“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று வெளியாகியுள்ள “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தினை முன் திரையிடலில் கண்ட விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தினை கொண்டாடி வருகிறார்கள். இயக்குநர் பார்த்திபன் படம் முழுக்க ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே வரும்படி எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இப்படத்தினை அனைவரும் ஆச்சர்யத்தின் உச்சத்தில் வாய்பிளந்து பாராட்டி வருகிறார்கள். படத்தினை தூக்கி சுமந்து உயிர் தந்திருக்கும் இசையமைப்பாளர் சத்யாவிற்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த ஒற்றைப்படத்தின் மூலம் தன் தரத்தின் அடுத்த உயரத்தை அடைந்திருந்திருக்கிறார் இசையமைப்பாளர் சத்யா.

படத்தில் பணிபுரிந்தது பற்றி இசையமைப்பாளர் சத்யா பகிர்ந்து கொண்டது….
பல சாதனைகள் புரிந்து, பலரது பாராட்டுக்களையும் பெற்று வரும் இந்தப்படத்தில் பணிபுரிந்ததை நான் மிகுந்த பெருமையாகவும், எனக்கு கிடைத்த கௌரவமாகவும் கருதுகிறேன். இத்தகையதொரு படத்தில் எனது புதுமையான முயற்சிகளுக்கும், யோசனைகளுக்கும் செவிமடுத்த இயக்குநர் பார்த்திபன் சார் அவர்களுக்கு இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஒரு திறமையான திரைக்கதை எழுத்தாளர் உள்ளத்தளவில் ஒரு இசைக்கலைஞனும் கூட, அவர் இசை என்பது ஒரு கருவி அல்ல அது படத்தின் உயிர். படத்தில் உலவும் கதாப்பாத்திரம் போன்றது என்பதை அறிவார்.

உண்மையாய் சொல்வதானால் பார்த்திபன் சார் படத்தை பாடல்கள் மற்றும் இசையே இல்லாமல் ரசிகர்கள் ரசிக்க தயாராய் இருப்பார்கள். அவரது திரைக்கதையும், வசனங்களும் ரசிகர்களை சுவாரஸ்யத்தின் உச்சியில் கட்டி வைத்திருக்கும் தன்மைகொண்டது.

முதலில் படத்தின் இசையற்ற பதிப்பை நான் பார்த்தபோது பார்த்திபன் சார் பல இடங்களை வசனங்களே இல்லாமல் இசை நிரப்பிக் கொள்ளும் இடங்களை உருவாக்கி வைத்திருந்தார். எனக்கான தளத்தை உருவாக்கி தந்திருந்தார். இப்போது படத்தினை பார்த்துவிட்டு பின்னணி இசைக்கும் கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் பார்த்திபன் சாருக்கு உரியது. “குளிருது புள்ள” எனும் ஒற்றைப் பாடல் மூலம் அனைவரது பாராட்டைப் பெற்று சந்தோஷ் நாரயணன் அவர்களும் பிரமிப்பை தந்துள்ளார் அவருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியாகியுள்ள இயக்குநர் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 அனைத்து தரப்பினரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

BIGIL BREAKING: பாட்டு. பன்ச். அட்வைஸ். அரசியல்; வேற லெவல் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு ஹைலைட்டாக அமைந்துவிட்டது எனலாம்.

படத்தில் பணியாற்றிய விவேக், நயன்தாரா முதல் அனைவரையும் பாராட்டி பேசினார்.

வெறித்தனம் என்ற பாடலை பாடி தன் பேச்சை ஆரம்பித்தார்.

அந்த அனல் பறக்கும் பேச்சை இறுதிவரை கொண்டு சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

அவரின் பேச்சில் உள்ள ஹைலைட்ஸ் இதோ…

வாழ்கைல அவங்க மாதிரி இவங்க மாதிரி வரணும்னு ஆசைப்படாதீங்க. அதுக்கு தான் அவங்களே இருக்காங்களே.. நீங்க நீங்களா வாங்க.

விளையாட்டில் மேம்படனும்னா அரசியல்ல புகுந்து விளையாட்டு பண்ணுங்க.. விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க. எதனை யாரால் முடிக்க முடியும் என பார்த்து யாரை எங்க உக்கார வெக்கணும்னு திறமை வெச்சு முடிவு பண்ணுங்க.

