கிரிக்கெட் முதல் புட்பால் வரை; கலை கட்டும் நட்சத்திர கலைவிழா தேதி

கிரிக்கெட் முதல் புட்பால் வரை; கலை கட்டும் நட்சத்திர கலைவிழா தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Ramanaதென்னிந்திய நடிகர் சங்கத்தின் “ நட்சத்திர கலை விழா “ வருகிற ஜனவரி 6 2018 அன்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது !

வருகிற ஜனவரி 6 2018 அன்று மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் கலை நிகழ்ச்சி, நடனம், நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் புகழ்பெற்ற நடிகர்களின் பேச்சு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இது தவிர ஆறு அணிகள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

இந்த கிரிக்கெட் போட்டிக்கு வழக்கம் போல் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம்ரவி, ஜீவா ஆகியோர் தலைமை தாங்குவார்கள். ரஜினி, கமல் உட்பட 100க்கும் மேற்ப்பட்ட நடிகர், நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் மலேசிய நடிகர்கள் பங்கேற்கும் FootBall போட்டி ஒன்றும் நடைபெறவுள்ளது. FootBall போட்டியில் மலேசிய நடிகர்கள் நமது தமிழ் சினிமா நட்சத்திரங்களுடன் மோதவுள்ளனர்.

எதிர்காலத்தில் மலேசிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தமிழ் படங்களில் பணியாற்ற வாய்ப்பு எற்படுத்திதரப்படும். இந்நிகழ்ச்சி மலேசிய அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறவுள்ளது.

சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நட்சத்திர கலை விழா பற்றி அறிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர் சங்க நிர்வாகிகள் கார்த்தி, கருணாஸ் மற்றும் பூச்சி முருகன், மனோபாலா, குட்டி பத்மினி, ரோகிணி, பசுபதி, ரமணா, நந்தா, உதயா, ஹேமசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை அறிவித்தார்கள்.

நடிகர் சங்க நிர்வாகிகள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்து நட்சத்திர விழாவில் கலந்து கொள்ள அழைப்புவிடுத்தனர்.

இவ்விழா மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கின் தலைமையில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.இவ்விழா மலேசிய புக்கிஜாலி அரங்கில் வைத்து நடைபெறவுள்ளது. இதில் 80,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழுக்கி விழுந்தது கீர்த்தி சுரேஷ் இல்லையாம்; படக்குழு விளக்கம்

வழுக்கி விழுந்தது கீர்த்தி சுரேஷ் இல்லையாம்; படக்குழு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

படப்பிடிப்பு சமயத்தில் நடிகை ஒருவர் பாறையில் வழுக்கி விழுவது போன்ற வீடியோ ஒன்று அண்மையில் இணையங்களில் வெளியானது.

அந்த நடிகையின் உடை ‘தொடரி’ படத்தில் கீர்த்தி சுரேஷ் அணிருந்த உடையை போன்று இருந்ததால், கீர்த்திதான் வழுக்கி விழுந்துவிட்டார் என செய்திகள் வெளியானது.

இது குறித்து கீர்த்தி தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

த்ரிவிக்ரம் – பவன்கல்யாண் சூட்டிங்கில் கலந்துக் கொண்டு நடித்து வருகிறார் கீர்த்தி. அந்த வீடியோவில் இருப்பது வேறு ஒரு நடிகை என தெரிவித்துள்ளனர்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட லிண்டா குமார் என்ற நடிகையின் படக்குழுவினர் தெரிவித்துள்ளதாவது…

‘Kunjiramante Kuppayam’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பின் போது லிண்டா குமார் வழுக்கி விழுந்தார்.

அவரை தான் அனைவருமே கீர்த்தி சுரேஷ் என நினைத்து விட்டனர்.

