தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பேட்ட படத்தில் சைலண்ட் வில்லனாக நடித்து அனைவரையும் அசத்தியவர் நவாசுதீன் சித்திக்.
அடிச்சது யாரு..? என்று இவர் சட்டை காலரை தூக்கி விட்டு பேசும் காட்சி எவராலும் மறக்க முடியாது.
தற்போது தாக்கரே என்ற ஹிந்தி படத்தில் பால் தாக்கரேவாக நடித்திருக்கிறார்.
அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில் ரஜினி மற்றும் கமல் பற்றி பேசியுள்ளார்.
யாரையும் காப்பி அடித்து நடிக்கக் கூடாது. உண்மையாக நடிக்க வேண்டும்.
என்னுடன் நடித்த நடிகர்களில் தமிழில் ரஜினியையும் விஜய் சேதுபதியையும், பிடித்தது.
ரஜினிகாந்த், எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார். ஆனால் இயக்குனர் சொல்வதை மட்டும்தான் செய்கிறார். இது பெரிய விஷயம்.
கமல் நடிப்பு, ரஜினி நடிப்பு என்று கம்பேர் செய்ய கூடாது. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. கமல் மிகச்சிறந்த நடிகர். அவருடன் ஹேராம் படத்தில், நடித்தேன். ஆனால் அந்த காட்சி படத்தில் இல்லை.
ஆளவந்தான் இந்தியில் டப் செய்யப்பட்ட போது கமலுக்கு இந்தி பயிற்சியாளராக பணிபுரிந்தேன்.
கமலுடன் நடிக்கவேண்டும்”. இவ்வாறு நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.