பழம்பெரும் நடிகர் திரு.டைப்பிஸ்ட் கோபு மற்றும் நடிகை திருமதி.குசல குமாரி மரணம் நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கல்!

பழம்பெரும் நடிகர் திரு.டைப்பிஸ்ட் கோபு மற்றும் நடிகை திருமதி.குசல குமாரி மரணம் நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

typist gopu and kusala kumariபழம்பெரும் நடிகர் திரு.’டைப்பிஸ்ட்’ கோபு (வயது 85) மற்றும் நடிகை திருமதி.குசல குமாரி (வயது 80) நேற்று சென்னையில் காலமானார்கள். அவர்களது மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

“தென்னிந்திய நடிகர் சங்கத்தின்” மதிப்பிற்குரிய மூத்த உறுப்பினர்களும் பழம்பெரும் கலைஞர்களுமான நடிகர் ‘டைப்பிஸ்ட்’ கோபு , நடிகை குசலகுமாரி ஆகியோர் மரணமடைந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.

லால்குடியை சேர்ந்த திரு.கோபலரத்தினம் அவர்கள் 1959-ம் ஆண்டு ‘நெஞ்சே நீ வாழ்க’ என்ற மேடை நாடகத்தில் ‘டைப்பிஸ்ட் கோபு என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது கதாபாத்திரத்தின் பெயரிலேயே பிரபலமானவர். 500க்கும் அதிகமான நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இயக்குனர் சிகரம் திரு.கே.பாலசந்தர் அவர்களால் ‘நாணல்’ என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். மேலும் அவர் திரு.எம்.ஜி.ஆர், திரு.சிவாஜி கணேசன், திரு.ரஜினி, திரு.கமல், திரு.விஜய், திரு.அஜித், திரு.கார்த்தி, திரு.விஷால் என மூன்று தலைமுறையினருடன் நடித்த பெருமைக்குரிய சாதனையாளர்.

திருமதி.குசல குமாரி அவர்கள், 1955-ல் ‘கூண்டுகிளி’ படத்தில் நடிகையாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து பிரபலமானார். ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் இவரது நடிப்பும் நடனமும் மிகவும் பாராட்டு பெற்றது. திரு.எம்ஜிஆர், திரு.சிவாஜி, திரு.பிரேம் நசீர், திரு.என்.டி.ராம்ராவ் ஆகியோர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்.

அவர்களது மரணம் ஈடு கட்ட இயலாத மாபெரும் இழப்பாகும். அவர்களது மறைவால் துயரத்தில் வாடும் குடும்பத்தாரின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவர்களது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.”

# தென்னிந்திய நடிகர் சங்கம்

பிரியாணிக்கு ரூ 3.5 லட்சம் கணக்கு எழுதியவர்கள் என் மீது புகார் சொல்வதா? – ஜாக்குவார் தங்கம்

பிரியாணிக்கு ரூ 3.5 லட்சம் கணக்கு எழுதியவர்கள் என் மீது புகார் சொல்வதா? – ஜாக்குவார் தங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)நமது தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் guild சங்க உண்மையான உறுப்பினர்களுக்கு ஜாகுவார் தங்கத்தின் வணக்கம். நான் ஏன் உண்மையான உறுப்பினர்கள் என்று சொல்கிறேன் என்றால்,
சில நபர்கள் நம்ம சங்கத்தில் கடந்த மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னாள் உறுப்பினராக இருந்து, தங்களுடைய சந்தா தொகையை கட்ட தவறியதால், நமது சங்கத்தில் இருந்து சங்க விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் அடிப்படை உறுப்பினர் என்கிற தகுதியை இழந்து இருக்கிறார்கள்.
இப்படி நமது சங்கத்தில் உறுப்பினரே இல்லாத நிலையில் இவர்கள் வாட்ஸ் ஆப்பிள் நமது உறுப்பினர்களை இணைத்து, ஒரு குரூப்பை ஆரம்பித்து, வாட்ஸ்அப் மெசேஜ், வாய்ஸ் மெசேஜ் மூலமாக நமது சங்கத்தைப் பற்றி நமது உறுப்பினர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் வகையில் சில தவறான பதிவுகளை போட்டு வருகிறார்கள்.
அது என்னவென்றால் நம்முடைய சங்க பதிவு ரத்து ஆகிவிட்டது, அதனால நமது சங்கத்தில் இனி யாரும் பேனர் பதிவு செய்ய வேண்டாம். சென்சார் பண்ண வேண்டாம், டைட்டில் பதிவு செய்ய வேண்டாம், நமது தலைப்புகளை மற்ற சங்கங்கள் எடுத்துக்கொள்வார்கள், இப்படி தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். மேலும் பதிவு அலுவலகத்துக்கு இவர்களே நேரடியாக சென்று நமது சங்கத்தை பதிவிலிருந்து நீக்கி விடுமாறு கூறி வருகின்றனர்.

