ஸ்டண்ட் கலைஞர்களுக்கு உதவ தயார்; எம்ஜிஆர் வழியில் ரஜினி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமா மற்றும் டிவி ஸ்டண்ட் கலைஞர்கள் பொன்விழா (1966 – 2017) நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் ரஜினிகாந்த், சிவகுமார், மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, சூர்யா, கார்த்தி, விஷால், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜீவா, விக்ரம்பிரபு, விவேக்,ஆர்யா உள்ளிட்ட நடிகர்ளும் எஸ்பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், பி.வாசு, ஷங்கர் உள்ளிட்ட இயக்குனர்களும் கலந்துகொண்டனர்.

விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது…

எந்த நாட்டிலும் ஆக்‌ஷன் படங்கள்தான் அதிக வசூலை பெற்றுத் தருகிறது.

பணம் சம்பாதிக்க பல வழிகள் இருக்கிறது. சிலர் பணத்தையே மூலதனமாக வைத்து பணம் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். அந்த வகையில் உடம்பை மூலதனமாக வைத்து பணம் சம்பாதிக்கக்கூடிய தொழில் ஸ்டண்ட் கலைஞர்கள் தொழில்.

எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த யூனியனின் பொன் விழாவை அவரது நூற்றாண்டின்போது கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எம்ஜிஆர் சினிமாவை விட்டு விலகியபோது கூட சண்டை கலைஞர்கள் பலருக்கு மாத சம்பளம் கொடுத்து உதவினார். ஸ்டண்ட் கலைஞர்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னைக் கேளுங்கள். உங்களுக்காக என் வீட்டுக் கதவு திறந்தே இருக்கும்.

சினிமாவில் மற்ற கலைஞர்கள் வியர்வை சிந்தி உழைக்கிறார்கள். சண்டைக் கலைஞர்கள் மட்டும்தான் வியர்வையுடன் ரத்தத்தை சிந்தி உழைக்கிறார்கள்.

அவர்களின் உயிரையே பணயம் வைக்கிறார்கள்.

அவர்கள் சண்டைக்காட்சியில் காட்டும் அக்கறையை குழந்தைகளை வளர்ப்பதிலும், படிக்க வைப்பதிலும் காட்ட வேண்டும்.” என்று ரஜினி பேசினார்.

My home door will be always open for Stunt Union says Rajinikanth

தரமணி தயாரிப்பாளரின் ஹவ்ரா ப்ரிட்ஜ் படத்தில் பிரியங்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம் இயக்கத்தில் வெளியான ‘தரமணி’ படம் அண்மையில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

யுவன் இசையமைத்த இப்படத்தை ஜே. சதீஷ்குமார் தயாரித்திருந்தார்.

இதனையடுத்து இவரின் தயாரிப்பில் புரியாத புதிர் படம் வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து ‘ஹவ்ரா ப்ரிட்ஜ்’ என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை தயாரித்து வருகிறார் ஜே. சதீஷ்குமார்.

லோஹித் இயக்கி வரும் இப்படத்தில் பிரியங்கா உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார் கபிலன் வைரமுத்து. ப்ரியங்கா உபேந்திராவின் மகளாக ஐஸ்வர்யா நடித்து வருகிறார். முழுக்க கொல்கத்தா நகரை மையப்படுத்தி படமாக்கி வருகிறது படக்குழு.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் கூறியிருப்பதாவது:

‘வணிக ரீதியான வெற்றி மட்டுமில்லாமல் எனது தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெரும் அடையாளத்தை தந்துள்ளது ‘தரமணி’.

உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள திரில்லர் ‘ஹவ்ரா ப்ரிட்ஜ்’ கதை.

செப்டம்பர் 4-ம் தேதி தொடங்கி கொல்கத்தாவில் தொடங்கி ஒரு மாதம் சூட்டிங் நடக்கிறது.” என்றார் ஜே.சதீஷ்குமார்.

தமிழில், ராஜ்ஜியம், ராஜா, காதல் சடுகுடு, ஐஸ், ஜனனம் ஆகிய படங்களில் நடித்தவர் பிரியங்கா திரிவேதி.

கன்னட நடிகர் உபேந்திராவை காதலித்து 2003-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

படங்களில் நடிக்காமல் இருந்த இவர், சமீபத்தில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

லோஹித் இயக்கிய கன்னடத்தில் உருவான ’மம்மி’ என்ற படத்திலும் பிரியங்கா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Taramani producers next movie titled Howrah Bridge starring Priyanka Upendra

வேதாளம்-தெறி சாதனைகளை முறியடித்தது விவேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி அஜித் நடிப்பில் விவேகம் வெளியானது.

