ரஜினியுடன் மோத பாலிவுட் நடிகரை அழைக்கும் கார்த்திக் சுப்பராஜ்

ரஜினியுடன் மோத பாலிவுட் நடிகரை அழைக்கும் கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nawazuddin-Siddiqui-சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் சுப்பாராஜ்.

இப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் ரஜினிகாந்த்துடன் முதன்முறையாக இணைகிறார் அனிருத்.

சினிமா ஸ்டிரைக் நிறைவு பெற்ற பின் காலா படம் ரிலீஸ் ஆனவுடன் இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார்.

இதற்காக 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ரஜினிக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு மும்பை சென்ற கார்த்திக் சுப்பாராஜ், நவாஸுதீனிடம் கதை சொல்லியதாகவும் அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

50க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் நடித்தவர் நவாஸ்.

மேலும் ‘தலாஷ்’ படத்தில் நடித்தமைக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே ரஜினிக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிப்பார் என தகவல்கள் வந்தன.

ஒருவேளை படத்தில் இரண்டு வில்லன்கள் இருப்பார்களோ? என்ற சந்தேகமும் தற்போது வலுத்துள்ளது.

Nawazuddin Siddiqui will be baddie in Rajini and Karthik Subbaraj movie

சபதம் எடுத்துருக்கேன் அதான் நடிகர் சங்க போராட்டத்தில் கலந்துக்கல.. : பாரதிராஜா

சபதம் எடுத்துருக்கேன் அதான் நடிகர் சங்க போராட்டத்தில் கலந்துக்கல.. : பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bharathi rajaகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழ் திரையுலகினர் நேற்று மவுன அறவழிப் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் திரையுலகை சார்ந்த பல்வேறு கலைஞர்கள் கலந்துக் கொண்டனர்.

ஆனால் இதில் தமிழ் உணர்வாளரும் இயக்குனருமான பாரதிராஜா கலந்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது அதற்கான விளக்கம் கொடுத்தார் பாரதிராஜா.

அவர் கூறியதாவது…

“மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு நடிகர் சங்கம் சென்னை ஒன்றே சினிமாவின் மையமாக இருந்தது.

ஆனால், இன்று எல்லாருமே தனித்தனியாக அவர்களுக்கென அமைப்பு வைத்து பிரிந்து சென்றுவிட்டனர்.

தமிழ்நாட்டில் மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயர் இதுவரை மாற்றப்படவில்லை.

எனவே, இந்தப் பெயரை மாற்றும் வரை அதுசார்ந்த எந்த நிகழ்ச்சிகளிலும் நான் கலந்துகொள்ள மாட்டேன் என்று சபதம் எடுத்திருக்கேன்” என கூறினார்.

ஆப்சென்ட்டான அஜித்தால் அப்செட்டான ரசிகர்கள்; என்னாச்சு தல..?

ஆப்சென்ட்டான அஜித்தால் அப்செட்டான ரசிகர்கள்; என்னாச்சு தல..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithசினிமாவைத் தாண்டியும் நடிகர் அஜித்துக்கு ரசிகர்கள் உள்ளனர்.

அதற்கு காரணம் அவரது உழைப்பு, வளர்ச்சி, நேர்மை, வெளிப்படைத் தன்மை ஆகியவைத்தான்.

ஆனால் சில காலமாக தான் சம்பந்தப்பட்ட துறை சார்ந்தோ விழாக்களிலோ அல்லது தமிழர்களின் நலனுக்காக நடைபெறும் நிகழ்வுகளிலோ அவர் கலந்துக் கொள்ளாமல் இருப்பது அவரது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகம் பல்வேறு பிரச்சினைகளை சநித்து வருகிறது.

ஆனால் எந்தவொரு பிரச்சினைக்கும் அஜித் மௌனம் கலையவில்லை.

ஜல்லிக்கட்டுக்காக நடிகர் சங்கம் போராட்டம் நடத்திய போது கூட ஒன்றும் பேசாமல் கலந்துக் கொண்டு சென்றார்.

அதன்பின்னர் நடிகர் சங்கத்தின் கலை விழா, சங்க கட்டிட பூஜை என எதிலும் கலந்துக் கொள்ளவில்லை.

நடிகர் சங்கத் தேர்தலிலும் அவர் வாக்களிக்க வரவில்லை.

நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்துக் கொண்டே அவர் எதிலும் கலந்துக் கொள்வதிலை.

இவை ஒரு புறம் இருந்தாலும் அவரை வாழவைத்த தமிழக மக்கள் பிரச்சினைகளுக்காக நடைபெறும் போராட்டத்தில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை.

இது மக்கள் மத்தியில் அவர் மீதான வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு விளக்கமளிக்கும் வகையில் ஓர் அறிக்கை கூட அஜித் தரப்பில் இருந்து இதுவரை வெளியாகவில்லை அவரது ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர்.

விஜய்யை ரஜினி இழுக்க தனுஷை இழுத்தார் சிவகார்த்திகேயன்

விஜய்யை ரஜினி இழுக்க தனுஷை இழுத்தார் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Sivakarthikeyan join together at Nadigar Sangam protestகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் தினம் தினம் நடந்து வருகிறது.

