ஒரு அறிவிப்பு தரப்போகிறோம் என்பதையே ஒரு அறிவிப்பாக்கும் சினிமாக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படம் ரிலீசுக்கு தயாரானால் டிரைலர் வெளியீடு, இசை வெளியீடு, பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளிட்ட 2 3 நிகழ்ச்சிகளே இருக்கும்.

ஆனால் தற்போதெல்லாம் மார்க்கெட்டிங் யுக்தி என்ற பெயரில் ஒவ்வொரு சிங்கிள் டிராக்காக வெளியிட்டு அதை மில்லியன் கணக்கில் ஹிட்டாக்கி தங்கள் படத்தை பேசும் பொருளாக்குவது தயாரிப்பாளர்கள் கை வண்ணம்.

நிச்சயம் அதில் எந்த தவறும் இல்லைதான். போட்டிகள் நிறைந்த இந்த உலகில் எதையாவது செய்து நம் பொருளை விளம்பரப்படுத்த வேண்டும்.

கோடிக்கணக்கில் தயாரிக்கப்பட்ட தன் படத்தை சம்பந்தப்பட்டவர்கள் விளம்பரப்படுத்துவது நியாயமான ஒன்றுதான்.

ஆனால் ஒரு பாடல்/ஒரு அப்டேட் வெளியாவதை அறிவிக்கும்போது… அந்த பாடல் எப்போது? எந்த நேரம் வெளியீடு என்பதை முன்பே அறிவிக்காமல் இன்று மாலை அல்லது நாளை காலை ஒரு அறிவிப்பு வரும் காத்திருங்கள் என்பார்கள்.

அதனையடுத்து வரும் மற்றொரு அறிவிப்பில் அடுத்த வாரம் இந்த நாளில் நாங்கள் ஒரு பாடலை வெளியிட உள்ளோம் என்பதை அறிவிப்பார்கள்.

காலையில் முதல் அறிவிப்பு வெளியாகும் போதே குறிப்பிட்ட பாடல் இந்த நாளில் இந்த நேரத்தில் வெளியாகும் என்பதை முறையாக அறிவிக்கலாமே? என்பதே பலரின் கேள்வியாகவுள்ளது.

ஒருவேளை இதுவும் மார்கெட்டிங்கின் அடுத்த கட்ட யுக்தியோ..?

movie promotions atrocities in kollywood

பாசிட்டிவ் பாலிடிக்ஸ்.: எனது குரு ரஜினியால் மட்டுமே முடியும்; ஆன்மிக அரசியலில் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம்…

இன்று நான் மிக முக்கியமான ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன். கடந்த மாதம் நான் ஒரு விஷயத்தை பதிவு செய்திருந்தேன் அரசியலில் நுழையாமல் கூட நாங்கள் சேவை செய்ய முடியும் என்று.

இந்த அறிக்கையின் பின்னணியில் எனது காரணம் என்னவென்றால், நான் பல சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருக்கும்போது, எனது நண்பர்கள், ரசிகர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் பல அரசியல்வாதிகள் என்னிடம் கேட்கிறார்கள், நான் அரசியலில் நுழைவதற்கு இதையெல்லாம் செய்கிறேனா என்றும், மேலும் சிலர் என்னால் அரசியலில் நுழைந்தால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

கொரோனா காலகட்டத்தில் நான் செய்த சேவையின் மூலம் அரசியலில் நுழையும் அழுத்தம் அதிகரித்துள்ளது.

“நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம். இன்று நான் முக்கியமான ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அரசியலுக்குள் நுழையாமல் சமூக சேவை செய்வேன் என்று கடந்த மாதம் எனது சமூகவலைதள பதிவில் தெரிவித்திருந்தேன். அதன் பின்னணியில் இருக்கும் காரணத்தை இங்கே கூறுகிறேன்.

நான் ஏராளமான சமூக சேவை பணிகளை செய்து வருவதால் எனது நண்பர்கள், அரசியல்வாதிகள், செய்தியாளர்கள் ஆகியோர் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்பதால் தான் இவற்றை செய்கிறேனா என்று கேட்கின்றனர். சிலர் அரசியலில் நான் இணைந்தால் இன்னும் அதிகமாக சேவை செய்ய முடியும் என்று அறிவுரை கூறினார்கள்.

