தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் படம் ‘லியோ’.
இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
இதில் விஜய்யுடன் த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூரலிகான் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தப் படப்பிடிப்பில் தனக்கான காட்சிகளை முடித்து விட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார் மிஷ்கின்.
தனது பட அனுபவங்களை கடிதம் போல எழுதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில்…
காஷ்மீரில் ‘லியோ’ படப்பிடிப்பு நடைபெற்றது. என் காட்சிகளை முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பி உள்ளேன்.. மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.. சண்டைக் காட்சிகளை அன்பறிவு இயக்கினர்.. ஒட்டுமொத்த பட குழுவும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறது..
தயாரிப்பாளர் லலித் குமார் ஒரு சகத் தொழிலாளி போல படப்பிடிப்பில் உழைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு தேர்ச்சி மிகு இயக்குனராக லோகேஷ் உழைக்கிறார்.
எனது காட்சிகளை முடித்துபின் லோகேஷுக்கு முத்தமிட்டு வாழ்த்தினேன்.. ஷூட்டிங் தளத்தில் விஜய் பண்பாக நடந்து கொண்டார்.. லியோ படம் மிகப்பெரிய வெற்றி பெறும்” என தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார் மிஷ்கின்.
Mysskin wraps up Leo shoot, says ‘happy to have worked with team’