நமக்கு நாமே குழுவின் சார்பாக அரசு விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் தயாரிப்பாளர் எஸ் விஜயசேகரன் அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த 10 ஆண்டுகளாக பதவி வகித்த நிர்வாகிகள் சரியாக செயல்படாத காரணத்தினால் அனைத்து தயாரிப்பாளர்களும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். மேலும் தயாரிப்பாளர்கள் சந்தித்து வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் விதமாக இனி வரும் தேர்தலில் இதுவரை பதவி வகித்தவர்கள் மீண்டும் பதவிக்கு வராமல் தடுக்க புதியவர்கள் தலைமேயேற்று நல்ல நிர்வாகம் அமைய கலந்துரையாடப்பட்டது.
இந்த சிறப்பு கூட்டத்தில் விஜயசேகரன், எஸ்டி சுரேஷ்குமார், ராமச்சந்திரன் தயாளன், தங்கம் சேகர், திருப்பூர் செல்வராஜ், திருநெல்வேலி ஜெயக்குமார், அமல்ராஜ், தன சண்முக மணி, வெங்கடேஷ் துருவா மற்றும் பல தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். கூடிய விரைவில் அனைத்து தயாரிப்பாளர்களையும் ஒருங்கிணைத்து ஆலோசித்த பிறகு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என்று புதிய அணியினர் தெரிவித்துள்ளனர்.
Namakku Naame team to contest in TFPC election
‘சிங்கம்’ பட ஹீரோவாக தன்னை நினைக்கும் போலீஸ்க்கு மோடி அட்வைஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அண்ணாத்த படத்திற்காக இயக்கி வருகிறார் சிறுத்தை சிவா.
இமான் இசையைமக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது-
இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
இந்தப் படத்தை இந்தாண்டு 2020 தீபாவளிக்கு வெளியிட நினைத்து விறுவிறுப்பாக படத்தை படமாக்கினார் சிவா.
ஆனால் கொரோனா பிரச்சினையால் சூட்டிங் நிறுத்தப்பட்டது.
தற்போது 6 மாதத்திற்கு பிறகு சூட்டிங் நடத்த அரசு அனுமதியளித்துள்ளதால் சென்னையில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
எனவே கிழக்குக் கடற்கரைச் சாலையில் செட் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் ரஜினி இல்லாத காட்சிகளை எடுக்கவிருக்கிறார்களாம்.
அதன்படி கீர்த்தி சுரேஷ் – நயன்தாரா இருவரும் தோன்றும் காட்சிகளை படமாக்கவுள்ளனர்.
அண்ணாத்தே படப்பிடிப்பில் டிசம்பர் அல்லது ஜனவரியில் ரஜினி பங்கேற்பார் என கூறப்படுகிறது.
எல்லாம் திட்டமிட்டப்படி நடந்தால் 2021 கோடை விடுமுறையில் படத்தை வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
இதனிடையில் தன் அரசியல் கட்சி அறிவிப்பு, மதுரை மாநாடு, தமிழகளவில் பிரச்சாரம், தேர்தல் களம் என ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Rajini’s ‘Annaatthe’ To Resume Shooting In december
அடுத்த எம்ஜிஆராக விஜய் போஸ்டர்கள்..; மாஸ்டரை மாட்டி விடும் ரசிகர்கள்
விஜய்யின் ஆரம்ப கால சினிமாக்களில் அடுத்த ரஜினியாக ரஜினியாக சித்தரிக்கப்பட்டு இருந்தார்.
இவன் பாத்தா சின்ன ரஜினிடா என்பது போல பல பாடல் வரிகள் விஜய்க்காக எழுதப்பட்டது. விஜய்யுடம் அவ்வப்போது தலைவர் ரஜினி என புகழ்பாடி வந்தார்.
தற்போது ரஜினிக்கு அடுத்த இடத்தில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் வந்துள்ளார்.
எனவே தற்போது ரஜினியின் புகழ் பாடாமல் நேரடியாக எம்ஜிஆர் புகழ் பாட ஆரம்பித்துவிட்டார்.
மெர்சல் உள்ளிட்ட படங்களில் எம்ஜிஆர் ரசிகராகவே வந்தார் விஜய்.
இதனையடுத்து விஜய் ரசிகர்களும் தளபதியை வாத்தியார் எம்ஜிஆருக்கு அடுத்த இடத்திற்கு கொண்டு செல்ல ஆரம்பித்துவிட்டனர்.
ரஜினி பட வசூலை விஜய் படங்கள் முறியடித்துவிட்டதாக கட்டுக்கதைகளை கட்டி வருகின்றனர்.
அண்மையில் விஜய் சங்கீதா திருமண நாள் வந்தபோது புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி என டிசைன் செய்து போஸ்டர்களை ஒட்டினர்.
தற்போது விஜய்யின் எந்த பட அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனாலும் மாஸ்டர் ஓடிடி ரிலீஸ் வேண்டாம். ஒரே தளபதி தியேட்டர் (OTT) என்றெல்லாம் போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்துவிட்டனர்.
தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் எம்ஜிஆர் போட்டோக்களில் விஜய் முகத்தை வைத்து டிசைன் செய்து போஸ்டர்கள் நாளைய தமிழகமே.. வாத்தி கம்மிங் என்றெல்லாம் போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்துள்ளனர்.
இதை எல்லாம் ஆளும் அதிமுக கட்சி கவனித்து வருகிறதாம்.
பெரும்பாலும் விஜய் படங்களின் ரிலீசின் போது ஏதாவது ஒரு அரசியல் பிரச்சினை வரும்.
விஜய் ரசிகர்கள் செய்வதை பார்த்தால் மாஸ்டர் ரிலீஸ் ஆகும்போது மாஸ்டர் சிக்கலில் மாட்டிக் கொள்வாரோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது.
Posters in Madurai hail Thalapathy Vijay as ‘future leader’