‘லியோ’ சூட்டிங் ஓவர்..; விஜய் – லோகேஷூக்கு மிஷ்கின் திடீர் கடிதம்

‘லியோ’ சூட்டிங் ஓவர்..; விஜய் – லோகேஷூக்கு மிஷ்கின் திடீர் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் படம் ‘லியோ’.

இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இதில் விஜய்யுடன் த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூரலிகான் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படப்பிடிப்பில் தனக்கான காட்சிகளை முடித்து விட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார் மிஷ்கின்.

தனது பட அனுபவங்களை கடிதம் போல எழுதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில்…

காஷ்மீரில் ‘லியோ’ படப்பிடிப்பு நடைபெற்றது. என் காட்சிகளை முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பி உள்ளேன்.. மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.. சண்டைக் காட்சிகளை அன்பறிவு இயக்கினர்.. ஒட்டுமொத்த பட குழுவும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறது..

தயாரிப்பாளர் லலித் குமார் ஒரு சகத் தொழிலாளி போல படப்பிடிப்பில் உழைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு தேர்ச்சி மிகு இயக்குனராக லோகேஷ் உழைக்கிறார்.

எனது காட்சிகளை முடித்துபின் லோகேஷுக்கு முத்தமிட்டு வாழ்த்தினேன்.. ஷூட்டிங் தளத்தில் விஜய் பண்பாக நடந்து கொண்டார்.. லியோ படம் மிகப்பெரிய வெற்றி பெறும்” என தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார் மிஷ்கின்.

Mysskin wraps up Leo shoot, says ‘happy to have worked with team’

விஜய்யின் ‘லியோ’ பட சூட்டிங்கில் கௌதம் வாசுதேவ் மேனன் கொண்டாட்டம்

விஜய்யின் ‘லியோ’ பட சூட்டிங்கில் கௌதம் வாசுதேவ் மேனன் கொண்டாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் படம் ‘லியோ’.

இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இதில் விஜய்யுடன் த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூரலிகான் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் கௌதம் மேனன் தன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தில் கௌதம் உடன் லோகேஷ் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளனர்.. இந்த படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் விஜய் மற்றும் திரிஷா ஆகியோர் இருக்கும் மற்றொரு ‘லியோ’ புகைப்படமும் இணையத்தில் தற்போது உலா வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Gautham Menon celebrates his birthday at leo shooting

முதல் படம் ரிலீசாவதற்குள் உயிரிழந்த 32 வயதான மனு.; அதிர்ச்சியில் திரையுலகம்.!

முதல் படம் ரிலீசாவதற்குள் உயிரிழந்த 32 வயதான மனு.; அதிர்ச்சியில் திரையுலகம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மனு ஜேம்ஸ்.

இவர் தற்போது தனது கனவு திரைப்படமான ‘நான்சி ராணி’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இதில் அஹானா கிருஷ்ணா நாயகியாக நடிக்க சன்னி வெய்ன், அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இதன் படப்பிடிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வந்தார் இயக்குநர் ஜோசப் மனு ஜேம்ஸ்.

தன் முதல் படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டு இருந்த நிலையில் மஞ்சள் காமாலை நோய் காரணமாக மனு ஜேம்ஸ் உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களாக கேரளாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மனு ஜேம்ஸ் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வயது 32 ஆகிறது.

கூடுதல் தகவல்…

கடந்த 2004ல் குழந்தை நட்சத்திரமாக ஐ எம் க்யூரியஸ்’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் மனு ஜேம்ஸ்.

Director Manu James dies days before release of his first film

‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கும் 7 வில்லன்கள் இவர்களா ?

‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கும் 7 வில்லன்கள் இவர்களா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கமல் ஏழு வில்லன்களை எதிர்கொள்ளும் உயர் அதிரடி காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், மாரிமுத்து, வெண்ணிலா கிஷோர், சிவாஜி குருவாயூர் ஆகியோர் நெகட்டிவ் ரோல்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

The 7 villains of Kamal Haasan in ‘Indian 2’ revealed

எல்லா கொலைக்கும் காரணமிருக்கு.. என் கொலைக்கு.!? மிரட்டும் உதயநிதி டிரைலர்

எல்லா கொலைக்கும் காரணமிருக்கு.. என் கொலைக்கு.!? மிரட்டும் உதயநிதி டிரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கலகத் தலைவன்’ படத்தை தொடர்ந்து உதயநிதி நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ‘கண்ணை நம்பாதே’.

இப்படத்தை ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு.மாறன் என்பவர் இயக்கி இருக்கிறார்.

இதில் பிரசன்னா, ஸ்ரீகாந்த், ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, வசுந்தரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சித்துக்குமார் இசையமைக்க ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் தயாரித்துள்ளார்.

க்ரைம் த்ரில்லராக உருவான ‘கண்ணை நம்பாதே’ படம் மார்ச் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலலர் இன்று மாலை வெளியானது.

இந்த ட்ரைலரில்…

#KannaiNambathe most awaited trailer is here …

@RedGiantMovies_
@Udhaystalin
@mumaran1
@im_aathmika
@Prasanna_actor
@bhumikachawlat
@Act_Srikanth
@actorsathish
@SubikshaOffl
@ivasuuu
@JalandharVasan
@Music_Siddhu
@Sanlokesh
@stuntsaravanan
@DoneChannel1

Udhayanidhi’s kannai Nambathe trailer goes viral

‘பிச்சைக்காரன்’ அம்மா நிஜ தொழில் அதிபராக மாறியது எப்படி ?

‘பிச்சைக்காரன்’ அம்மா நிஜ தொழில் அதிபராக மாறியது எப்படி ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அருணாச்சலம்’ படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானவர் நடிகை தீபா ராமானுஜம். பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனியின் பெரும் பணக்கார அம்மாவாக நடித்துள்ளார்.

2019-க்குப் பிறகு எந்தப் படத்திலும் தோன்றாத தீபா, 2020-ல் பெண்களுக்கான ஜீன்ஸ் பிராண்டைத் தொடங்கி தொழிலதிபராக மாறியுள்ளார். அந்த வணிகம் லாபகரமாக மாறியதால், அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்குச் சென்று கிளை ஒன்றைத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் தீபாவைப் பின்தொடரும் ரசிகர்கள், மாடர்ன் உடையில் அவரைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள்.

‘Pichaikkaran’ actress Dheepa Ramanujam turns a successful business woman in real life

More Articles
Follows