உலகத்துலயேப் உழைச்சவனை மேடையில் ஏத்தி அழகு பார்க்குற முதலாளி ரசிகன் தான்! வேற லெவல் யா நீங்க,

பெண்கள் ஜெயிக்கற படத்தில வாழ்க்கையில ஜெயிச்ச நயன்தாரா இருக்கறது ரொம்ப சந்தோஷம்

பல லட்ச மரக்கன்று நடும் விவேக் அவர்களுக்கு நன்றி & பாராட்டுகள்

நாம கோல் போடுறத தடுக்க ஒரு கூட்டம் இருக்கும். நம்ம கூட இருக்கறவங்களே கூட சேம் சைட் கோல் போடுவாங்க.

கலர பத்தி பேசுறதில்ல வெற்றி காலர தூக்கிட்டு கெத்தா சொல்றதுல இருக்கு வெற்றி..

உழைத்தவர்களை மேடையில் ஏற்றிப் பார்க்கும் ரசிகர்கள் தான் முதலாளி என தெரிவித்தார்

பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என்னோட ஆறுதல்! சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி டிரைவர் மற்றும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் வழக்கு போடுகிறார்கள்.

இதுபோன்ற சமூக பிரச்சனைக்கு ஹாஷ் டாக் போடுங்க. சமூக பிரச்சனைல கவனம் செலுத்துங்க.

பேனர் கட் அவுட்லாம் கிழிச்சப்போ ரசிகர் வருத்தப்பட்ட அளவு நானும் வருத்தப்பட்டேன்.. என் போட்டோவ கிழிங்க, உடைங்க. என் ரசிகன் மேல கை வைக்காதீங்க.

என் ரசிகர்கள் எவ்வளோ ஆசைகளோட கனவோட சிரமத்துள பேனர்லாம் வெக்குறாங்க அதை கிழிச்சா அவங்களுக்கு கோவம் வரது நியாயம் தான்! அதுக்காக அவங்க மேல கை வைக்காதீங்க இது வேண்டுகோள்! கேக்க முடிஞ்சா கேளுங்க.

எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும். காரில் செல்லும் போது கருணாநிதியை பற்றி தவறாக கூறியவரை இறக்கி விட்டவர் எம்ஜிஆர்…

என அனைத்தையும் கலந்து பேசினார் விஜய்.

Vijay Vera level punch dialogues in Bigil Audio launch

BIGIL BREAKING விஜய்யை விட மனசில்ல; அவர் இல்லேன்னா நானில்ல..: அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் தற்போது விஜய்யின் ‘பிகில்’ பட இசை வெளியீட்டு விழா நடைற்று வருகிறது.

இந்த விழாவில் அட்லி பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பேசுவதாவது…

தெறி மற்றும் மெர்சல் படங்களை விட பிகில் பெஸ்ட்டா இருக்கும். மெர்சல் படத்திற்கு பிறகு நிறைய படங்களை இயக்க வாய்ப்புகள் வந்தன.

ஆனால் எனக்கு விஜய் அண்ணனை விட்டு போக மனசுல்லை.

இந்த படத்துல ஒன்னும் ஒன்னும் பார்த்து செஞ்சுருக்கேன்.

என்னுடைய பேவரைட் ஹீரோ எப்பவும் அவர்தான்.

எல்லா இயக்குனருக்கும் ஒரு ஹீரோ இருப்பாங்க. எனக்கு விஜய் அண்ணா தான்.

என்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அவர்தான். அவர் இல்லேன்னா நான் ஒன்னுமில்ல..” என்றார் அட்லி.

மேலும் அக்டோபர் 1ஆம் தேதி பிகில் டீசர் ரிலீஸ் என்றும் தெரிவித்தார்.

Director Atlee emotional speech about Vijay and Bigil

நான் பேசுவதை விட படம் பேசும்.; ‘அசுரன்’ பற்றி கலைப்புலி தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் அசுரன். இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பசுபதி, பவன், யோகி பாபு, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், குரு சோமசுந்தரம் என தேர்ந்த நடிகர்கள் இணைந்துள்ளனர்.

இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வெற்றி மாறன் – தனுஷ் கூட்டணியின் நான்காவது படம் இது. இவர்களுடன் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இசையமைப்பாளராக இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ். அண்மையில் இந்தப் படத்தின் பாடல்கள், ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.

தனுஷின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தைத் தந்த படம் ஆடுகளம். வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் பெற்ற வெற்றி அசாதாரணமானது.

சிறந்த நடிகர். சிறந்த இயக்குநர் உள்பட ஆறு தேசிய விருதுகளையும் இந்தப் படம் அள்ளியது. அதற்கு இணையான படமாக அசுரன் உருவாகியுள்ளதாக படம் குறித்து பேசப்படுகிறது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறுகையில்,

“இந்தப் படம் அதன் தலைப்பைப் போலவே ஒரு அசுரத்தனமான படம். நான் பேசுவதை விட படம் பேசட்டும் என்பதால் இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்வேன்.

வணிக ரீதியாக இந்த ஆண்டின் முக்கியமான படமாக அசுரன் இருக்கும். அது உறுதி,” என்றார்.

உலகம் முழுவதும் வரும் அக்டோபர் 4-ம் தேதி 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் அசுரன் வெளியாகிறது.

இதில் அமெரிக்காவில் மட்டும் 110 அரங்குகளில் அசுரன் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Producer Kalaipuli Thanu shares his experience with Asuran

BIGIL BREAKING விஜய் அண்ணாகிட்ட பாக்குற அன்பு வெறித்தனம்.: கதிர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் தந்தை மகன் என இரு வேடங்களில் விஜய் நடித்துள்ள படம் பிகில்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்ட நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் பணியாற்றியவர்கள் படம் குறித்து பேசி வருகின்றனர்.

பாடலாசிரியர் விவேக்…

சிங்கப் பெண்கள் மத்தியில் விஜய் ஒரு சிங்கம் போல வாழ்ந்துள்ளனர்.

கலை இயக்குனர் முத்துராஜ்…

விஜய் சார் பெர்மான்ஸ்ல கிழிச்சுட்டாரு

எடிட்டர் ரூபன்..

நான் பிகில் படத்தை எடிட்டிங் செய்யும்போது தான் புட் பால் ரூல்ஸ் தெரிஞ்சிக்கிட்டேன்.

ஒளிப்பதிவாளர் விஷ்னு…

அவர் இந்த படத்துல ஆடியிருக்கிற ஆட்டமே வேற. விஜய் ரசிகனாக இருப்பது எனக்கு பெருமை

நடிகர் கதிர் பேசியதாவது…

உங்க அன்பின் அடையாளம் தான் விஜய் அண்ணா. உங்களோட ஒட்டு மொத்த அன்பை அவர் கிட்ட பாக்குறேன். அது ஒரு வெறித்தனம் என்றார்.

Bigil team members shares their experience with Vijay

BREAKING பிகில் ஆடியோ: விஜய்யின் அரசியல் ஆசையை தூண்டிய ஆனந்த்ராஜ்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

டிவி நடிகை ரம்யா மற்றும் மிர்ச்சி சிவா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

ஒரு ரசிகன் தலைவனுக்கு அடித்தால் அது விசில். ஒரு தலைவன் தன் ரசிகனுக்கு அடித்தால் அதான் பிகில் என பன்ச் பேசினார் சிவா.

திரளான ரசிகர்கள் மத்தியில் விஜய் மற்றும் அவரது பெற்றோர்களும் வந்துள்ளனர்.

இந்த நிலையில் பிகில் படத்தில் நடித்துள்ள ஆன்ந்த்ராஜ் மேடையில் பேசி வருகிறார்.

அவர் பேசியதாவது….

இந்த சத்தம்தான் மாநிலம் தாண்டி, நாட்டை தாண்டி, கண்டம் தாண்டி, ஆகாயம் வரை செல்லும்.

விஜய்யின் மகனுடன் நான் நடிக்க வேண்டும். அவன் நடிக்க வந்த பிறகு விஜய் எங்க இருப்பாருன்னு நீங்க தான் முடிவு செய்யனும் என பேசினார் ஆனந்த் ராஜ்.

இது விஜய்யின் அரசியல் ஆசையை தூண்டும் வகையில் இருப்பதால் அவரின் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

Anandraj speech about Vijays Political entry at Bigil audio launch

More Articles
Follows