நயன்தாரா விஜய்சேதுபதி அட்லி அனிருத் குறித்து ரசிகர்கள் கேள்விக்கு ஷாருக் ‘நச்’ பதில்

நயன்தாரா விஜய்சேதுபதி அட்லி அனிருத் குறித்து ரசிகர்கள் கேள்விக்கு ஷாருக் ‘நச்’ பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பதான்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகும் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் மூலம் ஷாருக்கான், பார்வையாளர்களை அதிரடியான பயணத்திற்கு அழைத்துச் செல்ல தயாராகிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ‘ஜவான்’ படம் குறித்து, பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ‘ஜவான்’ திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் #AskSRK எனும் பிரிவில் ரசிகர்களுடன் ஷாருக்கான் உரையாடினார்.

இதன் போது ‘ஜவான்’ படம் குறித்தும் அதன் வெளியீட்டு தேதியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும்.. ரசிகர்கள் ஆர்வத்துடன் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

‘ஜவான் ஏன் தாமதமாகிறது?’ என்று கேட்டதற்கு…

”பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க மிக்க படைப்பை வழங்க பட குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை” என்று கூறினார்.

‘ஜவானில் எது மிகவும் பிடிக்கும்?’ என்று கேட்ட போது, ” என்னைப் பொறுத்தவரை இது ஒரு புது வகையிலான படைப்பு. இயக்குநர் அட்லீ மாறுபட்ட இரண்டு ஷாருக்கானை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

மேலும் ஜவானை பொருத்தவரை, அட்லீ மற்றும் அவரது குழுவினர் தான் மாஸ். அவர்களின் ஸ்டைல் மற்றும் அணுகுமுறை தான் தன்னை மிகவும் உற்சாகப்படுத்தியது” என்றார்.

நயன்தாராவை பற்றி குறிப்பிடுகையில்… ” அவர்கள் அழகானவர். மிகவும் இனிமையானவர். அவருடன் பணியாற்றுவதற்கு எளிதாகவும், சௌகரியமாகவும் இருந்தது. மிக்க மகிழ்ச்சி” என்றார்.

விஜய் சேதுபதி பற்றி குறிப்பிடுகையில்.. “அடக்கமான மனிதர். சிறந்த நடிகர். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்” என்றார்.

படத்தின் இயக்குநரான அட்லீ, உங்களை தமிழ் மொழியை கற்க வைத்தாரா? என்று கேட்டபோது…

” அட்லீயும், அனிருத்தும் இணைந்து, என்னை தமிழில் சில பாடல் வரிகளை பாட வைத்துள்ளனர். நான் அவற்றை சரியாக உச்சரித்திருக்கிறேன் என நம்புகிறேன்.” என பதிலளித்தார்.

ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் ஷாருக்கான் நடிக்கும் இந்த திரைப்படம், பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராக செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜவான்

Nayanthara VijaySethupathi Atlee of Fans’ Questions ‘Nuch’ Answers by shahrukhan

தமிழக பிரபலங்கள் இணைந்த 3வது இந்திய அத்தியாயம் : ‘மாடர்ன் லவ் – சென்னை’ ரிலீஸ் அப்டேட்

தமிழக பிரபலங்கள் இணைந்த 3வது இந்திய அத்தியாயம் : ‘மாடர்ன் லவ் – சென்னை’ ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019-ஆம் ஆண்டு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற வெப் தொடர் ‘மாடர்ன் லவ்’.

ஆந்தாலஜி வகையைச் சேர்ந்த இத்தொடரின் இந்திய பதிப்பான ‘மாடர்ன் லவ் – மும்பை’ கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இத்தொடரின் சென்னை அத்தியாயத்தின் வெளியீட்டுத் தேதியை அமேசான் ப்ரைம் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த வெப் தொடரை டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இத்தொடரில் பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார் , அக்‌ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகிய ஆறு இயக்குநர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தொடருக்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், மற்றும் ஷான் ரோல்டான் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

இத்தொடருக்கு பாடல் வரிகள் இளையராஜா, யுகபாரதி மற்றும் பாக்கியம் சங்கரால் எழுதப்பட்டுள்ளன.

