சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் ஷபீர் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் “தயாரிப்பு எண் 2” படத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துமே கோலிவுட்டில் பரபரப்பான அலைகளை உருவாக்குகிறது. குறிப்பாக, ‘பிளாக் ஷீப்’ மூலம் மிக பிரபலமான பொழுதுபோக்கு கலைஞர்களினால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. ஆனாலும், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோரிடமும் இருந்து கொண்டே இருக்கிறது. நீண்ட காத்திருப்புக்கு விடையை அளித்துள்ளது படக்குழு. சமீபத்திய இசை சென்சேஷன் ஷபிர் இந்த படத்துக்கு இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

“ஷபிர் இசையமைத்த ஆல்பங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை பெற்றதால், குறுகிய காலத்திலேயே அவர் ஒரு சென்சேஷனாக மாறியிருக்கிறார். மிக குறுகிய காலத்தில் வெற்றி பாடல்களை வழங்கியிருக்கிறார் ஷபீர். மிகவும் குறிப்பிடத்தக்க வகையிலான தனித்துவமான பாடல்கள் மற்றும் பின்னணி இசையை வழங்கியது தான் ஷபீர் என்ற இசைக்கலைஞரை அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறது. எங்கள் படத்திற்கு ஷபீர் இசையமைப்பது மகிழ்ச்சி. எங்களது உழைப்பை ஷபீரின் இசை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என் நம்புகிறோம் ” என்றார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபால்.

இசையமைப்பாளர் ஷபிர் கூறும்போது, “துடிப்பான இளைஞர்கள் உள்ள ஒரு குழுவில் இணைந்தது மகிழ்ச்சி. யூடியூபில் அவர்களது நகைச்சுவை நிகழ்ழ்சிகள் மூலை முடுக்கெல்லாம் பிரபலம். ஒரு புதுமையான அனுபவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். குறிப்பாக, சிவகார்த்திகேயன் சார் பேனரில் பணிபுரியும் ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவே எனக்கு சிறந்த இசையை வழங்கும் மிகப்பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறது” என்றார்.

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த ‘தயாரிப்பு எண் 2’ படத்தில் ரியோ ராஜ் மற்றும் ஷிரின் கஞ்ச்வாலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் பல பிரபலமான யூடியூபர்கள் நடித்திருக்கிறார்கள்.

ரஜினிகாந்த்-விஜயகாந்த் பட பாணியில் ’ராட்சஷி’ ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

36 வயதினிலே படத்திற்ல் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஜோதிகா அதிரடியாக படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான படம் காற்றின் மொழி.

இப்படத்தை தொடர்ந்து தற்போது எஸ்.ராஜ் என்பவர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

ட்ரீம் வாரியர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்திற்கு ராட்சஷி என்ற தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதில் ஜோதிகாவுடன் பூர்ணிமா, சத்யன், ஹரிஷ் பெரடி, கவிதா பாரதி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இதில் ஸ்கூல் டீச்சராக நடிக்கிறாராம் ஜோதிகா.

இந்த ஸ்கூல் காட்சிகளுக்காக 50 லட்சம் ரூபாய் செலவில் பள்ளி செட் போடப்பட்டுள்ளதாம்.

பகலில் டீச்சராகவும் இரவில் குற்றங்களை தடுக்கும் பெண்ணாகவும் நடிக்கிறாராம் ஜோ.

நான் சிகப்பு மனிதன் படத்தில் ரஜினிகாந்த், ரமணா படத்தில் விஜயகாந்த் ஆகியோரது கேரக்டர்களும் இப்படிதான் இருந்தது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Jyothika next movie titled Ratchashi Directed by Raj

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டு பொங்கிய ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொள்ளாச்சியைச் சேர்ந்த பாலியல் மாஃபியா கும்பலின் செய்தியறிந்து நாடே உறைந்து போய் கிடக்கிறது. 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை துன்புறுத்தி வேட்டையாடி வந்த அந்த கயவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென தமிழகம் முழுவதில் இருந்தும் போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

மாதர் சங்கங்களும், முற்போக்கு இயக்கங்களும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றன.

இந்நிலையில் இயக்குநர் பா.இரஞ்சித் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் பதிவு செய்திருக்கும் டுவீட்டிலிருப்பதாவது,

“பொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தை கேள்விகேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும் பெண்களை பொறுப்புக் கோர சொல்லும், எச்சரிக்கையாக இருக்க சொல்லும் நம் அனைவருக்கும்..

நம் பாவம், பரிதவிப்பால், பிரச்சினை நடந்த பிறகு எழும் கோவத்தால் மட்டும் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை.
இல்லையேல் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படபோகும் பெண்களின் குரல்களை இன்னும் எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அதிகாரம் விழுங்கி கொண்டுதான் இருக்கும்.

நாமும் கேட்டு, பார்த்து, குரல் கொடுத்து அல்லது எதுவும் செய்யாமல் கடந்து போய் கொண்டுதான் இருக்க போகிறோம்.

ஆண் மைய சமூகத்தில் பெண் உடல், உடை, சமூக செயல்பாடு, கலாச்சாரம் பற்றிய பிற்ப்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய ஒவ்வொருவரும் முன் வரவேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.