தற்போது லிண்டா குணமாகி வருகிறார் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

linda kumar

வீரா விரித்த காதல் வலையில் விழுந்தது எப்படி..? நமீதா விளக்கம்

வீரா விரித்த காதல் வலையில் விழுந்தது எப்படி..? நமீதா விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress namithaவருகிற நவம்பர் 24-ம் தேதி தயாரிப்பாளர் மற்றும் நடிகர் வீராவை திருமணம் செய்யவுள்ளதாக நடிகை நமீதா ஒரு வீடியோ பதிவொன்றில் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து நமீதா ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதிர் அவர் கூறியதாவது…

அனைவருக்கும் வணக்கம், நானும் வீராவும் வரும் நவம்பர் 24-ம் தேதி திருப்பதி கோயிலில் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் செய்தி உங்களை இந்நேரம் வந்தடைந்திருக்கும்.

வீரா என்னுடைய சிறந்த நண்பர், என் மனதுக்கு இனியவர். அவர் தயாரிப்பாளர் என்பதுடன் ஆர்வமிக்க நடிகர். இந்தத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட காதல் திருமணம்.

எங்கள் சிறந்த நண்பர் சஷிதர் பாபு மூலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது.

நாளடைவில் இருவரும் நல்ல நண்பர்களானோம். செப்டம்பர் 6, 2017-ல் கடற்கரையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எங்களுக்கு இரவு உணவு விருந்து அளிக்கும் போது காதலை வெளிப்படுத்தினார்.

நான் மெய்சிலிர்த்துப் போனேன். ஏனென்றால் நான் இதை எதிர்பார்க்கவேயில்லை. ஆனால், இருவரும் ஒரே வாழ்க்கை லட்சியத்தைப் பகிர்ந்து கொள்கிறோம், இருவரும் ஆன்மிக விழிப்பு பெற்றவர்கள் ஆகிய காரணத்தினால் நான் அவரது இந்த விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்தேன்.

பயணம், மலையேறுதல், இயற்கையை ரசித்தல் என்று இருவருமே அன்பைப் பகிர்ந்து கொண்டோம்.

இருவருக்குமே விலங்குகளை நேசிப்பவர்கள், இருவருக்குமே வாழ்க்கை மீது பெரிய நேசமும் பற்றுதலும் இருக்கிறது. என்னை ஒருவர் அவரது வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தது குறித்து நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக என்னை உணர்ந்தேன்.

இருவருக்குமிடையே ஒளிவு மறைவு கிடையாது. கடந்த 3 மாதங்களாக நான் அவரை நிரம்பவும் புரிந்து கொண்ட பிறகு அவருடன் சேர்ந்து வாழ்வதை இன்னும் கூடுதல் அதிர்ஷ்டமாக உணர்ந்தேன்.

அவரது மென்மையான அக்கறை மற்றும் ஆதரவினால் ஆண்கள் மீதான என் நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது. எனக்கு ஆதரவளித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றிகள், உங்கள் நேசத்தையும் ஆசீர்வாதத்தையும் இருவருமே நாடுகிறோம். நன்றி, கடவுள் உங்களைக் காப்பார்.”

இவ்வாறு நமீதா தெரிவித்துள்ளார்.

சிம்பு பட தோல்வி சர்ச்சைக்கு அஜித் டயலாக்கை பயன்படுத்திய ஆதிக்

சிம்பு பட தோல்வி சர்ச்சைக்கு அஜித் டயலாக்கை பயன்படுத்திய ஆதிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

adhik and STRத்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை தொடர்ந்து சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன்.

இரண்டு பாகங்களாக உருவாகியிருந்த இப்படத்தின் முதல் பார்ட் பெரும் தோல்வியை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து தனது புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

இதனிடையில் தன்னை கலாய்த்து வரும் சிலருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது ட்விட்டர் பக்கத்தில் விவேகம் படத்தில் அஜித் பேசிய வசனத்தை பதிவிட்டு, மீண்டும் எழுந்து வருவேன் என பதிவிட்டுள்ளார்.
இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டனு உன் முன்னாடி நின்னு அலறினாலும், நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும் எங்கயும் எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது. நெவர் எவர் க்வ் அப். முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி. மீண்டும் எழுவேன். என தெரிவித்துள்ளார்.

