நிவின்பாலி-அஞ்சலி கூட்டணியில் சூரி..; மிஷ்கின் திடீர் விசிட்

நிவின்பாலி-அஞ்சலி கூட்டணியில் சூரி..; மிஷ்கின் திடீர் விசிட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து சூப்பர் ஹிட்டான ’மாநாடு’ படத்தை தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி.

இவர் மாநாடு ரிலீசுக்கு முன்பே தன் பட தயாரிப்பு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

தற்போது சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.

இதில் நிவின்பாலி மற்றும் அஞ்சலி ஜோடியாக நடித்து வருகின்றனர்.

யுவன் இசையமைத்து வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் முக்கிய காட்சிக்காக ரயில் செட் ஒன்று போடப்பட்டுள்ளதாம்.

முக்கிய வேடத்தில் சூரி இந்த படத்தில் இணைந்துள்ளார்.

தற்போது நிவின்பாலி மற்றும் சூரி நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் ராம்.

இந்த நிலையில் இப்பட சூட்டிங் ஸ்பாட்டை இயக்குனர் மிஷ்கின் விசிட் செய்துள்ளார்.

அந்த படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Mysskin surprise visits to Director Ram – Nivin Pauly new film sets

சூர்யா தயாரிப்பில் மீண்டும் ஜோதிகா..; இயக்குனர் இவரா..?

சூர்யா தயாரிப்பில் மீண்டும் ஜோதிகா..; இயக்குனர் இவரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் மனைவி ஜோதிகா ரீஎன்ட்ரீ ஆனது முதல் அவர் நடிக்கும் படங்களை சூர்யா தயாரித்து வருகிறார்.

அண்மையில் ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் ஜோதிகா நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்து தகவல்கள் வந்துள்ளன.

இந்த படத்தை ’கண்ட நாள் முதல்’ மற்றும் ’கண்ணாம்பூச்சி ஏனடா’ ஆகிய படங்களை இயக்கிய பெண் இயக்குனர் பிரியா இயக்கவிருக்கிறாராம்.

இந்த திரைப்படத்தையும் சூர்யா – ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Suriya to produce new film with Jyothika

ராஜமௌலியால் வந்த பிரச்சினை.; சிவகார்த்திகேயன் பட ரிலீசில் சிக்கல்

ராஜமௌலியால் வந்த பிரச்சினை.; சிவகார்த்திகேயன் பட ரிலீசில் சிக்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள படம் ‘டான்’.

இந்த திரைப்படம் மார்ச் மாதம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது.

இதன் பின்னர் கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ படமும் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என ராஜமௌலி அறிவித்தார்.

டான் படத்தை சிவகார்த்திகேயனுடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

அதே சமயம் ராஜமௌலி இயக்கியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

‘ஆர்ஆர்ஆர்’ படம் பான் இந்தியா படம். மேலும் இது ராஜமௌலியின் படம் என்பதால் உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த சமயத்தில் தமிழகளவில் டான் வெளியானால் கூட மிகவும் குறைவான தியேட்டர்களே கிடைக்கும்.

அத்துடன் லைகா-வின் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் டான் படத்தின் லாபம் பெரியளவில் பாதிக்கப்படும்.

எனவே ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு வழிவிடுவதை தவிர டான் படக்குழுவுக்கு வேறு வழியில்லை.

எனவே டான் படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Sivakarthikeyan’s Don may be postponed due to RRR release

‘வலிமை’ ரிலீசுக்காக வலியுடன் காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்.. 24 தேதி டார்கெட்.?

‘வலிமை’ ரிலீசுக்காக வலியுடன் காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்.. 24 தேதி டார்கெட்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவான படம் ‘வலிமை’.

யுவன் இசையமைத்துள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

இதில் நாயகியாக ஹியூமா குரேஷி, வில்லனாக கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தாண்டு 2022 ஜனவரி 13ல் பொங்கலுக்கு தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த சமயம் கொரோனா பரவல் அதிகரிப்பால் ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது பிப்ரவரி 1 முதல் 1 வகுப்புகளே தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

ஆனாலும் வலிமை ரிலீஸ் அப்டேட் பற்றி எதுவும் வெளியாகவில்லை. இதனால் எங்களை வலியை படக்குழு புரிந்து கொள்ள வேண்டும் என அஜித் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் பிப்ரவரி 24 வியாழக்கிழமை படம் ரிலீசாக அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே விரைவில் அறிவிப்பு வெளியாகலாம். அதுவரை காத்திருங்கள் ரசிகர்களே…

