கேரளாவிலும் அசத்த போகும் அசுரன்; கைகொடுக்கும் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அசுரன்.

ஜிவி, பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி தானு தயாரித்துள்ளார்.

இந்த படம் நாளை வெளியாகவுள்ளது. இதனிடையில் இதன் கேரள வெளியீட்டு உரிமையை கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மேக்ஸ்லேப் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தனுஷின் படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு இருப்பது ஒரு காரணம் என்றாலும் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் என்பதும் இங்கே கவனித்தக்கது.

கேரளாவில் அதிக தியேட்டர்களில் இந்த படத்தை வெளியிடுகின்றனர்.

தளபதி & மக்கள் செல்வன் இணையும் படம் பூஜையுடன் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தளபதி 64 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீசும் நடிக்க உள்ளார்.

நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க முக்கிய வேடத்தில் சாந்தனு நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படம் பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டது. இதில் விஜய், விஜய் சேதுபதி, அனிருத், மாளவிகா மோகனன், சாந்தனு, ஸ்டண்ட் சில்வா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாகும் அனில் கபூர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

ரூ.200 கோடி செலவில் தயாராகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங்கை சென்னையில் முக்கிய பகுதிகளில் படமாக்கி வருகின்றனர்.

சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டலுக்கு வயதான சேனாதிபதி (கமல்) வருவது போன்ற காட்சியை அண்மையில் படமாக்கினர்.

அதுபோல தன் வர்ம கலையால் வில்லன்களை தாக்கும் கமல் காட்சிகளை சென்னை வளசரவாக்கத்தில் படமாக்கினர்.

இந்த நிலையில் ஹிந்தி நடிகர் அனில்கபூர் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனில் கபூர் ஏற்கனவே முதல்வன் படத்தின் இந்தி ரீமேக்கான நாயக் படத்தில் நடித்துள்ளார்.

இந்தியன்-2 சூட்டிங் ஸ்பாட்டில் அனில்கபூர் இருக்கும் புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.

Bollywood Actor Anil Kapoor joins the cast of Indian 2

BREAKING தளபதி 64: பேராசிரியர் மாணவனாக இணையும் விஜய்-சாந்தனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்.

இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 64 என்று பெயரிட்டுள்ளனர்.

அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் விஜய் உடன் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் மற்றொரு முக்கிய கேரக்டரில் சாந்தனு இணைந்துள்ளார்.

விஜய் பேராசிரியர் கேரக்டரிலும் சாந்தனு கல்லூரி மாணவராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சாந்தனு கூறியதாவது… “கனவுகள் நிஜமாகும். விஜய்யுடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி என்றும், படத்தில் வாய்ப்பளித்ததற்காக நன்றி என்றும் கூறியுள்ளார்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அண்மையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், தளபதி 64 படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக உள்ளதாகவும், நிச்சயம் பிளாக் பஸ்டர் படமாக அமையும் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகியாக மாளவிகா மோகனன் இணைந்துள்ளார் என்பதையும் அறிவித்துள்ளது படக்குழு.

Shanthanu team up with Vijay in Thalapathy 64

https://twitter.com/imKBRshanthnu/status/1179329197115879424?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1179329197115879424&ref_url=https%3A%2F%2Ftamil.news18.com%2Fnews%2Fentertainment%2Fcinema-shanthanu-joins-thalapathy-64-movie-msb-212253.html

சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தலைப்புக்கு வக்கீல் நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தை இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கி வருகிறார். கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதே படத்தலைப்பில் தெலுங்கிலும் ஒரு படம் தயாராகிவருகிறது.

அதுபற்றிய விவரம் வருமாறு…

நான் “Tribal Arts” நிறுவனம் சார்பாக தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன் (Mem No: 3812). எனது நிறுவனத்தின் பெயரில் கடந்த 04.07.2017- அன்று “ஹீரோ” என்ற படத்தலைப்பினை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து, முறையாக புதுப்பித்து 03.06.2020-ம் ஆண்டு வரை உரிமம் பெற்றுள்ளேன் (Title Ref No : 7123) .