இது கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்த போதிலும் வசூல் வேட்டை செய்து வருகிறது.

இதற்கு முன் வெளியான வேதாளம் படம் முதல் நாளில் தமிழக அளவில் ரூ. 15.5 கோடியை மட்டுமே வசூல் செய்தது.

விவேகம் படம் முதல்நாளில் மட்டும் ரூ. 17 கோடியும், இரண்டாம் நாளில் 12 கோடியும் பெற்று மொத்தம் இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 29 கோடி வசூலித்துள்ளது.

தெறி படம் முதல்நாளில் தமிழகளவில் ரூ. 14 கோடியை மட்டுமே வசூலித்தது.

இதன் மூலம் வேதாளம் , தெறி சாதனைகளை விவேகம் முறியடித்துள்ளது.

விவேகம் டிக்கெட்டும் ரஜினி-கமலின் அரசியலும்… திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விவேகம் படத்தின் டிக்கெட்டுக்கள் அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 10 மடங்கு கூடுதலாக விற்கப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் தியேட்டர் நிர்வாகத்தை குறை கூறி வந்தனர்.

படத்தை அதிக விலைக்கு தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் விற்கும் போது வாங்கும் தியேட்டர்கள் அப்படிதான் டிக்கெட் விலையை விற்க வேண்டியுள்ளது என்று தங்களது நிலைப்பாட்டை தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தன் கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது…

“பொதுமக்கள் யாருமே இந்த விலை கொடுத்து படம் பார்ப்பதில்லை. ரசிகர்கள் மட்டுமே பார்ப்பார்கள். ’பாகுபலி’ படத்துக்கு மக்கள் கூட்டம் வரக்காரணம் நியாயமான டிக்கெட் விலை மட்டுமே.

இந்த விற்பனைக்கு தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர் என அனைவருமே தான் காரணம்.

தமிழக அரசும் சரியாக டிக்கெட் விலையை நிர்ணயம் செய்து முறையாக அறிவிக்க வேண்டும்.

சிஸ்டம் சரியில்லை, நாட்டைத் திருத்த வேண்டும் என்று பெரிய நடிகர்கள் சொல்லி வருகிறார்கள்.

முதலில் நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். முன்னணி நடிகர்கள் அனைவரும் என்னுடைய படத்துக்கு 100 ரூபாய் கட்டணத்தைத் தாண்டி டிக்கெட் விற்பனை செய்யக் கூடாது என்று சொல்ல வேண்டியதானே.

அப்படி விற்பனை செய்தால் என்னுடைய ரசிகர்கள் போய் ரகளை செய்வார்கள் என சொல்லலாமே.

எனது திரையரங்கில் 100 ரூபாய் டிக்கெட் + ஜிஎஸ்டி வரி +சிஜிஎஸ்டி சேர்த்து 118 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறேன். 4 திரையரங்கிலும் மொத்தம் 80 காட்சிகள் ‘விவேகம்’ திரையிட்டு இருக்கிறேன்.

அனைத்து காட்சிகளுக்குமே டிக்கெட் விற்பனை பிரமாதமாக இருக்கிறது.

இந்த விஷயம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் மற்றும் விநியோகஸ்தர் சங்கம் பேச வேண்டும்.

திரையரங்குகளுக்கு மக்கள் வர வேண்டுமானால் டிக்கெட் விலை முதலில் நியாயமாக இருக்க வேண்டும். 100 ரூபாய் அல்லது 120 ரூபாய்க்கு டிக்கெட் விற்றால் மட்டுமே மக்கள் வருவார்கள்.

தயாரிப்பாளர் சங்கமும் எந்த நடிகரின் படம் வெளியானாலும், 100 ரூபாய்க்கு மேல் டிக்கெட் விற்கக்கூடாது என்று ஏன் சொல்வதில்லை? 300 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை டிக்கெட் விற்று வருகிறார்களே, இப்போது எங்கே போனது தயாரிப்பாளர் சங்கம்.

ஏன் அந்த நடிகரை கண்டால் பயமா? பெரிய நடிகர்களை கண்டால் தயாரிப்பாளர் சங்கம் பயப்படுகிறதா?