Looks like Ajith Kumar starrer Valimai is getting ready to hit the screen on February 24

தேர்தல் களம்.; கண்டுக்கொள்ளாத விஜய்.. வேட்பாளர்கள் & ரசிகர்கள் டென்ஷன்

தேர்தல் களம்.; கண்டுக்கொள்ளாத விஜய்.. வேட்பாளர்கள் & ரசிகர்கள் டென்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் ஒரு பக்கம் சினிமாவில் பிசியாக இருந்தாலும் மற்றொரு புறம் தமிழக அரசியலில் தனக்கு அரசியல் பிரவேசத்துக்கு முன்னோட்டம் பார்த்து வருகிறார்.

கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்டவர்களில் 120க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றனர்.

தற்போது பிப்ரவரியில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தன் மக்கள் இயக்கத்தினரை போட்டியிட அனுமதித்துள்ளார் நடிகர் விஜய்.

தன் புகைப்படம் மற்றும் கொடியை பயன்படுத்த அனுமதித்துள்ளார்.

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுவாக ஆட்டோ சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் அவர்கள் கேட்ட ஆட்டோ சின்னத்தை கொடுக்க மறுத்துள்ளது ஆணையம்.

அந்த விளக்கத்தில்.. “இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளுக்கு மட்டுமே பொதுவான சின்னம் வழங்கப்படும். விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக இதுவரை பதிவு செய்யப்படவில்லை.

எனவே பொது சின்னமாக ஆட்டோ சின்னத்தை வழங்க முடியாது என தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம். இந்த செய்தியை நம் FILMISTREET தளத்தில் ஜனவரி 29ல் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் பணிகளை வேட்பாளர்கள் தொடங்கியுள்ளனர்.

பொது சின்னம் கிடைக்காத காரணத்தினால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுயேச்சையாக களமிறங்குகின்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.

தங்கள் இயக்க ‘அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை விஜய் அறிவிப்பார்’ என விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலர் ஆனந்த் தெரிவித்து இருந்தும் அதிகாரப்பூர்வ பட்டியல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் வேட்பாளர்களும் ரசிகர்களும் டென்ஷனில் உள்ளனர்.

Vijay silence makes his fans angry

அசிங்கமா பதிவிட்ட அஸ்வின்..; மீண்டும் கிளம்பியது சர்ச்சை

அசிங்கமா பதிவிட்ட அஸ்வின்..; மீண்டும் கிளம்பியது சர்ச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் அஸ்வின்.

இதனையடுத்து பல ஆல்பங்களில் அவருக்கு சான்ஸ் வந்தன. அனைத்தும் ஹிட்டாகியது.

எனவே சினிமா வாய்ப்புகளும் அஸ்வினுக்கு வரத்தொடங்கியது.

இவர் நாயகனாக நடித்த என்ன சொல்லப் போகிறாய் படம் அண்மையில் வெளியாகியது. ‘

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் ஓவராக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் உறங்கிவிடுவேன். நான் 40 இயக்குனர்களிடம் கதை கேட்டேன். அவை பிடிக்கவில்லை எனவே தூங்கி விட்டேன்.

நான் அழகாக இருப்பதாக நினைத்தால் என் பெற்றோருக்கு நன்றி சொல்லுங்கள் என் ஏதோ உளறிவிட்டார்.

அவரது இந்த பேச்சு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால்தான் படத்தின ரிலீசும் நீண்ட நாட்கள் தாமதம் ஆனது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சர்ச்சையான கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில்… ’பழிவாங்குவதா? நான் மிகவும் சோம்பேறி, நான் இங்கேயே உட்கார்ந்து கொள்கிறேன், கர்மா உன்னை…. F…. ’ என்று பதிவு செய்துள்ளார்.

ஆங்கில வார்த்தையின் அந்த முதல் எழுத்தை பார்க்கும்போதே அது ஏதோ கெட்ட வார்த்தையை குறிப்பதாக உள்ளது.

அந்த வார்த்தை முழுதாக தெரியாதபடி அழித்து இருக்கிறார்..

இந்த மோசமான வார்த்தையை அஸ்வின் ஏன் பயன்படுத்தினார்? இவருக்கு இது தேவையா என நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

Ashwin recent insta post creates controversy

More Articles
Follows