உண்மை நிலை என்னவென்றால் நமது சங்க பதிவு, கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்காததனால் ரத்து ஆக போகிறது என பதிவுத் துறையில் இருந்து நமக்கு கடிதம் வந்தது. ஏன் இப்படி ஒரு கடிதம் நமக்கு வந்தது என்றால், நாம் கடந்த சில வருடங்களாக நம்முடைய சங்க வரவு செலவு கணக்குகளை சமர்ப்பிக்கவில்லை என்பதுதான். சில உறுப்பினர்கள் சொல்வதுபோல் ஒரு வருடம், இரண்டு வருடம், ஆடிட்டிங் செய்த வரவு செலவை காட்டியிருந்தால் பதிவு ரத்து செய்திருக்க மாட்டார்கள் என்று தவறாக புரிந்துகொண்டு சொல்கிறார்கள். வரவு செலவு கணக்கை நமது சங்க பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் வாங்கிய பிறகுதான் அதை பதிவு துறை ஏற்றுக் கொள்வார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் கடந்த ஏழு எட்டு வருடங்களுக்கு முன் இருந்த நிர்வாகிகள், நமது சங்க பணம் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதை நான் கண்டுபிடித்து கோர்ட்டில் சமர்ப்பித்திருக்கிறேன். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதனால பொதுக்குழு கூட்ட இயலவில்லை.

அதேபோல தற்போது தேர்தல் முடிந்து நிர்வாகத்துக்கு வந்தவர்களில் சிலர் தமிழ்நாடு அரசு வழங்கும் சிறு படத்திற்கான மானிய தொகையை பெற்றுத் தருவதாக கூறி நமது உறுப்பினர்களை ஏமாற்றி பணம் வாங்கி இருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும் சில நிர்வாகிகள் கடந்த நான்கு வருடங்கள் சந்தா கட்டாததனால் அடிப்படை உறுப்பினர் தகுதியை இழந்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் 06.08.2018 அன்று நமது சங்க பொதுக்குழு நடத்துவதற்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பி, பிரசாத் லேபில் பொதுக்குழு நடத்த எல்லா ஏற்பாடும் செய்திருந்த சூழ்நிலையில், எதிர் தரப்பினர் கோர்ட்டுக்கு சென்று ஸ்டே ஆர்டர் வாங்கி, பொதுக்குழுவை நடத்த விடாமல் தடுத்துவிட்டனர்.
இப்படியான ஒரு சூழலில் தற்சமயம் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் மூலமாக நீதியரசர் திரு.ராஜசூர்யா அவர்களை நியமித்து அவர் மூலமாக mediation நடைபெற்று வருகிறது. விரைவில் பொதுக்குழு கூடி வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, பதிவு துறைக்கு அனுப்பி வைத்து விடுவோம், என நானும் மற்ற சில நிர்வாகிகளும் நேரடியாக பதிவு அலுவலர் சந்தித்து, அவரிடம் விளக்கம் சொல்லி, அந்த விளக்க கடிதத்தில் சீல் (பதிவுத் துறையின் அலுவலக முத்திரை) போட்டு வாங்கி வந்திருக்கிறோம். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு விரைவில் general body முடித்து வரவு செலவை தாக்கல் செய்யுங்கள், அது வரைக்கும் உங்கள் சங்க பதிவு ரத்தாகாது, நாங்க வெயிட் பண்ணுகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். இதுதான் நடந்த உண்மை இதைதான். நம்ம சங்கத்து உள்ளே வரமுடியாத சில கறுப்பு ஆடுகள், ஆதங்கத்தில் இப்படி தவறான செய்திகளை பரப்பி நமது உறுப்பினர்களை திசை திருப்பி, பயமுறுத்தி வருகிறார்கள். இவர்கள் சொல்வதை நம்ப வேண்டாம். இவர்களை சட்டப்படி நாம் சந்திக்க இருக்கிறோம்.