முக்கியமாக கொரோனா பிரச்னைக்கு பின்னர் அழுத்தம் அதிகரித்திருக்கிறது. அனைவருக்கும் நான் ஒரு பொதுவான நபர் என்று சொல்ல விரும்புகிறேன். ஆதரவற்ற குழந்தைகளுக்காக எனது வீட்டில் ஒரு ஹோம் நடத்தி வருகிறேன். எனக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் நான் அரசிடம் உதவி கோருகிறேன். கலைஞர், ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பலரது இதய அறுவை சிகிச்சைகளுக்காக உதவி செய்துள்ளனர்.

அதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோரும் நான் சேவை செய்ய பல்வேறு வகைகளில் உதவி வருகிறார்கள்.

அரசியலில் நுழைந்தால் தனி மனிதனாக உதவி செய்வதை விட அதிகம் செய்ய முடியும் என்பதை நான் அறிவேன்.

எதிர்மறை அரசியல் செய்வது எனக்கு பிடிக்காது. அரசியலில் இருந்தால் எதிர்மறையாக ஒருவரை பேச வேண்டியிருக்கும். ஏனென்றால் நான் அனைவரையும் மதிக்கிறேன்.

யாராவது ஒருகட்சி தொடங்கி அதில் எதிர்மறை அரசியல் செய்ய வேண்டாம், யாரைப்பற்றியும் தவறாக பேசி புண்படுத்த வேண்டாம் என்ற நிலை இருந்தால் அப்போது நான் அவர்களுடன் சேர்ந்து பொது சேவையில் ஈடுபடுவேன்.

இந்தியாவில் அப்படி ஒரு நேர்மறை அணுகுமுறையுடைய கட்சியை ஆரம்பிக்க எனது குரு ரஜினிகாந்தால் மட்டுமே முடியும் என்று நம்புகிறேன்.

அரசியல் காரணங்களுக்காக அவர் இதுவரை யாரையும் காயப்படுத்தியதில்லை. அவர் கட்சி ஆரம்பித்தால் யாரையும் காயப்படுத்தமாட்டார் என்று நம்புகிறேன்.

ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் தொடங்கினால் அவரது லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவனாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்ய காத்துக் கொண்டிருக்கிறேன். சேவையே கடவுள்.” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இறுதியாக அந்த அறிக்கையில்… நவம்பர் மாதத்தைக் குறிப்பிட்டு கேள்விக்குறியுடன் முடித்திருக்கிறார்.

இதன் மூலம் நடிகர் ரஜினிகாந்த் நவம்பர் மாதத்தில் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக உறுதியாகியுள்ளது.

Master Raghava Lawrence announces his political entry joining with Rajinikanth

பிரபல பின்னணி பாடகர் மதுபாலகிருஷ்ணன் தமிழில் பாடும் முதல் ஆல்பம் பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி, அஜித், பிரஷாந்த்* போன்ற முன்னணி நடிகர்களுக்காக பாடிய பிரபல இந்திய பின்னணி பாடகர் மதுபாலகிருஷ்ணனை யாராலும் மறக்க முடியாது.

தனக்கென்றும் தனது குரலுக்கும் உலகளவில் பெரும் ரசிகர்களை கொண்டுள்ளவர் என்பது தான் உண்மை. இவர் இப்போது தமிழில் முதல் முதலில் ஆல்பம்காக *என்ன நடந்தது, என்ன நடந்தது* என்று தொடங்கும் இனிமையான பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

இந்த ஆல்பம் பாடலில் நடிக்க இருக்கும் முன்னணி நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றது அக்குழுவினர்.

இவர் சமீபத்தில் *உலகளவில் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி2ம்* பாகத்தின் மலையாளம் படத்தில் ஒரு புகழ்பெற்ற *ஆர்க்கும் தொல்காதே* பாடலையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

singer madhu balakrishnans new tamil album details

அரசியலுக்கு வருகிறாரா மறைந்த வசந்தகுமார் மகன் நடிகர் விஜய்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் தொழிலதிபர் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார்.

இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி காலமானார்.

அவருடைய உடல் சொந்த ஊரில் ஆகஸ்ட் 30-ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது.

வசந்தகுமார் மறைவால் கன்னியாகுமாரி நாடாளுமன்றத் தொகுதி காலியாகியுள்ளது.

மறைந்த வசந்தகுமாரின் 7-ம் நாளை அனுசரிக்கும் வகையில் கன்னியாகுமரியில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.

இதில் அவரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் கலந்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது…

கட்சியில் அப்பாவுக்குக் கொடுத்த பொறுப்பை அவர் சிறப்பாகச் செய்தார்.

அவரது மறைவால் கட்சி என்ன முடிவெடுக்கிறதோ, அதன்படிதான் செயல்படுவோம்.

அரசியல் களத்தில் இறங்குவது குறித்து முடிவு எடுக்கவில்லை. குடும்பத்துடன் ஆலோசிக்க வேண்டும்.” என கூறினார் விஜய் வசந்த்.

‘சென்னை 28’, ‘நாடோடிகள்’, ‘என்னமோ நடக்குது’, ‘சென்னை 28 பார்ட் 2’, ‘அச்சமின்றி’, ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் விஜய் வசந்த்.

வெப் சீரிஸ் தயாரிப்பாளராகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளம் வயதிலேயே தேசிய விருதை வென்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் தற்போது தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’, செல்வராகவனுடன் ‘சாணிக் காயிதம்’ ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.

தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரி பாட்டா’ மற்றும் ‘மிஸ் இந்தியா’, ‘ரங் தே’ ஆகிய படங்களில் நடிக்கிறார்.

இந்த நிலையில் இவர் ஒரு வெப் சீரிசை தயாரித்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் இது வெறும் வதந்தி என தெரிய வந்துள்ளது.

கீர்த்தியின் அப்பா சுரேஷே ஒரு பிரபல தயாரிப்பாளர் தான்.

ஆனால் கீர்த்தியின் கவனம் முழுவதும் தற்போது நடிப்பில் இருப்பதால் தயாரிப்பில் கவனம் செலுத்த விரும்பவில்லையாம்.

வெடிப்பது செய்தியாகவும் நிவாரணம் உதவியாகவும் கடக்கிறது..; கடலூர் வெடி விபத்தில் 9 பேர் மரணம் குறித்து கமல் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே குருங்குடி என்ற பகுதியில் நாட்டு வெடி தயார் செய்யும் தொழிற்சாலை உள்ளது.

இன்று (செப். 4) காலை குருங்குடி ஐயங்குளம் அருகே உள்ள காந்திமதி என்பவருக்குச் சொந்தமான நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீபாவளிப் பண்டிகையையொட்டி நாட்டு வெடி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, வெடி மருந்தை இடிக்கும்போது திடீரென வெடி மருந்து வெடித்துள்ளத. இதில் தொழிற்சாலை வெடித்துச் சிதறியது.

இந்த வெடி விபத்தில் தொழிற்சாலை உரிமையாளர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடையின் உரிமையாளர் காந்திமதி (58), அதே ஊரைச் சேர்ந்த மலர்க்கொடி (65), லதா (40), சித்ரா (45), ராசாத்தி (48) ஆகிய 5 பேரும் சம்பவ இடத்தில் உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த ருக்மணி (38), ரத்னாயாள் (60), தேன்மொழி (35), அனிதா (26) ஆகிய 4 பேரும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களும் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வெடி விபத்து அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து நடிகரும் மநீம தலைவருமான கமல் தன் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில்…

மீண்டும் ஒரு பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து.9 உயிர்பலிகள்,குருங்குடி கிராமத்தில்.வருடந்தோறும் வெடிப்பது செய்தியாகவும்,இறப்புகள் இழப்பிற்கான அரசு நிவாரண உதவியாகவும் கடக்கிறது.தொழிலாளர்களின் குடும்பங்கள் கதியற்று நிற்கின்ற அவலம் தீர,அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே தீர்வு

இவ்வாறு பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

More Articles
Follows