ரஜினிகாந்த் படத்தில் தேசிய விருது பெற்ற 2 கலைஞர்கள்

ரஜினிகாந்த் படத்தில் தேசிய விருது பெற்ற 2 கலைஞர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala posterமோகன் லால் நடித்த ‘புலி முருகன்’ படத்தில் இடம் பெற்ற ஸ்டெண்ட் காட்சிகள்
பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்தளவுக்கு தனது திறமைகளை காட்டி இருந்தார் ஸ்டெண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன்.

அவருக்கு அந்தப் படத்தி்ன் சண்டைகளை வடிவமைத்ததற்காக தேசிய விருது கிடைத்தது.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் ரஜினிகாந்த் படத்திற்கு சண்டை பயிற்சியாளரக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே வெளியான ரஜினிகாந்தின் ‘எந்திரன்’,‘சிவாஜி’,‘கோச்சடையான்’ என சில படங்களுக்கு ஸ்டெண்ட் மாஸ்டராக பீட்டர் பணியாற்றியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் தேசிய விருது வாங்கிய கேமிராமேன் திருநாவுக்கரசு ஏற்கெனவே ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அவருடன் மேலும் ஒரு தேசிய விருது பெற்றவரான பீட்டர் ஹெய்ன்
இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் டிரெஸ் போட வெட்கப்படுகிறேன் என பேசிய நடிகை நிலானி கைது!

போலீஸ் டிரெஸ் போட வெட்கப்படுகிறேன் என பேசிய நடிகை நிலானி கைது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

serial actress nilaniதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீஸ் சீருடை அணிந்து காவல்துறைக்கு எதிராக நிலானி கருத்து தெரிவித்தார்.

சின்னத்திரை நடிகையான நிலானி படப்பிடிப்பின் போது வெளியிட்ட அந்த வீடியோவில்,

“நம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது. 13 பேரை கொன்றுள்ளனர்.

அமைதியான வழியில் போராடுகிறோம். நான் சூட்டிங்கில் இருக்கிறேன். இல்லை என்றால் தூத்துக்குடி சென்று போராட்டத்தில் பங்கேற்றிருப்பேன்.

நான் இந்தக் காவல்துறை உடையை அணிந்திருப்பதற்கு வெட்கப்படுறேன். உடம்பு கூசுது.

இந்தப் போராட்டம் இதோடு முடியப்போவதில்லை. இனிமேல்தான் ஆரம்பம். தமிழர்கள் தீவிரவாதிகள் போல் சுட்டுக்கொன்றுள்ளனர்.

அதுதான் அவர்களின் திட்டம். இலங்கை போல் தமிழகத்திலும் தமிழர்களை கொல்ல திட்டுமிட்டுவிட்டனர்.
அரசு வேலைகளை புறக்கணியுங்கள். விவசாயிகளையும், காவலர்களையும் அரசு மோத வைத்துள்ளது. இதற்கு அரசு பதிலளிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.

இதுதொடர்பாக நிலானி மீது வடபழனி காவல்நிலையத்தில் காவல் உடை அணிந்து மோசடி செய்தல்(419), அவதூறு பரப்புதல்(500), கலவரத்தை உண்டாக்கும் வகையில் பேசுதல்(153) உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் இன்று நடிகை நிலானியை கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நிலானியை வடபழனி போலீசார் கைது செய்தனர்.

Exclusive ரஜினி தங்கிய ரிசார்ட்டுக்கு ரஜினிகாந்த் வில்லா என பெயரிட்ட நிறுவனர்

Exclusive ரஜினி தங்கிய ரிசார்ட்டுக்கு ரஜினிகாந்த் வில்லா என பெயரிட்ட நிறுவனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

The resort where Rajinikanth put up in Kurseong has now named a villa after himகாலா படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

இதன் சூட்டிங் கடந்த ஒரு வாரமாக வங்க தேசத்தில் உள்ள டார்ஜிலிங்கில் நடந்து வருகிறது.

அங்கு ஒரு மாதம் சூட்டிங் நடக்கவிருப்பதால் அங்குள்ள அலீட்டா ஹோட்டல் & ரிசார்ட்டில் 10 நாட்களாக ரஜினி தங்கியிருக்கிறார்.

இதனையடுத்து ரஜினி மேல் கொண்ட அன்பின் காரணமாக அந்த ரிசார்ட்டிற்கு ஹோட்டல் உரிமையாளர் ‘ரஜினிகாந்த் வில்லா # 3’ என பெயரிட்டுள்ளார்.