எனவே நமது சங்க உண்மையான உறுப்பினர்களிடம் வரும் பொதுக்குழு வரை காத்திருக்க வேண்டுகிறேன். விரைவில் பொதுக்குழு கூடி, வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, நமது சங்க பதிவு சரி செய்யப்படும் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன். நம து சங்கத்தின் மேல் அதிக அக்கறை எனக்கு உள்ளது என்பதை இதன் மூலம் மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

“ லோ பட்ஜெட் டெக்னீஷியன்களின் ஹைவோல்டேஜ் படம் “ நெடுநல்வாடை”

“ லோ பட்ஜெட் டெக்னீஷியன்களின் ஹைவோல்டேஜ் படம் “ நெடுநல்வாடை”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nedunalvaadaiபடத்தின் நாயகன், நாயகி ஆகிய இருவரும் படம் தொடங்கிய பத்தே நாட்களில் எஸ்கேப் ஆனபிறகும் நண்பர்கள் என் மேல் வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையால் இன்று ரிலீஸ் தேதியை நெருங்கி வந்துவிட்டோம்’ என்கிறார் ‘நெடுநல்வாடை’ படத்தின் இயக்குநர் செல்வக்கண்ணன்.

உடன் படித்த 50 நண்பர்களின் பணமுதலீட்டில் தயாரான படம் பி ஸ்டார் புரடக்‌ஷன்ஸின் ‘நெடுநல்வாடை. சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இப்படம் அடுத்த வாரம் மார்ச் 15 அன்று ரிலீஸாகிறது. பிரபல தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் P.மதன் இப்படத்தை ரிலீஸ் உதவி புரிந்து வருகிறார்.

நேற்று பிரசாத் லேப்பில் நடந்த இப்பட ட்ரெயிலர் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் மதன், இணை தயாரிப்பாளர் ஜேம்ஸ் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தமிழில் படங்களுக்கு தலைப்பு வைக்கவேண்டிய அவசியம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து பேசிய காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநரும் ‘நெடுநல்வாடை’ படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்திருப்பவருமான ஐந்துகோவிலான் பேசியபோது,’’ ஒரு தயாரிப்பாளருக்கு படம் இயக்கும்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிடுகிற இந்தக் காலத்தில் 50 தயாரிப்பாளர்களுடன் இணைந்து எந்த வித பிரச்சினையும் இல்லாமல் ஒரு படத்தை எடுத்து முடித்திருப்பதே மிகப்பெரிய சாதனை’ என்றார்.

