கபாலி பெயரில் 165 கிலோ வெள்ளி விற்பனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் தாணு தயாரித்து உருவான கபாலி படத்தின் எதிர்பார்ப்பு இந்திய திரையுலகம் அறிந்ததே.

இப்படத்தின் விளம்பரங்கள் அனைவரையும் வியக்க வைத்தது. விமானம் முதல் டீசர்ட் வரை எதையும் விட்டுவைக்கவில்லை.

மேலும் முத்தூட் நிறுவனம் கபாலி பெயரில் பல கிராம்களில் ரஜினி படம் பொறித்த வெள்ளி நாணயங்களை வெளியிட்டது.

தற்போது ரஜினி பெயரில் விற்கப்பட்ட கபாலி நாணயங்களை

அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதாவது இதுவரை 165 கிலோ வெள்ளியை விற்று இருக்கிறார்களாம்.

மீண்டும் ரெமோ கூட்டணி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

24ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பாக ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ரெமோ. இது இந்நிறுவனத்தின் முதல் படைப்பாகும்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பிரதியை தயாரிப்பாளர் பார்த்துள்ளார்.

இப்படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் இது முக்கியமான படமாக இருக்கும் என்ற தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் இயக்குனர் பாக்யராஜீக்கு தன் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்து அட்வான்ஸ் தொகையையும் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மில்லியன் லைக்ஸை பெற்ற விஜய் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ஒரு சில ஹீரோக்களை மட்டுமே குழந்தைகளுக்கு பிடிக்கும்.

அதில் முக்கியமானவர் நடிகர் விஜய்.

இவரது நடனத்தாலும் காமெடியாலும் குழந்தைகள் வரை கவர்ந்து இருக்கிறார்.

இதனிடையில் விஜய், தன் குட்டி ரசிகை ஒருவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தள பக்கத்தில் வெளியானது.

அது அனைவரையும் கவர்ந்ததால், ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

ரசிகர்களை மதிக்கவில்லை; சர்ச்சை குறித்து விக்ரம் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி 70வது இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

இதுபோன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரிலும் இந்தியா சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் கிராண்ட் பரேட் நடைபெற்றது.

பெடரேஷன் ஆஃப் இந்தியன் அசோஷியேசன் (எஃப்.ஐ.ஏ) சார்பில் நடத்தப்பட்ட இவ்விழாவிற்கு அபிஷேக்பச்சன், விக்ரம் உள்ளிட்டோர் சென்றனர்.

இவ்விழாவில் விக்ரம் யாரையும் கண்டு கொள்ளாமல் செல்போனையே பார்த்து கொண்டிருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து எஃப்.ஐ.ஏ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்..

“தன்னுடைய பட ப்ரோமோஷன் பணிகளில் பிசியாக இருந்த போதும், ஒரு இந்தியராக இந்தியா டே பரேடில் கலந்து கொண்ட விக்ரமுக்கு நன்றி.

பிரகாஷ் எம். சுவாமி சமூகவலைத்தளத்தில் விக்ரமை பற்றி எழுதியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். அதில் உண்மையில்லை.

அவருக்கும் இந்நிகழ்ச்சிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. ஆனால் அவரின் பதிவால் விக்ரம் மிகவும் வருத்தமடைந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியன்று சிவகார்த்திகேயனின் டபுள் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்துள்ள படம் ரெமோ.

இதன் பர்ஸ்ட் லுக் வெளியானது முதல், இதன் பல்ஸ் பல மடங்கு உயர்ந்துள்ளது.

மேலும் இப்படத்திற்கு இளைஞர்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இத்துடன் சிரிக்காதே என்ற பாடலின் ஆங்கில பதிப்பை வெளியிட இருக்கிறார்களாம்.

இப்பாடல் ‘COME CLOSER’ (கம் க்ளோசர்) என்ற வரிகளுடன் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

அசிஸ்டெண்ட் டைரக்டர்களுக்கு பாடம் சொல்லும் சாக்கோபார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெறும் இரண்டேகால் லட்சத்தில் ஒரு படம் எடுக்க முடியுமா? இன்று
இருக்கும் சினிமா சூழலில் டிஸ்கஷனுக்கே அது போதாது என்கிறீர்களா?