மக்களின் பிரச்சினையில் பங்கேற்கும் வண்ணம் நடிகர் சங்கம் மௌன போராட்டத்தை நடத்தியது.

இதில் சிவகுமார், இளையராஜா, எஸ்பி முத்துராமன், வைரமுத்து, கமல், ரஜினி, விஜய், சத்யராஜ், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால், விஜய்சேதுபதி, ஜிவி. பிரகாஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

அப்போது மேடையேறிய பல பிரபலங்கள் ரஜினி, கமலிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

இளையராஜா அருகில் வந்தபோது கமல், ரஜினி ஆகியோர் இணைந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

அப்போது ரஜினி அருகில் இருந்த விஜய்யை அருகில் வர இழுத்தார்.

அப்போது விஜய்க்கு அருகில் நின்று கொண்டிருந்த சிவகார்த்திகேயன் தனக்கு அருகில் அந்த பக்கம் இருந்த தனுஷை இழுத்து விஜய்க்கு அருகில் நிற்க சொன்னார்.

தனுஷ் முதலில் மறுத்தபோதும் அவரை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்தார். உடனே தனுஷ்ம் வந்துவிட்டார். இவர்களுக்கு இடையில் எஸ்ஜே. சூர்யா நின்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் அனைவரும் இணைந்த வண்ணம் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

இதுநாள் வரை தனுஷ்க்கும் சிவகார்த்திகேயனுக்கு உரசல் என சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இந்த காட்சியை பார்த்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்.

Dhanush and Sivakarthikeyan join together at Nadigar Sangam protest

(கீழே உள்ள போட்டோவில் பார்த்தால் தனுஷை சிவகார்த்திகேயன் இழுப்பது தெரியும்..)

nadigar sangam all stars

ஓவரா பேசி அரசியல் செய்பவர்களுக்கு ரஜினி கொடுத்த பதிலடி

ஓவரா பேசி அரசியல் செய்பவர்களுக்கு ரஜினி கொடுத்த பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth slams Loose talk politiciansவிரைவில் தனிக் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரவுள்ள ரஜினிகாந்த் காவிரி விவகாரம், ஸ்டெர்லைட் ஆலை, நடிகர் சங்க போராட்டம் உள்ளிட்டவைகளை குறித்து பேச செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாது…

“நான் நிறைய பேசுவதில்லை. நிறைய பேசி பேசி அரசியல் செய்பவர்களை நாம் பார்த்துவிட்டோம்.

நிறைய பேசுவதால் நிறைய எதிரிகள் உருவாகுகிறார்கள். எனக்கு யாரும் எதிரியில்லை. கமலை எதிரியாக நினைக்கவில்லை.

என் எதிரியெல்லாம் மக்களின் ஏழ்மை கண்ணீர் லஞ்சம்தான்” என்றார் ரஜினிகாந்த்.

Rajinikanth slams Loose talk politicians

நடிகர் சங்க போராட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை..? சிம்பு விளக்கம்

நடிகர் சங்க போராட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை..? சிம்பு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STR aka Simbu clarifies Why he not participated in Nadigar Sangam protestகாவிரி மேலாண்மை அமைப்பதற்கும், ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கும் நடிகர் சங்கம் சார்பில் மவுன போராட்டம் நடைபெற்றது.

இதில் சிம்பு பங்கேற்கவில்லை. அதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது…

நடிகர் சங்க போராட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை. அந்த போராட்டத்தில் பேசி பிரச்சினையை தீர்க்க வேண்டும். ஆனால் அது மௌன போராட்டம்.

மேலும் திரைத்துறையில் பல பிரச்சனைகள் இருக்கும்போது, பிற போராட்டங்களில் பங்கேற்பதில் எனக்கு உடன்பாடில்லை.

ரொம்ப நாளாக தமிழ்நாட்டிற்கு பிரச்சினை மேல் பிரச்சினைகள் வந்துக் கொண்டே இருக்கிறது.

ஒரு பிரச்சினை முடிந்தால் அடுத்த பிரச்சினை ஆரம்பாகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு சூனியம் வைத்தது போல் உள்ளது.

அவர் மரணம் எப்படி நடந்தது? என்று ஆண்டவனுக்குத்தான் தெரியும். அதை முறையாக கண்டுபிடிக்க வேண்டும்.

காவிரியில் வாழ்கிற மக்கள் நிச்சயம் தண்ணீர் தர தயாராக இருப்பார்கள். ஆனால் அந்த மக்களுக்கும் நமக்கும் நடுவில் நிற்கும் அரசியல்வாதிகள்தான் இதை அரசியலாக்கிவிடுகிறார்கள்.

அரசியல்வாதிகள் யாருக்கும் மக்களுக்கு நீர் கிடைக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.” என்று ஆவேசமாக பேசினார்.

STR aka Simbu clarifies Why he not participated in Nadigar Sangam protest

More Articles
Follows