விஜய் மற்றும் அட்லியுடன் மீண்டும் இணையும் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் – அட்லி – ஏஆர். ரஹ்மான் கூட்டணியில் 3வது உருவாகவுள்ள படம் தளபதி 63.

இப்படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கிறார்.

முக்கிய கேரக்டரில் விவேக் நடிக்க ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கவுள்ளது.

இந்நிலையில், தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார் என்பதை படக்குழுவினர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

வில்லு படத்தில் விஜய்யுடன் ஏற்கெனவே இணைந்து நடித்துள்ளார் நயன்தாரா.

அதுபோல அட்லி இயக்கிய ராஜா ராணி படத்திலும் நயன்தாரா நடித்துள்ளார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Nayanthara team up with Vijay for Thalapathy 63

குழந்தைகள் நலனில் எந்த அரசும் கவனம் செலுத்தவில்லை. : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை லதா ரஜினிகாந்த் நடத்தினார்.

அதில் அவரது கணவரும் திரையுலக சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் கலந்துக் கொண்டார்.

அவருடன் லதா ரஜினி, தனுஷ், ஐஸ்வர்யா, சௌந்தர்யா உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு ரஜினி உள்ளிட்டவர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது…

நாட்டின் எதிர்காலமே குழந்தைகள்தான். பூமியில் நடமாடும் பூக்கள் குழந்தைகள்.

சாலைகளில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை அழைத்துச்சென்று யார் இவ்வாறு செய்கிறார்கள் என்று போலீசார் விசாரணை நடத்துவதில்லை குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பது கொலை செய்வதைவிட பெரிய குற்றம்.

குழந்தைகளை பிச்சையெடுக்க வைக்கும் செயலுக்கு பின் ஒரு பெரிய மாஃபியா இருக்கிறது.

குழந்தைகளை பிச்சையெடுக்க வைப்பவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்
குழந்தைகள் நலனை மத்திய அரசும் மாநில அரசும் சரியாக கவனிக்கவில்லை “ என குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ரஜினிகாந்த் பேசினார்.

Rajini Speech about Child abduction At Grand Concert Chennai

கஜா புயல் பாதித்த கார்காவயல் கிராமத்தை தத்தெடுக்கும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் 7 மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது.

கஜா தாக்கிய வேதாரண்யம், கோடியக்கரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் இன்னும் கஜா துயரத்தில் இருந்து நீங்கவில்லை.

குடிக்க தண்ணீர் இன்றி, மின்சாரம் இன்றி, உணவின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

திரையுலக பிரபலங்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் நிவாரண நிதிகளை வாரி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை தத்தெடுக்க விஷால் முன்வந்துள்ளார்.

இதுகுறித்து விஷால் கூறியதாவது…

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, கார்காவயல் ஊராட்சி, கார்காவயல் கிராமத்தை தத்தெடுக்க உள்ளேன். அங்கு 450 குடும்பங்கள் உள்ளன. வீடுகளை இழந்தோருக்கு வீடு கட்டித்தந்து சூரியசக்தி மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும்.

தத்தெடுக்கும் கார்காவயல் கிராமத்தை முன்மாதிரியான கிராமமாக உருவாக்குவேன் என விஷால் உறுதியுடன் கூறியுள்ளார்.

Vishal adopt village from Pattukottai which affected by Gaja Cyclone

கஜா புயல் நிவாரண நிதிக்கு அஜித் ரூ.15 லட்சம்; தமிழக அரசு அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கஜா புயலால் பாதிப்படைந்த மக்களின் துயரங்களை நீக்க நிவாரண நிதிகளை பலரும் வாரி வழங்கி வருகின்றனர்.

தமிழக நடிகர்களில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நிவாரண நிதிகளை கொடுத்துள்ளனர்.

ஜிவி. பிரகாஷ், விமல் உள்ளிட்டோர் நேரடியாக களத்திற்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.

தமிழக அரசும் ரூ. 1000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மத்திய அரசிடம் நிதியை ஒதுக்கீடு செய்ய கோரியுள்ளது.

இதைத்தொடர்ந்து 2.0 பட தயாரிப்பு நிறுவனமான லைகா கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.1 கோடியே 1 லட்சம் வழங்கியுள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகையை நிவாரண நிதியாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்தவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில் நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சத்துக்கான காசோலை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அஜித்குமார் இதுவரை நிதி வழங்கவில்லை என பலரும் அவரை விமர்சித்தனர். தற்போது அரசு அறிவிப்பு வெளியான பின்னரே இது பலருக்கும் தெரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Ajith contributes Rs 15 lakhs to Gaja cyclone relief

அம்பரீஷ் மறைவு; நெருங்கிய நண்பரை இழந்துவிட்டதாக ரஜினி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் அம்பரிஷ்.

தன்னுடைய முதல் படமான நாகரஹாவு என்ற படத்திலேயே தேசிய விருதை வென்றுள்ளார்.

மேலும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்திலான அமைச்சராக பதவி வகித்தவர் அம்பரீஷ்.

அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அம்பரிஷ் சற்றுமுன் காலமானார்.

அம்பரீஷின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்… “நல்ல மனிதநேயமுள்ளவரும், என் நெருங்கிய நண்பரான அம்பரீஷை இன்று இழந்து விட்டேன். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Rajini condoles the passing away of Actor cum Former Minister Ambareesh

சிவகார்த்திகேயன் படத்தலைப்பு *அசால்ட்*?; புகார் கூறும் பூபதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீமராஜாவை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை ராஜேஷ்.எம் இயக்கி வருகிறார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா, தம்பி ராமய்யா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு தலைப்பு இன்னும் வைக்கப்படவில்லை.

ஆனால் அசால்ட் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பறந்தன. இதனையடுத்து ரசிகர்களும் போஸ்டர்களை டிசைன் செய்து வெளியிட்டனர்.

இந்த தலைப்பை தயாரிப்பு நிறுவனம் மறுக்கவில்லை.

இந்நிலையில் இதே தலைப்பில் ஒரு படம் தயாராகி இயக்குனர் பூபதி ராஜா கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
நான் தற்போது இயக்குனராகி இருக்கிறேன். இதற்கு முன் டான்ஸ் மாஸ்டராக இருந்தேன்.

3 ஆண்டுகளுக்கு முன்பே அசால்ட் என்ற பெயரில் குறும்படம் இயக்கினேன். சிவகார்த்திகேயனும் அந்த படத்தை பார்த்தார்.

தற்போது அதை அசால்ட் குறும்படத்தை திரைப்படமாக எடுத்து வருகிறேன்.

இதில் ஜெய்வந்த், பருத்தி வீரன் சரவணன், செண்ட்ராயன், சோனா நடிக்கிறார்கள். படப்பிடிப்புகள் முடிந்து விட்டது.

படத்தின் தலைப்பை கூட 7 மாதங்களுக்கு முன்பே கில்டில் பதிவு செய்திருக்கிறோம்.

தற்போது அசால்ட் பெயரில் சிவகார்த்திகேயன் படம் உருவாகுவதாக தகவல்களை அறிந்தேன்.

ஆனால் அது படக்குழுவினரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்ற போதிலும் அவர்கள் மௌனம் காப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வெளிப்படையாக கூறினால் நாங்கள் நிம்மதியாக இருப்போம்” என்றார்.

Did Sivakarthikeyan next movie titled Assault

More Articles
Follows