‘கேஜிஎப்’ பட இயக்குனர் & பிரபாஸ் கூட்டணியில் மோகன்லால்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யஷ் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவான படம் ‘கேஜிஎப்’.

இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பிரஷாந்த் நீல்.

இவர் தற்போது கேஜிஎஃப் 2ஆம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இதனையடுத்து பாகுபலி நாயகன் பிரபாஸ் உடன் இணைந்து ‘சலார்’ என பிரம்மாண்டமான ஆக்சன் படத்தை உருவாக்கவுள்ளாகர் என்பதை நாம் முன்பே தளத்தில் தெரிவித்திருந்தோம்.

இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க மலையாள நடிகர் மோகன்லாலை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு அவருக்கு பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டு வருகிறதாம்.

அதாவது ரூ. 15 முதல் 20 கோடி ரூபாய் வரையில் சம்பளம் பேசப்படுகிறதாம்.

ஆனால் இதுவரை மோகன்லால் தரப்பில் எதுவும் சொல்லப்படவில்லை.

கமலுடன் உன்னைப் போல் ஒருவன், விஜய்யுடன் ஜில்லா ஆகிய மற்ற மொழி படங்களில் நடித்துள்ளார் மோகன்லால்.

அதுபோல் தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் உடன் ‘ஜனதா கேரேஜ்’ படத்திலும் நடித்துள்ளார்.

Mohanlal joins Prabhas new film ?

தியேட்டர் ஓனர்களை ப்ளாக் மெயில் செய்கிறதா ‘மாஸ்டர்’ டீம்..? விஷால் கார்த்தி தனுஷ் என்ன செய்வார்கள்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘மாஸ்டர்’.

ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியாக வேண்டிய இந்த படம் கிட்டதட்ட 10 மாதங்களாக கொரோனா ஊரடங்கால் வெளியாகாமல் உள்ளது.

தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் 100% பார்வையாளர்களை தியேட்டரில் அரசு அனுமதிக்கவில்லை.தற்போது வரை 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளித்துள்ளது.

இதனால் தியேட்டர்களில் பெரிய படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை.

மற்ற படங்களுக்கும் குறைவான கூட்டமே வருகிறது.

மாஸ்டர் போல பெரிய படங்கள் தியேட்டர்களில் கூட்டம் கூடும் என தியேட்டர்கள் உரிமையாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ட்விட்டரில் பேசப்பட்ட தென்னிந்திய படங்கள்.: ரஜினி லாஸ்ட்.. விஜய் பர்ஸ்ட்… அஜித் 3.. சூர்யா 5..

இதனால் இதனை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் மாஸ்டர் படம் வெளியானால் மட்டுமே முதலீட்டு தொகையை அள்ள வாய்ப்புள்ளதாக தயாரிப்பாளர் நினைக்கிறார்.

ஆனால் இதற்கு எப்படி ஒத்துழைக்க முடியும்? என தியேட்டர் உரிமையாளர்கள் குழப்பதில் உள்ளனர்.

பொங்கல் சமயத்தில் தனுஷ் நடித்த ‘ஜகமே தந்திரம்’, விஷால் நடித்துள்ள ‘சக்ரா’, கார்த்தி நடித்துள்ள ‘சுல்தான்’ ஆகிய படங்களும் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளன.

மாஸ்டர் படத்திற்கு மட்டுமே வழிவிட்டால் மற்ற தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். ஒருவேளை அவர்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்துவிட்டால் நமக்கு அடுத்தடுக்க இழப்புகள் ஏற்படும் என்பதால் குழப்பம் நீடிக்கிறதாம்.

ஒருவேளை பொங்கல் தினத்திற்குள் 100% பார்வையாளர்களை அரசு அனுமதித்தால் மட்டுமே இதற்கு சரியான தீர்வாக இருக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Do Master team blackmail theatre owners?

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர்கள் சந்திப்பு..; ரமேஷ் ஷனம் சுசீ நிஷா மிஸ்ஸிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக தொடங்கி 60 நாட்களை கடந்துவிட்டது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, ரேகா, வேல்முருகன் ஆகியோர் வெளியில் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரேகா, வேல்முருகன் ஆகியோர் இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் ரேகா.