எங்கள் தலைவர் ரஜினிக்கு மட்டுமே இது போன்ற கௌரவங்கள் தேடி வரும் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

The resort where Rajinikanth put up in Kurseong has now named a villa after him

rajinikanth villa

தரமான தமிழ் படங்களுக்கு மானியம் வழங்கிய முதல்வருக்கு விஷால் நன்றி

தரமான தமிழ் படங்களுக்கு மானியம் வழங்கிய முதல்வருக்கு விஷால் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal thanks letter to Tamilnadu Chief Minister for Subsidy to Tamil moviesகுறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு மானியம் வழங்கும் வகையில் 10 தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலைகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இதற்கு நடிகர் சங்கத்தின் செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஷால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

‘சிறுபட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு 2007 முதல் 2014 வரை வெளியான குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட சமூக கருத்துள்ள திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு 20.06.2018 சென்னை தலைமை செயலகத்தில் ரூ.7 – லட்சம் மானியம் வழங்கி அவர்களை கௌரவித்த மாண்புமிகு. தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், துணை முதல் அமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கும் செய்தித்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் & அனைத்து அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Vishal thanks letter to Tamilnadu Chief Minister for Subsidy to Tamil movies

உலக ரசிகர்களுக்காக ஸ்ருதி தயாரித்த படம் •த மஸ்கிட்டோ பிலாஸபி•

உலக ரசிகர்களுக்காக ஸ்ருதி தயாரித்த படம் •த மஸ்கிட்டோ பிலாஸபி•

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shruti Haasan produced The Mosquito Philosophy by her own banner Isidro Mediaதனது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’என்ற படத்தை தயாரித்து வெளியிடுகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். இதனை ‘லென்ஸ்’ பட புகழ் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.

திரையுலகில் தனக்கென தனியாக ஒரு பாதையை உருவாக்கி, அதில் தன் பாணியிலான பயணத்தைத் மேற்கொண்டு, பல மரபுகளை உடைத்தெறிந்து, புதிய வடிவத்தை உருவாக்கி கலை சேவை செய்து வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன்.

இவரின் வித்தியாசமான தேர்வு தான் லென்ஸ் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். இவரின் இயக்கத்தில் உருவாகும் இந்த ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ என்ற படத்தை தன்னுடைய சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் தயாரித்து வெளியிடுகிறார் ஸ்ருதிஹாசன்.

‘லென்ஸ்’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் ஏராளமான பார்வையாளர்களின் கவனம் ஈர்த்தவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், அத்துடன் இவரது படத்தைப் பார்த்த அனைவரும் இவரின் கதை சொல்லும் பாணியை வெகுவாக ரசித்து பாராட்டினர்.

அதிலும் குறைவான கதாப்பாத்திரங்களை வைத்துக் கொண்டு, தேவையான கருவிகளின் உதவியை மட்டும் பயன்படுத்திக் கொண்டு, எளிமையான பாணியில் கதையை சொல்வதில் தேர்ச்சிப் பெற்றவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

இவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு திரை ஆர்வலர்களிடத்திலும், ரசிகர்களிடத்திலும் ஏற்பட்டிருந்தது. இந்த படத்திலும் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், குறைவான கதாப்பாத்திரங்களைக் கொண்டு உச்சபட்ச எளிமையான கதை சொல்லும் பாணியைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாராம்.

இந்த படத்தின் கதை தமிழில் சொல்லப்பட்டிருந்தாலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் புரிந்துகொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் வகையிலேயே இது படமாக்கப்படவிருக்கிறது.

ஏனெனில் திரைக்கதை, வசனம் மற்றும் குறைந்த பட்ச தொழில்நுட்ப கருவிகளால் ஒரு உண்மையான காட்சியை திரையில் பிரதிபலிக்க முடிவதில்லை.

இந்நிலையில் படத்தைப் பற்றி இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் பேசும் போது,‘ உலகம் முழுவதிலுமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள், தாங்கள் உருவாக்கும் கலை படைப்பை முடிந்தவரை பார்வையாளர்களுக்கு உண்மைக்கு அணுக்கமாக இருக்கும் வகையில் உருவாக்குவதற்காகத்தான் கடினமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’, உண்மையான வாழ்க்கை மற்றும் அதன் உண்மையான நேர விவரத்துடன் கூடிய விவரிப்பாக தயாராகவிருக்கிறது.

இதில் நான்கு நண்பர்களின் கதையின் மூலம் இந்த சமூகம் எப்படி பழங்கால மரபுகளின் வீழ்ச்சியையும், நவீனத்தின் எழுச்சியையும் எதிர்கொள்கிறது என்பதை தங்களுக்குள்ளேயே ஒரு விசாரணையின் மூலம் விவாதித்துக் கொள்கிறது.

