தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் வேலைக்காரன்.
24ஏஎம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளர்.
இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அடுத்த மாதம் செப்டம்பர் 29ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்தது குறித்து நயன்தாரா பேசியுள்ளார்.
வேலைக்காரன் படத்தில் வசனங்கள் பல பக்கங்கள் இருக்கும். ஒரு நாள் இரவு 1-2 மணி இருக்கும். இயக்குனர் அவருக்கு பல பக்கங்கள் கொண்ட வசனங்களை கொடுத்தார்கள்.
ஜஸ்ட் 10 நிமிஷம் வேனும். தரமுடியமா? எனக் கேட்டுவிட்டு படித்துவிட்டு வந்தார்.
வந்தவர் அப்படியே அந்த வசனங்களை பேசி நடித்து முடித்துவிட்டார்.
சத்தியமா 10 நிமிடத்தில் அவ்வளவு வசனங்களையெல்லாம் பேசவே முடியாது, ஆனால் அவர் முடித்து விட்டார். ரொம்ப திறமையானவர்” என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.
Nayanthara praises Sivakarthikeyan dialogue delivery in Velaikkaran movie