தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தில் மக்கள் தொகை எட்டு கோடியாக இருந்தால் அதில் ஒரு கோடி மக்கள் மட்டும் சென்னையில் வாழ்கின்றனர்.
எனவே சென்னை நகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்படும். 10 நிமிடத்திற்குள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஆகும். இந்த பிரச்சினையை சென்னை வாசிகள் தினம் தினம் அனுபவித்து வருகின்றனர்.
இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மாநில அரசு பல்வேறு மேம்பாலங்களையும் மெட்ரோ ரயில் திட்டங்களையும் கொண்டு வருகின்றது.
தற்போது சென்னையில் இரண்டாம் கட்டமாக சுமார் ரூ. 60 ஆயிரம் கோடி செலவில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஆழ்வார்பேட்டை வழியாக மெட்ரோ ரயில் பாலம் செல்கிறது.
எனவே மெட்ரோ பணிகளுக்கு இடையூறாக இருக்கும் தனியார் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடத்தில் ஆழ்வார்பேட்டை பகுதியில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சொந்தமான அலுவலகம் உள்ளது.
இங்கு மக்கள் நீதி மைய்யம் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அலுவலகம் போல செயல்பட்டு வரும் இந்த இல்லத்தில் சுமார் 170 சதுர அடி மெட்ரோ ரயில் பணிகளுக்கு தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே மெட்ரோ ரயில் பணிக்கு இந்த இடத்திலிருந்து 10 அடி வரையிலான நிலத்தை தங்களுக்கு வழங்கும் படி மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் நடிகர் கமலஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த சமயத்தில் கோயம்பேட்டில் மேம்பால பணிகளுக்காக அவரது திருமண மண்டபத்தில் சில பகுதிகள் இடிக்கப்பட்டது.
அங்கு தற்போது தேமுதிக அலுவலகம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Metro Administration Notice to Kamal Haasan’s Alwarpet office