அடுத்து 50 தயாரிப்பாளர்ளின் சார்பில் பேசிய சுந்தர் கள்ளம் கபடமில்லாமல் படம் குறித்த பல ரகஸியங்களைப் பகிர்ந்துகொண்டது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக துவக்கத்தில் படத்தில் ஒரு வாரம் நடித்துவிட்டு நடிகர் அபிசரவணனுடன் ஓடிப்போன அதிதி மேனன் குறித்த பஞ்சாயத்துகளை மேடையிலேயே போட்டு உடைத்தார். ‘படம் எடுக்க முன்வந்தபோது நாங்கள் நினைத்த பட்ஜெட்டை விட பல மடங்கு தாண்டிவிட்டது. ஆனாலும் நண்பர் செல்வக்கண்ணன் எவ்வளவு நேர்மையானவர் என்பது எங்களுக்குத் தெரியும் என்பதால் எதையும் பொருட்படுத்தாமல் நாங்கள் தொடர்ந்து செலவு செய்து இப்படத்தை முடித்தோம். இப்போதும் கூட இந்தப் படத்திலிருந்து ஒரு பைசா கூட திரும்பி வராவிட்டாலும் இயக்குநர் மீது எங்களுக்கு இருக்கும் ப்ரியங்களும் நட்பும் அப்படியே இருக்கும்’ என்றார்.

எஸ்கேப் ஆர்டிஸ்டின் தயாரிப்பாளர் மதன் பேசும்போது,’இன்றைய தேதியில் நண்பர்கள் இப்படி ஒரு காரியத்தில் இறங்கியிருப்பது வியப்பளிப்பதாக இருக்கிறது. இவ்வளவு பிரச்சினைகளையும் மீறி மிகவும் தரமான படமாக ‘நெடுநல்வாடையை செல்வக்கண்ணன் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்த அந்த 50 நண்பர்களுக்கும் கண்ணன் வாழ்நாள் முழுக்கக் கடன்பட்டிருக்கிறார்’ என்றார்.

அடுத்து நன்றி உரையாற்றிய இயக்குநர் செல்வக்கண்ணன்,’ இந்தப் படம் எத்தனையோ முறை டிராப் ஆகவேண்டியது. ஆனால் நடந்த உண்மைகள் எதையும் மறைக்காமல் பிரச்சினைகள் அத்தனையையும் நண்பர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பிக்கொண்டே இருந்தேன். அவர்களுக்கு பிராக்டிக்கலான சினிமா குறித்து எதுவுமே தெரியாதென்றாலும் நான் பொய் சொல்லவில்லை என்ற ஒரே காரணத்துக்காக தொடர்ந்து உதவி படத்தை முடிக்க உதவினார்கள். நல்ல படங்களை ரசிகர்கள் ஒருநாளும் கைவிட்டதில்லை என்ற நம்பிக்கையில் மிகவும் தரமான ஒரு படத்தை நல்ல டெக்னீஷியன்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறேன். ‘நெடுநல்வாடை’ லோ பட்ஜெட் டெக்னீஷியன்களின் ஹைவோல்டேஜ் படம் என்றார்.

முக்கிய கதாபாத்திரங்கள் :

பூ ராமு,இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி, ஐந்து கோவிலான், செந்தி.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

தயாரிப்பு : பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ்

இயக்குநர் : செல்வகண்ணன்

இசை : ஜோஸ் ஃபிராங்க்ளின்

ஒளிப்பதிவு : வினோத் ரத்தினசாமி

பாடல்கள் : கவிப்பேரரசு வைரமுத்து

படத்தொகுப்பு : மு.காசிவிஸ்வநாதன்

கலை : விஜய் தென்னரசு

சண்டை பயிற்சி : ராம்போ விமல்

நடனம் : தினா, சதீஷ்போஸ்

மக்கள் தொடர்பு : மணவை புவன்.

