தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மையில் நடைபெற்ற 2.0 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அப்படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானை கடவுளின் குழந்தை என பாராட்டினார் ரஜினிகாந்த்.
இரண்டு ஆஸ்கர் விருதுகளை ஒரே நேரத்தில் வென்று சாதித்த ஏஆர். ரஹ்மான் அவர்கள் தன் வாழ்க்கையில் 25வது வயதில் தற்கொலைக்கு முயன்றாராம். அது பற்றிய விவரம் வருமாறு….
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என்றால் ஒரு புத்துணர்ச்சி, ஒரு உத்வேகம், ஒரு ஊக்கம். இப்படிப்பட்ட இசையையும் தந்து, இனிமேல் ஏதேனும் வேண்டுமா என்றளவுக்கு வெற்றிகளையும் குவித்து உச்சத்தில் இருக்கும் ஏ.ஆர். ரஹ்மானுக்கும், வாழ்க்கையில் ஒரு இருண்ட காலம் இருந்திருக்கிறது.
“எனது 25வது வயது வரை தற்கொலை செய்வது பற்றி அடிக்கடி சிந்தித்திருக்கிறேன்.
என்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அப்போது இருந்ததில்லை. என் தந்தை இறந்ததும், வேறு சில நிகழ்வுகளும், ஒரு வெறுமை நிலைக்கு என்னை அழைத்துச் சென்றது.
ஆனால், அந்த தருணங்கள், ஒருவகையில் என் அச்சத்தை போக்கின. நான் வேறு ஒருவனாக மாற வேண்டும் என விரும்பினேன்.” என்று Notes of a Dream என்ற தனது சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் மனம் திறந்தார் ஏ.ஆர். இந்த புத்தகத்தை எழுத்தாளர் கிருஷ்ணா திரிலோக் எழுதியுள்ளார்.
மேலும், ” நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ள முதலில், உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்ய வேண்டும். உங்கள் உள் மனம் சொல்வதை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். அது கொஞ்சம் கடினமான விஷயம். எனக்கு என் அசல் பெயரான திலிப் குமார் என்ற பெயர் பிடிக்கவில்லை…
ஏன் அந்தப் பெயரை வெறுத்தேன் என்றும் எனக்குத் தெரியவில்லை.என் ஆளுமைக்கு அந்தப் பெயர் சரிப்பட்டு வரவில்லை என்பதை உணர்ந்தேன்…
நான் வேறொருவனாக மாற ஆசைப்பட்டேன், அந்தப் பெயர் என் முழு இருப்பையும் விளக்குவதாக அமைய வேண்டும் என்று நினைத்தேன்.
கடந்தகாலச் சுமைகளை இறக்கி விட்டு வர விரும்பினேன். பெயர் உட்பட.
நீங்கள் யார் என்பதை தோன்றச் செய்து அதனை வெளியே விட வேண்டும்.
ஆகவே உங்கள் மன ஓவியப் புத்தகத்தில் நீங்கல் கருத்துச் சித்திரம் வரையும் போது உங்களைப் பற்றி நிறைய சுயபரிசீலனைகள் தேவை.
உங்களில் நீங்கள் ஆழமாக இறங்கிச் செல்ல வேண்டிய தேவை உள்ளது. உங்கள் அகத்தின் குரலை நீங்கள் கேட்க வேண்டும், அது கடினமானது.
ஒருமுறை இதைச் செய்துவிட்டால் நாம் தொலைந்து போய் நம்மையே மறந்து விடுவோம்.
நான் என்னுள் ஆழமாக இறங்கும் போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்கும், நான் எதார்த்தத்துக்கு திரும்புவேன், ஆனால் நான் மீண்டும் என்னுள் ஆழமாகச் செல்ல முடியாமல் போகும்.
அதனால்தான் நான் அதிகாலை 5 அல்லது 6 மணி அல்லது நள்ளிரவுகளில் பணியாற்றுகிறேன். செய்ததையே செய்து கொண்டிருந்தால் சோர்வே ஏற்படும். பல்வேறு விஷயங்களை நாம் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை பயணம் செய்வது, அதிக நேரம் செலவழிக்க முடியாவிட்டாலும் என் குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிப்பது அழகானது, எனக்கு அது மிகவும் உதவுகிறது” …என்று சொல்லி இருக்கிறார்.
®Notes of a Dream: The Authorized Biography of AR Rahman”
Music composer AR Rahman contemplated suicide till he was 25