“ஹீரோ” என்ற எங்களது தலைப்பில் ஆனந்த் அண்ணாமலையின் எழுத்து – இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது தொடர்பான செய்திகள் பத்திரிக்கை, தொலைக்காட்சி, மற்றும் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.

இந்த சூழ்நிலையில் சில மாதங்களாக தமிழ் மொழியில் KJR studios என்கிற தயாரிப்பு நிறுவனம் “ஹீரோ” என்ற தலைப்பில் வேறொரு கதாநாயகனை (சிவகார்த்திகேயன்) வைத்து படம் தயாரிப்பதாக பத்திரிக்கை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மற்றும் அனைத்து ஊடகங்களிலும் செய்திகளை வெளியிட்டு வந்தனர்.

இதனை கண்டு தயாரிப்பாளர் சங்கத்தை நாங்கள் அணுகிய போது, அவர்கள் கடந்த 16 ஏப்ரல் 2019 அன்று எங்களது தலைப்பினை பயன்படுத்திவரும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு இப்படத்தின் தலைப்பினை பயன்படுத்தக் கூடாது என்று கெளரவ செயலாளர் திரு. எஸ். எஸ். துரைராஜ் கையொப்பமிட்ட கடிதத்தை அனுப்பி வைத்து, கடிதத்தின் நகலையும் எங்களுக்கு கொடுத்து உறுதி அளித்தார்கள்.

ஆனால் KJR studios தயாரிப்பு நிறுவனம், தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை மீறி (02.09.2019) அன்று பத்திரிக்கை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மற்றும் அனைத்து ஊடகங்களிலும் “ஹீரோ” என்ற தலைப்பில் போஸ்டர்களை வெளியிட்டனர்.

ஆகவே இந்த கடிதத்தின் வாயிலாக KJR studios தயாரிப்பு நிறுவனத்திற்க்கு ADVOCATE NOTICE அனுப்பபட்டுள்ளது.

Lawyer Notice to KJR Studios for Hero movie title issue

தொழிற்சாலை பகுதிகளில் மரங்களை நடும் கார்த்தியின் உழவன் பவுண்டேசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கார்த்தி அவர்களின் உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பானது வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்து பல அத்தியாவசியமான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

ஏற்கெனவே உழவர் விருதுகள் என்ற பெயரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட உழவர்கள் ஐந்து பேரை தேர்ந்தெடுத்து உழவர்களை கெளரவப்படுத்தி அடையாளப்படுத்த அவர்களுக்கு தலா ஒரு இலட்சத்திற்கான காசோலையும் விருதுகளையும் வழங்கினர்.

அதேபோல் மரம் கருணாநிதி அவர்களின் சுற்றுச்சூழல் சேவைக்காக அவருக்கு 50 ஆயிரம் வழங்கினர்.

பிறகு உழவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக திருவண்ணாமலையில் 83 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள விண்ணமலை ஏரியை சீரமைத்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயத்திற்கான கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு 1.50 இலட்சத்திற்கான பரிசுப் போட்டி அறிவித்துள்ளது.

தற்போது காற்று மாசுபாடுகளை குறைக்கவும் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் தொழிற்சாலைகள் அதிகம் நிரம்பியுள்ள மறைமலைநகரில் மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகள் ஆம்பினால் ஆம்னிகனெக்ட் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து இன்று தொடங்கப்பட்டது.

இந்த மரக்கன்றுகள் நடும் பணியை மறைமலை நகராட்சி ஆணையர் துவக்கி வைத்தார். இதில் நகராட்சி பொறியாளர், ஆம்பினால் கம்பெனியின் நிர்வாகிகள், உழவன் ஃபவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.

Actor Karthis Uzhavan Foundation Social service news

More Articles
Follows