Director Ranjith condemns Pollachi rape case

ரிசார்ட்டில் 200 பெண்களுடன் யோகிபாபு விடிய விடிய லூட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ் 3 பிக்ச்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இனைந்து தயாரிக்கும் திரைப்படம் ஜாம்பி.

இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தற்போது இரண்டாம் கட்ட பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் அத்தோடு படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெறும்.

தற்போது யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், T.M.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட இன்டர்நெட் பிரபலங்கள் பலர் பங்கேற்கும் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இரவு நேரத்தில் ரிசார்ட்டில் நடைபெறுவது போல தான் படத்தில் அதிமாக காட்சிகள் இடம்பெறுகிறது. ஆதலால் படப்பிடிப்பு தொடர்ந்து இரவு நேரத்தில் பிரபல வி.ஜி.பி போன்ற ரிசார்ட்களில் வைத்து தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வி.ஜி.பி ரிசார்ட்டில் 200 இளம் பெண்கள் மற்றும் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், கார்த்திக், பிஜிலி ரமேஷ், சித்ரா அக்கா உள்ளிட்ட இன்டர்நெட் பிரபலங்கள் ஒன்றாக பங்கேற்ற பிரமாண்டமான காட்சி படமாக்கப்பட்டது.

ஜாம்பிகள் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் சந்திக்கும் ப்ரீ கிளைமாக்ஸ் காட்சி அது. இந்த படத்தின் ஹைலைட்டான காட்சியும் கூட அதை இயக்குனர் ஹீலியம் விளக்கொளியில் மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார்.

சென்னை முதல் பாண்டிச்சேரி வரை உள்ள ஈசிஆர் சாலையில் பயணிக்கும் இப்படத்தின் கதை ஒரு நாள், ஓர் இரவில் நடப்பது போல் உருவாகியுள்ளது.

வேகமாக உருவாகிவரும் ஜாம்பி படத்தை படக்குழுவினர் சம்மர் ரிலீசாக வெளியிடவுள்ளனர்.

புவன் நல்லன் இயக்கும் இப்படத்துக்கு இசை பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.

Yogi Babu and Yaashika Anand Became Zombies

கிரிக்கெட்டே இல்லாத படத்தில் ‘சிக்சர்’ அடிக்கும் வைபவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிக்ஸர் என்பது கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்தில் எடுக்கப்படும் அதிகபட்ச ரன் அதாவது 6 ரன்கள் எடுப்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் கிரிக்கெட்டை ஒரு மதமாக கருதுகிறோம்.

அதை மனதில் வைத்து வைபவ் நடிக்கும் படத்துக்கு சிக்ஸர் என்ற தலைப்பை வைத்திருக்கிறார்கள் வால்மார்ட் எண்டர்டெயின்மெண்ட் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன். அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கும் இந்த படம் மிக விரைவாக படப்பிடிப்பை முடித்திருக்கிறது.

“சிக்ஸர் தான் தலைப்பு என்றாலும் இந்த படத்துக்கும் கிரிக்கெட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் ‘6’ சிக்ஸ் என்ற வார்த்தை திரைக்கதையில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.

பல புள்ளிகளை இது இணைக்கிறது. இந்த கதைக்கு பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம் கொண்ட, அதை திறம்பட செய்யும் வைபவ் மிக பொருத்தமாக இருந்தார்.

பல்லக் லால்வானி நாயகியாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

நல்ல துடிப்பான இளைஞர்கள் குழு, கதையிலும், மிகச்சிறப்பாக படத்தை முடிக்கவும் உறுதுணையாக இருந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன.

கோடை விடுமுறையின் இரண்டாம் பாதியில் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறோம். தலைப்புக்கு ஏற்றவாறே நாங்கள் சிக்ஸர் அடிக்க முயற்சித்திருக்கிறோம்.

ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிந்திரன் சார் இந்த படத்தை வணிக அளவில் கொண்டு சேர்க்க மிகவும் உறுதுணையாக இருக்கிறார், அவருக்கு எங்கள் நன்றி” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்கள் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர்.

Vaibhav and Pallak Lalwani pair up for Sixer movie

விஜய்சேதுபதி எடுத்துக் கொடுத்த ‘ஒத்த செருப்பு’டன் வரும் பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதிய பாதை படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோ மற்றும் இயக்குனராக அவதாரம் எடுத்தவர்.

இதற்கு முன் பல படங்களில் அவர் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் இந்த படமே அவருக்கு ஒரு அடையாளத்தை பெற்றுத் தந்தது.

அதன்பின்னர் படங்களை தயாரிக்கவும் செய்தார். சில காலம் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தற்போது வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அந்த படத்திற்கு ஒத்த செருப்பு என்று பெயரிட்டுள்ளார்.

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

இதில், பார்த்திபன் தனது முகத்தை மூடிக்கொண்டு, தலையில் தலைப்பாகை அணிந்தபடி இருக்கும் போஸ்டர் இடம் பெற்றுள்ளது.

காலா பட புகழ் சந்தோஷ் நாராயணன் இசையமக்க, ராம்ஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Parthibans next titled Oththa Serupu First look released by Vijay Sethupathi

More Articles
Follows