கும் அணி போட்டி 2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விரைவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் போட்டியிடுவதற்காக அம்மா கிரியேஷசன் டி.சிவா தலைமையிலான அணியில் போட்டியிடுபவர்கள் பட்டியல் நேற்று வெளியானது.

இந்த அணிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் பாதுகாப்பு அணி என்று பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் மற்றொரு அணியினர் அவர்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

ஸ்ரீ தேணான்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியினர் அறிவிக்கப்பட்டனர்.

தலைவராக முரளி, துணை தலைவர்களாக சுபாஷ் சந்திரபோஸ், மைக்கேல் ராயப்பன், செயலாளர்களாக ராதாகிருஷ்ணன், கே.ஜே.ஆர்., ஸ்டூடியோஸ் ராஜேஷ், பொருளாளராக சந்திர பிரகாஷ் ஜெயின் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர் போட்டியிடுகின்றனர்.

இவர்களின் அறிமுகவிழாவில் நடிகரும், தயாரிப்பாளருமான S.V.சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Tamil Film Producers Council election Welfare team details

பெண்கள் மீதான வன்முறையை கண்டிக்கும் “அசுர காதல்” மியூசிகல் வீடியோ பாடலை வெளியிட்டார் காஜல் அகர்வால் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிக அழகான முறையில் அழுத்தமாக உருவாக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கெதிரான வன்முறையை கண்டிக்கும் “அசுர காதல்” மியூசிகல் வீடியோ பாடலை வெளியிட்டார் நடிகை காஜல் அகர்வால். பல வித பின்னணியில் பெண்களுக்கெதிராக இல்லங்களில் நிகழ்த்தப்படும் வன்முறையை கூறுவதாக அமைந்திருக்கும் இந்த வீடியோவை திரு TK உருவாக்கியுள்ளார்.

வீடியோ பாடலை இயக்கிய இயக்குநர் திரு TK இது குறித்து கூறியதாவது…

எங்கள் மொத்த குழு சார்பாக இப்பாடலின் தன்மையை புரிந்துகொண்டு, எங்களை பாராட்டி, வெளியிட்டமைக்கு நடிகை காஜல் அகர்வால் அவர்களுக்கு நன்றி. இப்பாடலை வெளியிட சரியானவர் அவர் என்பது எங்கள் மொத்த குழுவின் கருத்து. சினிமாவிலும் சரி, இயல்பு வாழ்க்கையிலும் சரி, பெண்களுக்கெதிரான வன்முறைக்கு எதிராக, எப்போதும் குரல் கொடுத்து வருபவர் அவர். அவர் எங்கள் பாடலை வெளியிட்டது எங்கள் அனைவருக்கும் பெருமை.

சிங்கப்பூரை சார்ந்த one clan நிறுவனத்தார் இந்த மியூசிகல் வீடியோவை தயாரித்துள்ளார்கள். திரு TK, தர்மேனிசம் இணைந்து இப்பாடலை உருவாக்கி, பாடியுள்ளார்கள். ( Diyo )தியோ இசையமைக்க ராப்பர்ஸ் – சோக்கோ (choco), B மற்றும் ஸ்பைஸ் ( spice ) பாடலுக்கு வலிமை கூட்டியுள்ளார்கள்.

இந்த ஐந்து நிமிட பாடல் வீடியோவை இயக்கியுள்ளார் திரு TK. லெவின் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு JK சரவணா, குட்டி குமார் மற்றும் சிதம்பரம் S செய்துள்ளனர். JK சரவணா மற்றும் அவரது Tantra Studios இணைந்து போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளை செய்துள்ளார்கள்.

சமூகத்திற்கு தேவையான அழுத்தமான கருத்தை சொல்லும்
இந்த வீடியோவிற்கு Wish a Smile Foundation மற்றும் #IKilledSucide Movement ஆதரவளித்துள்ளார்கள்.

Link : https://youtu.be/7_GqRZMpNTI

அதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெகு சில நடிகர்களே எந்த மாதிரியான கதாப்பாத்திரம் செய்தாலும் ரசிகர்களை திரையோடு கட்டிப்போடும் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் க்யூட் அப்பாவி இளைஞனாக இருக்கட்டும், அல்லது சாந்தமான சைக்கோ கொலையாளியாக இருக்கட்டும் தான் ஏற்கும் பாத்திரங்களில், அப்படியே ஒட்டிக்கொண்டு, கதாப்பத்திரமாக மாறிவிடும் தன்மை கொண்டவர் நடிகர் நந்தா. சமீபத்தில் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பான “ “வானம் கொட்டட்டும்“ படத்தில் இரட்டை வேடத்தில் அனைவரையும் கவரும் நடிப்பை தந்திருந்தார். தற்போது அதர்வா முரளி நடிப்பில் உருவாகும் போலீஸ் திரில்லர் படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார்.