அதில்… ரமேஷூம், நிஷாவும் இப்போதுதான் வெளியே வந்துள்ளனர். அவர்கள் ஓய்வு எடுக்கட்டும்.

சுசித்ரா, சனம் ஆகியோர் பிஸியாக இருக்கிறார்கள். சனம் ஷெட்டியை போனில் பிடிக்க முடியவில்லை. எனவே அவர்கள் வரவில்லை.

பிக்பாஸ் வீட்டுக்குள் எங்களுக்கு போட்டி. வெளியே வந்தால் நாங்கள் எல்லோரும் ஒன்றுதான்.” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் ரேகா.

Bigg Boss 4 reunion Rekha shares video

மீண்டும் அரசியலில் விஷால்..; தன் நண்பர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் சீரியல் நடிகர்கள் தற்போது தான் அரசியலுக்கு வருகின்றனர். ஆனால் இளம் வயதிலேயே அரசியலுக்கு வர ஆசைப்பட்டவர் நடிகர் விஷால்.

கடந்த 2017ம் ஆண்டு நடைப்பெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தார் விஷால்.

ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டதால் அரசியலில் ஈடுபடவில்லை.

அதுபோல நடிகர் சங்கத்திலும் சரி தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் சரி இவரது ஆதரவு அணிகள் தான் முன்பு பதவியில் இருந்தன.

இந்த நிலையில் 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட விஷால் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முறை விஷால் மக்கள் நல இயக்க நண்பர்களுடன் இணைந்து இத்தேர்தலை சந்திக்கவிருக்கிறாராம் விஷால்.

Actor Vishal to contest in TN assembly election

நடிகை சித்ரா மரணம்..: தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 9 தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார் பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியல் நடிகை சித்ரா.

அவரது மரணம் தற்கொலைதான் என முதற்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்தனர்.

அவர் தற்கொலைக்கு என்ன காரணம்? யார் காரணம்? என்பது தொடர்பாக அவரை பதிவு திருமணம் செய்த கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஒரு பெண் திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் உயிரிழந்தால் வரதட்சணை தடுப்புச்சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்வது வழக்கம் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

எனவே அதன்படி சித்ராவின் தாயார் விஜயா, தந்தை காமராஜ் மற்றும் அக்கா சரஸ்வதி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணை மேற்கொண்டார்.

விசாரணைக்கு பின்னர் வெளியே வந்த சித்ராவின் தாயார் விஜயா.. தனது மகள் சித்ராவின் தற்கொலைக்கு, அவரின் கணவர் ஹேம்நாத்தான் காரணம் என மீண்டும் குற்றம் சாட்டினார்.

மேலும் தனக்கும், தன் மகள் சித்ராவுக்கும் எந்தவொரு மனக்கசப்பும் இல்லை எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் சித்ரா கணவர் ஹேம்நாத்.

Chennai police arrested Chitra’s husabnd Hemanath Kumar

சீமானுக்கு விவசாயி… தினகரனுக்கு குக்கர் கிடைத்தது..; கமலுக்கு டார்ச் லைட் கிடைக்கல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்தாண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனால் அனைத்து அரசியல் கட்சியனரும் தேர்தல் பிரச்சாரத்துக்கு தயாராகி வருகின்றனர்.

தமிழக அரசியல் களமும் பரபரப்பாக காணப்படுகிறது.

திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட பெரிய கட்சிகள் வழக்கம்போல தங்கள் பணிகளில் மும்முரமாக உள்ளனர்.

நாம் தமிழர், மக்கள் நீதி மையம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் கடந்த தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தையே அடுத்த தேர்தலிலும் ஒதுக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி வருகின்றன.

அதன்படி தினகரனின் அமமுகவிற்கு குக்கர் சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், கமலின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு அவர்கள் கேட்ட டார்ச் லைட் சின்னம் தமிழகத்தில் ஒதுக்கப்படவில்லை. ஆனால் புதுவையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

டார்ச் லைட்டையே முன்னிறுத்தி பிரச்சாரத்தில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

Election Commission denies Torchlight to Kamal Haasan’s MNM

More Articles
Follows