Adhik Ravichandran‏ @Adhikravi
Indha Ulagame Unnai Ethirthaalum Ella Suzhazhilum Nee Thothutaa Thothutaa Nu Un Munnadi Ninnu Alarnaalum Neeya Oththukura Varaikkum Evanaalum Engayum Eppavum Unna Jaika Mudiyathu Never Ever Give up. Thanks to my back stabbers. I Will Rise. #thankyou

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் வர்மா

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் வர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

varma teamதெலுங்கில் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ‘அர்ஜூன் ரெட்டி’.

இதன் தமிழ் ரீமேக்கை பிரபல இயக்குனர் பாலா இயக்குகிறார்.

இதில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலா இயக்கவுள்ள இப்படத்திற்கு ‘வர்மா’ என பெயரிட்டுள்ளதாக விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை முன்பே வெளியிடவிருந்த விக்ரம், ஒளிப்பதிவாளர் பிரியன் மரணமடைந்துவிட்டதால் தள்ளி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bala directorial Arjun reddy tamil remake titled Varma

மோடி திட்டத்திற்கு எதிர்ப்பு பாடல்; சிம்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

மோடி திட்டத்திற்கு எதிர்ப்பு பாடல்; சிம்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Police protection at Simbu house due to Demonetization Anthem issueகடந்த வருடம் 2016 நவம்பர் 8ஆம் தேதி இரவு ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார் பிரதமர் மோடி.

இவரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சாமானிய மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

எனவே இதனை முன்னிட்டு இந்த வருடம் நவம்பர் 8ல், தட்றோம் தூக்றோம் என்ற படத்தில் உள்ள ஒரு பாடல் இணையத்தில் வெளியானது.

டிமாண்டிசேஷன் ஆந்தம் என்ற பெயரில் இப்பாடல் வெளியானது.

கபிலன் வைரமுத்து எழுதிய இப்பாடலை சிம்பு பாடியிருந்தார்.

இந்த பாட்டில்…

காந்தி நோட்டு ரெண்டு அம்பேலாகி போயாச்சு….
பேங்க ஏடிஎம்மில் அஸ்க்கு புஸ்க்கு ஆயாச்சு…
சோக்கா சொக்கா மாட்டி நடுத்தெருவுக்கு வந்தாச்சு….
காத்து கிடந்த ஜனம் காக்கா கூட்டம் போலாச்சு….

என்ற வரிகளோடு பாடல் தொடங்குகிறது.

மல மலயா மோசம் செஞ்ச மூதேவிங்க பாரின் போயாச்சு (மல்லையா கார்டூன் வருகிறது)

இதனையடுத்து NO CASH NO CASH என்ற கோரஸ் வருகிறது.
ஏழைகள் வீட்டில் இருப்பது எல்லாம் சிவப்பு பணமடா….
குருவி போல சேர்த்த காசு கள்ளம் இல்லடா…
நாட்ட மாத்த வேனுமின்னு நீங்க நினைச்சா?…
கோட்டு போட்ட குண்டர்களின் சங்க புடிங்கடா? என்ற வரிகள் வருகிறது.

(இந்த வரிகள் வரும்போது பிரதமர் மோடி படம் காட்டப்படுகிறது)

எனவே, இப்பாடலுக்கு பாஜக.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பாடலை பாடிய சிம்பு வீட்டை முற்றுகையிட போவதாக செய்திகள் வந்தன.

இதனையடுத்து சிம்பு வீட்டிற்கு தற்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Police protection at Simbu house due to Demonetization Anthem issue

For Song click here

https://www.filmistreet.com/video/thatrom-thookrom/

More Articles
Follows