பெரிய நடிகர்களுக்கு டிக்கெட் விலையைப் பற்றி கவலையில்லை. ஏனென்றால் அந்த விலைக்கு விற்றால் மட்டுமே இவர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்க முடியும். திரையரங்க உரிமையாளர்களைப் பற்றி வாட்ஸ்-அப்பில் என்னவெல்லாமோ பேசி வரும் தயாரிப்பாளர் சங்கம், இப்பிரச்சினைப் பற்றி ஏன் பேச மறுக்கின்றது.

ஒவ்வொரு திரையரங்க உரிமையாளரிடம் முன்பணம் என்ற பெயரில் 40 லட்ச ரூபாய் வரை கேட்கிறீர்கள். அவ்வளவு முன்பணம் வாங்கினீர்கள் என்றால், இவ்வளவு டிக்கெட் விலை விற்காமல் என்ன செய்வார்கள்? சின்ன படங்களுக்கு திரையரங்குகள் தர மறுக்கிறீர்கள் என்று பேசுபவர்கள், பெரிய படங்கள் வெளியாகும் போது மட்டும் ஏன் எதுவுமே பேச மறுக்கிறார்கள்.

தயாரிப்பாளர் சங்கம் முதலில் பெரிய நடிகர்களை அடக்க வேண்டும். அதை செய்வதை விடுத்து, அந்த நடிகர்கள் 50 கோடி ரூபாய், 70 கோடி ரூபாய்
கேட்டாலும் வரிசையில் நின்று கொடுத்துவிட்டு, நீங்கள் விநியோகஸ்தர்களை காலி செய்து, விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்களை காலி செய்கிறார்கள்.

ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் அநியாய விலைக்கு டிக்கெட் விற்கிறார்கள் என்று பேசுகிறார்கள். தற்போது பிரச்சினை எங்கிருந்து தொடங்குகிறது என்று நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

ட்விட்டரில் ஆட்சி சரியில்லை என்று பேசும் நடிகர்கள், இப்பிரச்சினை தொடர்பாக பேசச் சொல்லுங்கள் பார்க்கலாம். இது அக்கிரமக் கொள்ளை என்று போட வேண்டியதானே.

நம்ம பிரச்சினையை எல்லாம் கண்டு கொள்வதை விடுத்து, ஆட்சியாளர்களை குறைச்சொல்ல தொடங்கிவிட்டோம். இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு முன்னணி நடிகராவது குரல் கொடுக்கத் தயாரா?

எந்தவொரு படமாக இருந்தாலும் இவ்வளவு விலை தான் டிக்கெட் என்று திரையரங்க உரிமையாளர்கள் முடிவெடுக்க வேண்டும்.”

என்று ஆதங்கமாக பேசியுள்ளார் திருப்பூர் சுப்ரமணியம்.

கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாகும் ஜிவி.பிரகாஷின் குப்பத்து ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான குப்பத்து ராஜா படத்தலைப்பில் ஜிவி பிரகாஷ் நடித்து வருகிறார்.

நடன இயக்குனர் பாபா பாஸ்கர் முதன்முறையாக இப்படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார்.

இதில் ஜிவி. பிரகாஷ் உடன் பூனம் பாஜ்வா, பல்லக் லால்வானி, பார்த்திபன், M S பாஸ்கர், யோகி பாபு மற்றும் ‘ஜாங்கிரி’ மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் நாயகன் ஜிவி. பிரகாஷ் இசையமைக்க, மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘S Focuss’ சார்பாக சரவணன், சிராஜ் மற்றும் டி. சரவணன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தை இந்தாண்டு 2017 கிறிஸ்மஸ் தினத்தில் வெளியிட முடிவெடுத்துள்ளனர்

காரைக்காலில் விவேகம் படம் பார்த்த ரசிகர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று முன்தினம் அஜித் நடித்த விவேகம் படம் உலகமெங்கும் வெளியானது.

இதில் புதுச்சேரியை சேர்ந்த காரைக்கால் பகுதியில் உள்ள இரண்டு தியேட்டர்களான பிஎஸ்ஆர் மற்றும் முருகராம் தியேட்டர்களிலும் இப்படம் வெளியானது.

அப்போது சர்புதீன் என்ற இளைஞர் காரைக்காலில் உள்ள முருகராம் தியேட்டரில் விவேகம் படத்தை தன் நண்பர்களுடன் பார்த்துள்ளார்.

இவர் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார்.

இவரது நண்பர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்லவே, அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்ட நண்பர்கள் கதறி அழுதுள்ளனர்.

சபுருதீனின் மனைவி இந்த திடீர் மரணம் குறித்து புகார் அளிக்கவே, தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Ajith fan died while watching vivegam movie in Karaikal Theatre

More Articles
Follows