மேலும், இத்தொடர் வரும் மே 18-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

இந்த தொகுப்பு பின்வரும் அத்தியாயங்களை உள்ளடக்குகிறது:

1 “லாலாகுண்டா பொம்மைகள்” – ராஜுமுருகன் இயக்கியது, இசையமைப்பு ஷான் ரோல்டன் , ஸ்ரீ கௌரி ப்ரியா, வாசுதேவன் முரளி, மற்றும் வசுந்தரா ஆகியோர் நடித்துள்ளனர்

2 “இமைகள்” – பாலாஜி சக்திவேல் இயக்கியது, இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா, அசோக் செல்வன், மற்றும் டீ.ஜே பானு ஆகியோர் நடித்துள்ளனர்

3 “காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற இமோஜி” –கிருஷ்ணகுமார் ராம்குமார், இயக்கியது, இசையமைப்பு ஜி.வி.பிரகாஷ் குமார், ரித்து வர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ், மற்றும் அனிருத் கனகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்

4.“மார்கழி” – அக்ஷய் சுந்தர் இயக்கியது, இசையமைப்பு இளையராஜா , சஞ்சுளா சாரதி, சூ கோய் ஷெங், மற்றும் ஸ்ரீகிருஷ்ணா தயாள் ஆகியோர் நடித்துள்ளனர்

5.“பறவை கூட்டில் வாழும் மான்கள் ” – பாரதிராஜா இயக்கியது, இசையமைப்பு இளையராஜா , கிஷோர், ரம்யா நம்பீசன், மற்றும் விஜயலக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர்

6.“நினைவோ ஒரு பறவை” – தியாகராஜன் குமாரராஜா இயக்கியது, இசையமைப்பு இளையராஜா , வாமிகா மற்றும் பீபி ஆகியோர் நடித்துள்ளனர்.

மாடர்ன் லவ்

‘Modern Love Chennai’ to release on may 18

திருமணத்திற்கு பிறகு மதம் மாறினாரா குஷ்பு? அவரே கொடுத்த விளக்கம்

திருமணத்திற்கு பிறகு மதம் மாறினாரா குஷ்பு? அவரே கொடுத்த விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குஷ்பு முஸ்லீமாக பிறந்து வளர்ந்தவர்.

மேலும் அவர் சுந்தரை மணந்த பிறகு மதம் மாறியதாகவும் அவருக்கு இந்து மதத்துடன் தொடர்பு இருக்கிறதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

வெளிப்படையாகப் பேசும் அவர் ட்விட்டரில் ஒரு வலுவான பதிலைக் கொண்டு வந்தார. “என் திருமணத்தை கேள்விக்குள்ளாக்குபவர்கள், அல்லது மதம் மாறி விட்டேன் என்று கூறுபவர்கள், கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.

“சிறப்பு திருமணச் சட்டம்” பற்றி அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை. இது நம் நாட்டில் உள்ளது. நான் மதம் மாறவில்லை என்று குஷ்பு மேலும் கூறினார்.

Did Khushbu convert to different religion after marriage?

பெப்சி உடன் ஒப்பந்தம் இல்லை.; ‘ஜெய் சீதா’ படப்பிடிப்பில் தகராறு; விரட்டியடித்த தலைவர்

பெப்சி உடன் ஒப்பந்தம் இல்லை.; ‘ஜெய் சீதா’ படப்பிடிப்பில் தகராறு; விரட்டியடித்த தலைவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்.கே.அன்புச் செல்வன் தலைமையில் இயங்கி வரும் சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர் தயாரிப்பாளர் காமராஜ் தயாரிப்பில், சம்பத் இயக்கி கொண்டிருக்கும் படம் “ஜெய் சீதா”.

