தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இசைஞானி இளையராஜா இசைக்கு மயங்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? கடந்த 45 வருடங்களுக்கு மேலாக இந்திய மக்களை தன் இசையால் தாலாட்டி வருபவர்.
தற்போது பல இளம் இசையமைப்பாளர்கள் உருவாகி வந்தாலும் இன்றும் எல்லோர் இல்லங்களிலும் இரவில் ஒலிக்கும் இசை இளையராஜாவின் இசையாகத்தான் இருக்கும்.
எனவே இளையராஜாவும் தன் ரசிகர்களுக்காக இசை நிகழ்ச்சிகளை அவ்வப்போது பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறார்.
அண்மையில் துபாய் நாட்டில் தன் இசை கச்சேரியை நடத்தினார். அதன்பின்னர் அங்குள்ள ஏஆர். ரஹ்மான் ஸ்டூடியோவுக்கும் சென்று வந்தார்.
இதன்பின்னர் தமிழக சுற்றலாத்துறை சார்பில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினார் இசைஞானி.
இந்த நிலையில் அடுத்ததாக கோவை மாநகரில் தன் இசை விருந்தை தன் பிறந்தநாளான ஜூன் 2ம் தேதியில் வழங்கவுள்ளார்.
கோவையில் உள்ள கொடீசியா வளாகத்தில் இந்த இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Music concert in the presence of the people on Ilayaraja’s birthday