தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (வயது 91) இன்று மாலை 6:40 மணிக்கு அவரது இல்லத்தில் காலமானார்.
முகவரி: மாதா கேஸல்,
20/35, நாதமுனி தெரு, தி நகர், சென்னை
மகன்: ஏ. ரவிச்சந்தர்
மகள்கள்: ஏ. தாராதேவி மற்றும் ஏ. ஆஷாதேவி
நாளை (நவம்பர் 21, திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை அவரது உடல் அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.. பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்கள்….
தனது ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயர் யேசுதாஸில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் மாற்றிக் கொண்டார்.
1960களில் எம் ஜி ஆர் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரத்தின் படங்களுக்கு ஆரூர் தாஸ் வசனம் எழுதியுள்ளார். இவரது வசனங்கள் அந்த படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்துள்ளன.
எம்ஜிஆர் நடித்த …. தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், அன்பே வா, குடும்பத்தலைவன், நீதிக்குப்பின்பாசம், வேட்டைக்காரன், தாய்க்குத் தலைமகன், ஆசைமுகம், பெற்றால்தான் பிள்ளையா?,
சிவாஜிகணேசன் நடித்த… பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார், பார்த்தால் பசி தீரும், புதிய பறவை, இருமலர்கள், தெய்வ மகன், பைலட் பிரேம்நாத், நான் வாழவைப்பேன், விஸ்வரூபம், தியாகி, விடுதலை, அன்புள்ள அப்பா.
ஜெமினிகணேசன் நடித்த… வாழவைத்த தெய்வம், சவுபாக்கியவதி, திருமகள், பெண் என்றால் பெண் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
1955 முதல் 2014 வரையில் அவர் வசனகர்த்தாவாக இயங்கியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் கமலஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.
ஆரூர் தாஸ் மரணத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மண்ணில் பிறந்து ஆயிரம் திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரையுலகில் தனி முத்திரை பதித்த முதுபெரும் வசனகர்த்தா ஆரூர் தாஸ் அவர்கள் உயிரிழந்ததையடுத்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். https://t.co/9C0zRnWzSj
அவரது அறிக்கை இதோ…