இந்த படப்பிடிப்பில் இன்று மதியம், பெப்சி யூனியன் ஆட்கள், தங்களின் உறுப்பினர்களை வைத்து தான் படப்பிடிப்பு நடந்த வேண்டும் என கூறி, தகராறு செய்தனர்.

சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே.அன்புச் செல்வனுக்கு தகவல் தெரிந்ததும், உடனடியாக போலீஸ் வரவழைக்கப்பட்டு, தகராறு செய்தவர்களிடம், “சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி யூனியனில் எந்த ஒப்பந்தமும் போடவில்லை.

எந்த சங்கத்திற்கும் நாங்கள் கட்டுப்பட்டவர்கள் இல்லை” என கூறி, கண்டித்து அனுப்பி வைத்தார்.

சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படத்தை நிறுத்துவதற்கு “பெப்சி யூனியன்” உட்பட எந்த சங்கத்திற்கும் அதிகாரம் இல்லை என சங்கத் தலைவர் ஆர்.கே.அன்புச் செல்வன் தெரிவித்தார்.

No contract with fefsi.; Controversy in ‘Jai Seetha’ shoot

‘பிக்பாஸ்’ வின்னர் அசீம் படத்தை இயக்கும் சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் இயக்குனர்

‘பிக்பாஸ்’ வின்னர் அசீம் படத்தை இயக்கும் சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிவி சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகர் அசீம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் தமிழக ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார்.

பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக இவர் அறிவிக்கப்பட்டதை அடுத்து இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் அசிம் நடிக்க உள்ள புதிய படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’, ‘சீமராஜா’ விஜய்சேதுபதி நடித்த ‘டிஎஸ்பி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் பொன்ராம்.

இவரது படங்கள் பெரும்பாலும் கிராமத்து கதையம்சம் உள்ள படங்களாகவே இருக்கும். எனவே இந்த படமும் கிராமத்து பாணியில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த படத்தின் நாயகி & தயாரிப்பாளர் மற்றும் இதர விவரங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Azeem next movie is directed by ponram

சமந்தாவுடன் விவகாரத்து ஏன்.? ‘கஸ்டடி’ மீட்டிங்கில் கஷ்டத்தை சொன்ன நாக சைதன்யா

சமந்தாவுடன் விவகாரத்து ஏன்.? ‘கஸ்டடி’ மீட்டிங்கில் கஷ்டத்தை சொன்ன நாக சைதன்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள படம் ‘கஸ்டடி’.

இவர்களுடன் அரவிந்தசாமி, சரத்குமார், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு இளையராஜா – யுவன் இணைந்து இசை அமைத்துள்ளனர்.

இந்தப் படம் வரும் மே 12-ம் தேதி வெளியாகிறது.

ஓரிரு தினங்களுக்கு முன் சென்னையில் இந்த படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இதன் பின்னர் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சியில் நாக சைதன்யா தன்னுடைய இல்லற வாழ்க்கை குறித்து பேசி உள்ளார்.

“நாங்கள் பிரிந்து 2 வருடம் ஆகிறது. முறைப்படி விவாகரத்து செய்துவிட்டோம். அது ஒரு வருடம் ஆகிவிட்டது.

நாங்கள் இருவரும் அவரவர் வாழ்க்கையின் அடுத்த கட்டத்மிற்கு நகர்ந்துவிட்டோம்.

இனிமையானவர் சமந்தா. எங்களின் அந்த திருமண வாழ்க்கை மீது மிகுந்த மரியாதை இப்போதும் உண்டு.

ஊடகங்கள் வதந்திகளைப் பரப்பும்போதுதான் அது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. வதந்திதான் பிரச்சினைக்கு காரணம். முதலில் அதை நாங்கள் கண்டுகொள்ளவில்லை. பிறகு அது எங்களால் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது.” என்றார்.

Why divorce with Samantha? Naga Chaitanya talks about the difficulty in the ‘custody’ meeting

More Articles
Follows