சிவகார்த்திகேயனை நம்பி இப்படியாச்சே; ரஜினி-விஜய்யை நம்பும் நயன்தாரா

சிவகார்த்திகேயனை நம்பி இப்படியாச்சே; ரஜினி-விஜய்யை நம்பும் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara in upset with Mr Local result and she believes Rajini and Vijayதென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கி நம்பர் 1 நடிகையாக திகழ்ந்து வருபவர் நயன்தாரா.

டாப் ஹீரோக்கள் முதல் சின்ன ஹீரோக்கள் வரை இவரின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றனர்.

இவரை மட்டுமே நம்பி பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் காத்திருக்கின்றனர்.

இதனிடையில் இவரது நடிப்பில் வெளியான ஐரா மற்றும் மிஸ்டர் லோக்கல் படங்கள் சரியான வெற்றியை பெறவில்லை.

இரண்டிலும் நயன்தாரா நடிப்பு பேசப்பட்டாலும் படத்திற்கு நெகட்டிவ்வான விமர்சனங்களே கிடைத்துள்ளன.

எனவே நயன்தாரா மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது ரஜினியுடன் தர்பார் படத்திலும் விஜய்யுடன் தளபதி 63 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களும் தனக்கு வெற்றியை கொடுக்கும் என காத்திருக்கிறார் இந்த லேடி சூப்பர் ஸ்டார்.

Nayanthara in upset with Mr Local result and she believes Rajini and Vijay

‘தர்பார்’ மரண மாஸ் ஹிட்டாக சூப்பர் ஸ்டார் போட்ட கன்டிசன்

‘தர்பார்’ மரண மாஸ் ஹிட்டாக சூப்பர் ஸ்டார் போட்ட கன்டிசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis condition to Murugadoss for making Darbas as Marana Mass hitரஜினிகாந்தின் பெரும்பாலான படங்களில் அவரது அறிமுக பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியிருப்பார். இந்த அனைத்து பாடல்களும் பெரும் ஹிட்டாகும்.

மேலும் படங்களும் சூப்பர் ஹிட்டானது. இந்த சென்டிமெண்டை ரஜினிகாந்தும் விரும்பினார்.

ஆனால் பாபா படம் முதல் எஸ்.பி.பி-யின் வாய்ஸ் ரஜினி படங்களில் அதிகம் இடம் பெறவில்லை. ரஜினியின் குசேலன், லிங்கா, காலா உள்ளிட்ட சில படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் கடந்த ஜனவரியில் வெளியான பேட்ட படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியிருந்தார்.

எனவே ரஜினிக்கும் இந்த சென்டிமெண்ட் மீது மீண்டும் நம்பிக்கை பிறந்துள்ளதாம்.

அதன்படி தற்போது முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தர்பார் படத்திலும் எஸ்.பி.பி. பாட வேண்டும் என ரஜினிகாந்த் கன்டிசன் போட்டுள்ளராம்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

Rajinis condition to Murugadoss for making Darbas as Marana Mass hit

மூன்று படங்கள் மூலமாக தொடர்ந்து ஆச்சர்யப்படுத்த இருக்கும் சாக்‌ஷி அகர்வால்

மூன்று படங்கள் மூலமாக தொடர்ந்து ஆச்சர்யப்படுத்த இருக்கும் சாக்‌ஷி அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)ஒரு படத்தில் ஒரு நடிகை வந்துபோகும் நேரம் முக்கியம் அல்ல. அவர் ஏற்படுத்திச் செல்லும் பதிவு தான் முக்கியம். தான் நடிக்கும் படங்களில் சிறப்பான பதிவையும் ரசிகர்களின் மனதில் ஒர் அதிர்வையும் ஏற்படுத்திச் செல்லும் வேட்கையோடு கோடம்பாக்கத்தில் அசத்தி வருகிறார் சாக்‌ஷி அகர்வால். இவர் அறிமுகம் தேவை இல்லாத திருமுகம். காலா படத்தில் சிறப்பாக பங்காற்றிய சாக்‌ஷி கையில் இப்போது இருப்பது இரண்டு பெரிய படங்கள். ராய்லட்சுமி நடிப்பில் தயாராகியுள்ள சின்ட்ரெல்லா படத்தில் சாக்‌ஷி அகர்வாலுக்கு முக்கியக் கேரக்டர்.