நந்திதா ஸ்வேதா நடிக்கும் IPC 376

நந்திதா ஸ்வேதா நடிக்கும் IPC 376

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nandita swethaஇது த்ரில்லர் படம். சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன், காமெடி எல்லாம் கலந்த கமர்ஷியல் கதை. நந்திதா ஸ்வேதா முதன் முறையாக ஆக்சன் கதாநாயகியாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார். படம் முழுக்க ஆக்‌ஷன் நிரம்பியிருக்கும்.சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் ஆக்‌ஷன் கோரியோகிராஃபி பண்ணுகிறார்.படத்தில் வித்தியாசமான ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.இது ஹீரோக்கள் பண்ண வேண்டிய கதை. ஆனா ஹீரோக்கள் பண்ண முடியாத கதை.இப்ப சமூக வலைதளங்கள்தான் பரபரப்பா இயங்கிக்கிட்டிருக்காங்க.டைட்டிலை வலைதளத்தில் தேடும்போதே இது எது சம்பந்தமான கதை என்பதை யூகித்து விடுவார்கள்.ஆனால் என்ன கதை என்பதை யூகிக்க முடியாது.பெண்களை இழிவுபடுத்தி வந்துகொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் இது பெண்கள் கொண்டாட வேண்டிய படமாக இருக்கும்.

த்ரில்லர், சஸ்பென்ஸ் என்பதையும் தாண்டி யூகிக்க முடியாத இன்னொரு விஷயமும் படத்தில் ஹைலைட்டாக இருக்கும்.பிரபுசாலமன், பாலசேகரன் போன்ற இயக்குநர்களிடம் பல படங்களில் பல மொழிகளில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ராம்குமார் சுப்பாராமன் படத்தை இயக்குகிறார்.தகராறு, அண்ணாத்துரை படங்களின் ஒளிப்பதிவாளர் k. தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.கோலமாவு கோகிலா படத்தின் எடிட்டர் R. நிர்மல் படத் தொகுப்பைக் கவனிக்கிறார்.

படத்தின் தயாரிப்பாளர் S. பிரபாகர் பிரபல விநியோகஸ்தர்.96, ஜூங்கா, பென்சில் போன்ற பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்தவர். டிஸ்ட்ரிபியூட்டர் மற்றுமல்லாது எக்ஸிபிட்டரும்கூட. பல தியேட்டர்களை நடத்தி வருகிறார். இயக்குநர் சொன்ன கதையை நம்பி தயாரிப்பாளராக களமிறங்குகிறார்.அவர் முதல்முறையாக தமிழ் தெலுங்கில் தயாரிக்கும் பைலிங்குவல் படம் இது.

THANKS & REGARDS,

எந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர் சேத்தன்!

எந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர் சேத்தன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chetan‘மர்மதேசம் ‘தொடரில் அவர் ஏற்று நடித்த பாத்திரம் தூரதேசம் முதல் தூந்திரப் பிரதேசம் வரை அடைந்து பாதிப்பை ஏற்படுத்தியது .
சேத்தன் தன் ராஜாங்கத்தைப் பெரிய திரையிலும் விரிவாக்க விரும்பினார்.’தாம் தூம்’ படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு ,கன்னடம் என்று 50 படங்கள் முடித்துவிட்டார்.இருந்தாலும் அவருக்குள் ஓர் ஏக்கம் உள்ளது. அவரை ஒரு வட்டத்தில் அடக்க நினைக்கிறது திரையுலகம். ஆனால் காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி என்கிற கனவுடையவர் சேத்தன்.

இதோ அவரே பேசுகிறார்.
“நான் டிவியில் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருந்த போது என்னை வலைவீசித் தேடி வாய்ப்பு கொடுத்தவர் ஜீவா சார் தான். அந்தப் படம் ‘தாம் தூம்’ . அதில் கதாநாயகனின் மாமா பாத்திரம். அப்போது என் டைமிங் முக பாவனைகளைப் பார்த்து உங்களுக்கு காமெடி நல்லா வரும் போல இருக்கே? என்றார்.ஆமாம் சார் அப்புறம் ஏன் சார் என்னை சீரியசாக் காட்ட முயற்சி செய்கிறீர்கள் என்றேன். அதுக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. ‘மர்மதேசம்’ தொடர் செய்து வச்சிருக்கிற வேலை இது. என்றார். அந்தளவுக்கு ‘மர்மதேசம்’ தொடர் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அடிப்படையில் எனக்கு நகைச்சுவையுணர்வு அதிகம் உண்டு. ஆனால் சொன்னால் யாரும் இதை நம்ப மாட்டேன் என்கிறார்கள்.

