தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமா தியேட்டர்களில் டிஜிட்டலில் படங்களை திரையிட கியூப் நிறுவனம் அதிகளவில் பணம் வசூலிப்பதை கண்டித்து கடந்த மார்ச் 1 முதல் புதுப்படங்கள் ரிலீஸ் நிறுத்தப்பட்டது.
தற்போது மூன்றாவது வாரமாக எந்த புதிய தமிழ் படமும் வெளியாகவில்லை.
இதுவரை 20 படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ரூ.100 கோடி வரை முடங்கியுள்ளது.
மேலும் தமிழ் தயாரிப்பாளர்கள் துவக்கியுள்ள வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, மார்ச் 16 முதல் கிட்டதட்ட 42 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னையைத் தவிர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
இதனால் ரூ.410 கோடி முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய படங்கள் ரிலீஸ் நிறுத்தப்பட்டு 16 நாட்கள் ஆகியும் இதுவரை இப்பிரச்னையில் தமிழக அரசு தலையிடவில்லை.
தொடர்ந்து படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
Nearly Rs 400 Crores loss due to Tamil film industry strike for 20 days