மேலும் இயக்குநர் எழில் இயக்க ஜீவி பிரகாஷ் நடிக்கும் காமெடி கலந்த ஹாரர் படத்திலும் சாக்‌ஷி அகர்வால் ஒன் ஆப் த ஹீரோயின். ஏற்கெனவே இவர் மலையாளத்தில் பிஜுமேனன் ஜோடியாக நடித்த படம் இவருக்கு பெரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது. கூடுதல் செய்தியாக திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அணீஸ் இயக்கவிருக்கும் புதிய படத்திலும் சாக்‌ஷி அகர்வால் தான் ஹீரோயின். தமிழ்சினிமாவில் இனி சாக்‌ஷி அகர்வாலை தரமான படங்களில் சிறப்பான நடிகையாக காணலாம். இப்படங்கள் குறித்து, சாக்‌ஷி அகர்வால் கூறும்போது,

“ரஜினி சார் சினிமாவில் பெரிய அடையாளம் அவர் படம் மூலமாக எனக்கு ஒரு அடையாளம் வந்தது மகிழ்ச்சி. இப்போது கதையின் நாயகியாக சின்ட்ரெல்லா படத்தில் ராய்லட்சுமியோடு இணைந்து நடித்தது நல்ல அனுபவம். நிச்சயம் அப்படம் என் கரியரில் மைல்கல்லாக அமையும். எழில் சார் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் உடன் நடித்து வரும் ஹாரர் கலந்த காமெடி படமும் எனக்கு வேறோர் தளத்தை அமைத்துத் தரும். நான் அடிப்படையில் தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் எழில் சார் படத்தின் ஆடிஷனில் கேமராமேன் யூ.கே செந்தில் என்னை “இவர் தான் நம் படத்திற்குச் சரியாக இருப்பார்” என்று அழுத்தமாகச் சொன்னார். எழில் சார் நம்மிடம் நமக்கே தெரியாமல் இருக்கும் திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தச் செய்துவிடுவார்.

அவரோடு வேலை செய்வது ஆகப்பெரும் சந்தோஷம். அதேபோல் ஜீவி பிரகாஷ் போல ஒரு ஸ்வீட் மனிதரைப் பார்க்கவே முடியாது. படத்தில் நமக்கான இடத்தை அதிகப்படுத்தி அழகு பார்ப்பார். அவரோடு நடிக்கும் எல்லா நடிகைகளுக்கும் மீண்டும் அவரோடு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும். இயக்குநர் அணீஸ் சாரின் திருமணம் எனும் நிக்காஹ் படம் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாத அழகியல் சினிமா. அவரின் அடுத்தப்படத்தில் நான் ஹீரோயினாக இருப்பது மகிழ்ச்சி. உணர்வுகளை மிகச்சரியான வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தரும் படங்களுக்காக காத்திருக்கிறேன். நிச்சயம் இந்த ஆண்டு எனக்கு தமிழ்சினிமாவில் முக்கியமான ஆண்டாக இருக்கும்” என்றார்.

மேலும் எழில் இயக்கி ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் சாக்‌ஷி அகர்வால் தாவணி கட்டிக்கொண்டு நெல்லைத் தமிழில் பேசி அசத்தி இருக்கிறாராம். இருக்கும் பாஷைகளிலே நெல்லைத் தமிழில் பேசுவது தான் கடினம் என்பார்கள். இதை கமல்ஹாசன் கூட ஒருமுறை பதிவு செய்திருக்கிறார். சாக்‌ஷி அகர்வால் சரளமாக நெல்லைத் தமிழை பேசி இருக்கிறாராம். அவரது ஆற்றலுக்கான ஆதாரங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள் படக்குழுவினர்.

நேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்

நேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஎளிய மக்களின் வாழ்வாதாரத்தை நொடிப்பொழுதிற்குள் நொடித்துப் போட்டது கஜா புயல். புயலின் கோரத்தாண்டவத்தில் வீடிழந்தவர்கள் பலர். அப்படி வீடிழந்த எளிய மனிதர்களுக்கு தன் சார்பாக வீடுகள் கட்டித்தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அறிவித்தது போலவே அந்தப்பணிகளைச் சரியாகச் செய்தும் வருகிறார்.

முதல் வீடு சமூக சேவகர் ஆலங்குடி 515 கணேஷன் என்பவர்க்கு கட்டிக் கொடுத்து சென்றவாரம் தான் கிரகப்பிரவேஷம் நடைபெற்றது. தற்போது வீடிழந்து பெரும் துயரை கண்ட தஞ்சாவூர் மாவட்டதில் உள்ள கரிசைக்காடு கிராமத்தில் வாழ்ந்துவரும் செல்லகுஞ்சி பாட்டிக்கும் வீடு கட்டிக் கொடுத்து பாட்டிக்கு தண்ணீர் கொடுத்த சோகத்தை ஆனந்தக் கண்ணீரால் ஆற்றிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

அன்று பாட்டி வீடிழந்ததும் உலக அளவில் பாட்டியின் நிலைமை பேசப்பட்டது. பல நல்ல உள்ளங்களின் அனுதாபமும், அக்கறையும் லாரன்ஸ் மூலமாக இன்று நிறைவேறியுள்ளது. இன்னும் இந்த மக்கள் பணிகள் தொடரும் என்று கூறுகிறார் ராகவா லாரன்ஸ்.