மிகக்குறைந்த செலவில் படம் எடுப்பது தான் திறமையான இயக்குனருக்கு சவால்
என்பதை நிரூபிக்கும் வகையில் தெலுங்கின் பிரபல இயக்குனர் ராம்கோபால்வர்மா
இரண்டேகால் லட்சத்தில் ஒரு படம் எடுத்து வெளியிட்டு அதனை சூப்பர்
ஹிட்டும் ஆக்கினார்.

தமிழ்நாட்டில் சினிமாவுக்கு வரத் துடிக்கும் இளம் இயக்குனர்களுக்கு
அந்த படம் ஒரு பாடமாக அமையட்டுமே என்று அதனை வாங்கி டப் செய்து
சாக்கோபார் என்ற டைட்டிலில் வெளியிடுகிறார் தயாரிப்பாளர் மதுராஜ்.

இந்த படம் பற்றி மதுராஜ் என்ன சொல்கிறார்? ‘’ இந்திய சினிமாவில் ஒரு
வரலாற்று சாதனை செய்த திரைப்படம் தமிழில் ’சாக்கோபாரா’க வெளிவருகிறது.

ஒரு திரைப்படம் எடுக்க ஒரு அலுவலகம் அமைப்போம். அதற்கு குறைந்தபட்சம்
இரண்டு லட்சத்தில் இருந்து 3 லட்சம் அட்வான்ஸாக கொடுப்போம்.

ஆனால் அந்த
அட்வான்ஸ் பணத்திலேயே படத்தை முடித்திருக்கிறார்கள் என்றால் நம்ப
முடிகிறதா? நம்ப முடியவில்லை என்றால் வரும் 26 ஆம் தேதி தியேட்டரில்
வந்து பாருங்கள்.

வெறும் இரண்டேகால் லட்சம் பட்ஜெட்டில் ஒரு தரமான படத்தை
ராம்கோபால் வர்மா இயக்கியுள்ளார்.

இதில் இதுவரை இந்திய சினிமாவில்
காட்டப்படாத காட்சிக் கோணங்கள் இடம் பெற்று இருக்கிறது. கிளாமர் ஹாரர்
படமான சாக்கோபார் படத்தில் ஆறு பேர் மட்டுமே நடித்து இருக்கிறார்கள்.

ஆறு
நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்துள்ளது. அதன்பிறகு இப்படத்திற்கு
ராம்கோபால்வர்மா ஒன்றரை கோடி சம்பளமாக வாங்கியிருக்கிறார். தெலுங்கிலும்

இந்தியிலும் சக்கைபோடு போட்ட இந்த படத்தை இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம்
என வெளிவந்து இருக்கிறது.

நான் ஹைதராபாத் சென்றபோது யதார்த்தமாக பார்த்த படம் தான் இது.
படத்தைப் பற்றி கேள்விப்பட்டதும் வாங்கி வெளியிட முடிவு செய்துவிட்டேன்.

எப்போதும் சர்ச்சைக்கு பெயர் பெற்ற இயக்குனர் ராம்கோபால்வர்மா ‘என் படம்
தமிழ் ரசிகர்களுக்கு புரியாது’ என தர யோசித்தார்.

நான் உறுதியாக இருந்து
படத்தை வாங்கி டப்பிங் செய்துள்ளேன். ஒரே ஒரு லொக்கேஷனில் மிகக்குறைந்த
கலைஞர்களை
வைத்து மிக்க்குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள சாக்கோபார் படம்
திரைத்துறையினருக்கு மிகவும் உதவும்.

சாதாரண ரசிகனையும்
திருப்திபடுத்தும் அளவுக்கு திகில் காட்சிகளும், கவர்ச்சியும்
நிறைந்திருக்கிறது சாக்கோபார்.

இப்படியும் நடக்குமா என்ற ஆச்சர்யம்
உங்களுக்கு இருந்தால் சாக்கோபார் படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு உங்கள்
கருத்துகளை பகிருங்கள்.

அடுத்து தமிழில் வெளியாகும் குற்றமே தண்டனை
படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கியிருக்கிறேன். அந்த பணிகள்
போய்க்கொண்டிருக்கிறது.

இங்கே குற்றமே தண்டனை வெளியாகும் நாளிலேயே
அங்கேயும் அந்த படம் வெளியாகும்’’ என்றார்.

More Articles
Follows