அதாவது திரைக்கதை, வசனங்கள் இல்லாமல் சிறிய வழி உரையாடலுடன் கூடிய அடிப்படை யோசனையைப் பற்றிய படமாக படமாக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்தின் தயாரிப்பின் போது, ஒரு படைப்பாளியின் சுதந்திரமான தன்னிச்சையான அதிகாரத்தை உணர முடிந்தது. இதனால் சிறிய தருணங்கள் கூட உண்மையுடன் கூடிய உயிர்ப்புள்ளதாக்கியது.’ என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நிறுவனத்தைப் பற்றி அவர் பேசும் போது,‘ இது எப்படி நடந்தது என்று நினைத்துப் பார்க்கும் போது எனக்கு கனவாகத்தான் தெரிகிறது. நான் சரிகா மேடத்துடன் ஒரு நிமிடம் தான் பேசினேன்.

அவர்கள் என்னுடைய திறமையை உணர்ந்து கொண்டு இந்த நிறுவனத்தில் உடனடியாக வாய்ப்பளித்தார்கள். என்னுடைய திறமை மற்றும் சினிமா பற்றிய என்னுடைய கோணத்தின் தன்மையை நம்பும் ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன்.

உலக சினிமாவின் மொழியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த படைப்பில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதமும் கொள்கிறேன்.

உலகம் முழுவதும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’யை நல்லவிதமாக வரவேற்பார்கள் என்பதை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறோம்.

உலக முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் எமது பயணத்தை பகிர்ந்து கொள்ளவும் காத்திருக்கிறோம்.’ என்றார்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளரான நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில்,‘ எங்கள் நிறுவனமான இஸிட்ரோ, எப்போதும் புதுமையான சுவராசியமான உள்ளடக்கங்களைத்தான் நம்புகிறது.

இது பல்வேறு ஆக்கப்பூர்வமான வடிவங்களைக் கொண்டதாக இருக்கிறது. அத்துடன் உலகத்தரத்திலான கதை சொல்லலையும் இது கொண்டிருக்கிறது. நாங்கள் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ கதையை கேட்டதும், இயக்குநரை பாராட்டினோம்.

அத்துடன் அவரின் முந்தைய படைப்பான லென்ஸை பார்த்து வியந்தோம். எளிய கதைகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்துவதில் அவரின் பார்வையைக் கண்டு ஆச்சரியமடைந்தோம்.

இந்த வழக்கமான சிந்தனை பணிபுரியும் போது சவாலை கொடுக்கும் என்பதால் அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறோம்.

இதனை இசிட்ரோ மூலம் வழங்குவதில் பெருமையடைகிறோம். அவருடன் தொழில் முறையிலான உறவு நீடிக்கும் என்றும் நம்புகிறோம்.’ என்றார்.

Shruti Haasan produced The Mosquito Philosophy by her own banner Isidro Media

அரசியல்.? சினிமா.? விரைவில் பார்த்திபன் தரும் ஆச்சரிய செய்தி.!

அரசியல்.? சினிமா.? விரைவில் பார்த்திபன் தரும் ஆச்சரிய செய்தி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Surprise announcement will be there from Actor Parthiban soonநானும் ரௌடிதான், கேணி உள்ளிட்ட படங்களை தொடர்ந்து பார்த்திபன் நிறைய படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் அளித்துள்ள பேட்டியில் சினிமா மற்றும் தன் அரசியல் பார்வை குறித்து பேசினார்.
அவர் கூறியதாவது…

குப்பத்து ராஜா என்ற படத்தில் வடசென்னை சேரிப்பகுதியில் வாழும் கதாபாத்திரம், திட்டம் போட்டு திருடற கூட்டம் படத்தில் வித்தியாசமான திருடர் கூட்ட தலைவன், துருவ நட்சத்திரம் படத்தில் ஸ்டைலிஷான ஒரு வேடம்.

இந்த மூன்றுமே வேறு வேறு விதமான கதாபாத்திரங்கள்.

இந்த படங்களை அனைத்துமே கடந்த ஆண்டு வெளியாகி இருக்க வேண்டியவை. தாமதம் ஆனதால் கடந்த ஆண்டு எனக்கு படமே இல்லாதது போல் ஆகி விட்டது.

நான் இப்போது சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவதால் இப்போதே அரசியலில்தான் இருக்கிறேன்.

காலம் வரும்போது நிச்சயம் முழுநேர அரசியலுக்கு வருவேன். கட்சி தொடங்குவது முக்கியம் அல்ல. சமூகத்துக்கு அவரவர்கள் பங்களிப்பை இதுபோல தொடர்ந்து செய்தாலே போதும்.

எல்லோருக்கும் ஆச்சர்யமான ஒரு அறிவிப்பு விரைவில் வரும்.” என்று கூறினார்.

ஆனால் அது அரசியலா? அல்லது சினிமா பற்றிய அறிவிப்பா? என்பதுதான் இப்போது குழப்பமாக உள்ளது.

Surprise announcement will be there from Actor Parthiban soon

More Articles
Follows