நான் முதலில் ஒப்பந்தமான படம் ‘தாம் தூம்’ என்றாலும் முதலில் வெளியான படம்’ பொல்லாதவன்’. அதன் பிறகு நிறைய படங்கள் .
நான் நடித்தவற்றில் குறிப்பிட்டுப் பெருமைப்பட வைத்த படம் Revelations. இது நான் நடித்து 2016 ல் வெளிவந்தது.இந்தப் படம் மும்பை, கல்கத்தா, புனே என்று பல வெளியூர்களில் திரையிப்பட்டு பலரின் பாராட்டுகளைப் பெற்று நான் மகிழ்ந்த திரைப்படம் என்பேன்,

கடைசியாக வந்த படம் ‘தமிழ்ப்படம் . 2. ‘அதே இயக்குநர் சி.எஸ்.அமுதனின் ரெண்டாவது படம் என்ற படத்திலும் நடித்தேன். எனக்கு காமெடியும் வரும் என்று கண்டு கொண்டவர்.
.
எனக்கு பாசிடிவ் நெகடிவ் காமெடி என எல்லா கேரக்டரும் செய்ய ஆசை. எந்த ஒரு வட்டத்திலும் சிக்கிக் கொள்ள விருப்பம் இல்லை. இந்த விஷயத்தில் எனக்கு நாசர் சார் தான் முன்னோடி. அவர் எல்லாமும் ஏற்று நடிப்பார். எந்த வட்டத்திலும் சிக்காததால்தான் அவரால் காலம் கடந்து நிற்க முடிகிறது.
நானும் அவர் வழியில் செல்ல விரும்புகிறேன்.” என்கிறார்.

இவரது மனைவி தேவதர்ஷினி மகள் என எல்லாருமே நடிக்கிறார்களே..?

” என் மனைவி தமிழ் தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மகள்’ 96′ படத்தில் நடித்தார். இப்போது 10 ஆம் வகுப்பு படிப்பதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டி யிருக்கிறது. பிறகு பார்க்கலாம் என்று இருக்கிறோம். சினிமா வே குடும்பம். குடும்பமே சினிமா என்றிருக்கிறோம்.” என்கிற சேத்தன் இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப் படத்தில் பாரதிராஜா , சசிகுமாரு டன் நடிக்கிறார். சி.வி.குமார் தயாரிப்பில் இரண்டு பபங்கள் உள்பட 5 புதிய படங்களில் நடித்து வருகிறார்.

14 வருடங்களுக்கு பிறகு தனுஷ்-சினேகா இணையும் படம் தொடங்கியது

14 வருடங்களுக்கு பிறகு தனுஷ்-சினேகா இணையும் படம் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

snehaசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான `எதிர்நீச்சல்’, `காக்கிச்சட்டை’ ஆகிய படங்களை தனுஷ் தயாரித்தார்.

இப்படத்தை ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.

இதன்பின்னர் தனுஷ் டபுள் கேரக்டரில் நடித்த `கொடி’ படத்தையும் இயக்கினார்.

தற்போது மீண்டும்தனுஷ் நடிக்கவுள்ள படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு தனுஷ் 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் அப்பா மற்றும் மகனாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முக்கியக் கதாபாத்திரத்தில் சினேகா நடிக்கவிருக்கிறார். மேலும் ஒரு புதுமுக நடிகையும் நடிக்கவுள்ளார்.

`புதுப்பேட்டை’ படத்துக்குப் 14 வருடங்கள் கழித்து தனுஷ்-சினேகா ஜோடி இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யஜோதி றிறுவனம் இப்படத்தை தயாரிக்க விவேக்-மெர்வின் இருவரும் இசையமைக்கின்றனர்.

More Articles
Follows