ரம்ஜான் மாதத்தில் ரிலீஸாகும் பக்ரீத்; விக்ராந்துக்கு ஜோடியாக வசுந்தரா

ரம்ஜான் மாதத்தில் ரிலீஸாகும் பக்ரீத்; விக்ராந்துக்கு ஜோடியாக வசுந்தரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikranths Bakrid set to release on June monthM10 புரொடக்க்ஷன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் தயாரித்து ஜெகதீசன் சுபு இயக்கி விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பக்ரீத்”

ஜெகதீசன் சுபு இயக்கி வரும் இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ஆலங்குருவிகளா என்ற பாடல் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வெளியானது.

தற்போது இப்பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம் ஜுன் மாதம் முதல் வெளியாக இருக்கிறது.

Vikranths Bakrid set to release on June month

மிரட்டல் வில்லனாக களமிறங்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்

மிரட்டல் வில்லனாக களமிறங்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Public Star Durai Sudhakar reveals about his character in Kalavani 2விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘களவாணி 2’ படம் பற்றி சமீபகாலமாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முக்கியமானது படத்தின் மீது விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு போட்டு, தடை பெற்றது தான்.

இயக்குநர் சற்குணத்தின் நடவடிக்கையால் நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்பட்டாலும், ஹீரோ விமலின் பிரச்சினையால் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது.

இதற்கிடையே, சமீபத்தில் விமலும், விநியோகஸ்தரும் சமரசமாக போவதாக, தங்களுக்குள் ஒப்பந்தம் போட்டுக்கொண்டதை தொடர்ந்து ‘களவாணி 2’ பத்தின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், ‘களவாணி 2’ வில் அரசியல் வில்லனாக அதிரடி காட்டியிருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தனது கெட்டப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் சில சிறு முதலீட்டு படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், பிறகு சினிமாவில் ஒரு நடிகராக நிலைத்து நிற்க வேண்டும் என்பதால் கதை தேர்வில் கவனம் செலுத்தியதோடு, சிறு வேடமாக இருந்தாலும், பெயர் சொல்லும் வேடமாக இருப்பதோடு, முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி இயக்குநர்களின் படங்களாக இருக்க வேண்டும் என்று எண்ணியதோடு, அதற்காக காத்திருக்கவும் முடிவு செய்தார்.

அதன்படி, சற்குணம் கண்ணில் பட்டவருக்கு களவாணி 2 படத்தில் மெயின் வில்லன் வேடம் கிடைத்தது. அதுவும் அரசியல்வாதி வேடம். கிடைத்த வேடத்தை சரியாக பயன்படுத்தி, இயக்குநர் சற்குணமிடம் பாராட்டு பெற்றவர் அப்படியே சில முன்னணி இயக்குநர்களின் படங்களில் வாய்ப்பும் பெற்று வருகிறார்.

இருப்பினும் தான் நடிக்கும் படங்கள் குறித்த தகவல்களை இயக்குநரின் அனுமதி இல்லாமல் வெளியே சொல்லாமல் இருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் ‘களவாணி 2’ படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராவதோடு, பிரகாஷ்ராஜ், ரகுவரன் போன்றவர்களின் வரிசையில் அதிரடி வில்லனாகவும் வலம் வர வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

வில்லன், ஹீரோ, குணச்சித்திர வேடமாகட்டும், சிறியதோ, பெறியதோ எந்த வேடமாக இருந்தாலும் மக்கள் மனதில் நிற்கும்படியான வேடமாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன், என்று கூறும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், திடீரென்று தோன்றி திடீரென்று மறையும் நட்சத்திரமாக இல்லாமல், மக்கள் மத்தியில் தொடர்ந்து ஜொலித்துக் கொண்டிருக்கும் மக்களின் நட்சத்திரமாக இருப்பதற்காகவே சினிமாவில் தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறார்.

அப்படி அவர் எடுத்து வைத்த முதல் அடியான ‘களவாணி 2’ படம் மூலம் மக்கள் கொடுத்த ‘பப்ளிக் ஸ்டார்’ என்ற பட்டத்தை போல அவர் மக்கள் மத்தியில் ஜொலிக்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.

Public Star Durai Sudhakar reveals about his character in Kalavani 2

More Articles
Follows