தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று மார்ச் 8.. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வருமான வரித்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.
பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவியர், பல்வேறு துறை பெண்கள் என பங்கேற்றனர்.
இந்த பேரணியை நடிகை நயன்தாரா கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இதில் பங்கேற்ற பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தி சென்றனர்.
பேரணி எத்திராஜ் சாலை வழியாக கல்லூரி சாலை வழியாக 5கி.மீ சென்று நுங்கம்பாக்கம் பகுதியில் நிறைவடைந்தது.
Nayanthara participated in Womens safety awareness event on Womens day