இது குறித்து இயக்குநர் ரவீந்தர மாதவ் கூறியதாவது…

இப்படம் துவங்கப்பட்டபோதே படத்தில் இருக்கும் கனாமான வில்லன் கதாப்பாத்திரம் குறித்து கூறியிருந்தேன். திரையில் அந்த கதாப்பாத்திரத்தினை உயிர்பிக்க திறமை வாய்ந்த ஒருவர் தேவைப்பட்டார். மிகச்சரியான ஒருவரை தேடுவதென்பது மிக நீண்ட பயணமாக இருந்தது. இறுதியாக அசாத்திய திறமை கொண்ட நடிகர் நந்தா எங்களுடன் இப்படத்தில் இணைந்திருக்கிறார். அனைவரையும் கவர்ந்திழுக்கும் முக அமைப்பு கொண்ட அவர் நடிப்பிலும் சிறந்து விளங்குபவராக இருக்கிறார். எந்த ஒரு பாத்திரம் ஆனாலும் எளிதில் அந்த பாத்திரமாக மாறிவிடும் திறமை அவருக்கு இருக்கிறது. மேலும் இப்படத்தின் வில்லன் கதாப்பாத்திரம் வெறும் உடல் வலிமை மட்டும் கொண்டு செயல்படுபவன் அல்ல, மகா புத்திசாலித்தனமாக செயல்படுபவன். நடிகர் நந்தா ஏற்கனவே இந்த இரு தளங்களிலும் தன்னை நிரூபித்தவர். மகச்சிறந்த நடிகர்கள் குழுமம் படத்தில் இணைந்திருக்கிறது. அவர்கள் அனைவருடனும் இணைந்து பணிபுரிய வெகு ஆவலுடன் காத்திருக்கிறோம். கொரோனா வைரஸ் பாதிப்புகள் முடிந்த பிறகு படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது என்றார்.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்குகிறார். புகழ்மிகு இயக்குநர்களான பூபதி பாண்டியன், சுசீந்திரன், கொரட்டால சிவா ஆகியோரிடம் பணியாற்றியவர் இவர். இப்படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்க, லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்கிறார், நந்தா வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சில முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை கலை செய்ய, சரவணன் சண்டை பயிற்சி இயக்கம் செய்கிறார். கலை இயக்குநராக ஐயப்பன் பணியாற்றுகிறார்.

தமிழக அரசை தட்டி கொடுத்து கோரிக்கை வைத்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா… இந்த பெயரை கேட்டால் உலகமே அதிரும் என்ற வகையில் இந்த வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்த வைரஸ் தொற்று நோயினால் உலகமே ஸ்தம்பித்துள்ள எனலாம்.

மார்ச் 31ஆம் தேதி சகஜ நிலைமைக்கு திரும்பாமல் வீட்டுக்குள்ளே மக்களை இருக்க இந்திய அரசு வற்புறுத்தியுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரானா குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தி மக்கள் நலனை காக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரானா குறித்து ரஜினி கூறியுள்ளதாவது… ‛‛தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்து கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை.

அரசோடு சேர்ந்து மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால், அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்”.

என ரஜினி தெரிவித்துள்ளார்.

Rajini request to TN Govt regarding Corono virus issue

விஜய்-அஜித்-விக்ரம் ஏற்ற வேடத்தை முதன்முறையாக ஏற்கும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற ஒரு படம், ஹரி இயக்கத்தில் அருவா ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இதனிடையில் கௌரவ தோற்றத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம் சூர்யா.

கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறாராம்.

இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக உள்ள இந்த படத்தில் பழங்குடியினரின் கோரிக்கைக்காக போராடும் வக்கீல் வேடத்தில் சூர்யா நடிக்க இருக்கிறாராம்.

இதற்கு முன் தமிழன் படத்தில் விஜய், அந்நியன் படத்தில் விக்ரம், நேர் கொண்ட பார்வை படத்தில் அஜித் ஆகியோர் வக்கீலாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Suriya as advocate in new movie

More Articles
Follows