தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2017 வருடம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மெர்சல்’.
விஜய் 3 வேடங்களில் நடித்திருந்த இப்படத்தை அட்லி இயக்க, ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் ரூ. 120 கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.
இந்நிலையில், பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழா 2018க்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில், சிறந்த வெளிநாட்டுப் படம் பிரிவில், விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வாக்குகளின் அடிப்படையில் ஏழு நாடுகளின் படங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு மெர்சல், சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சி.இ.ஓ ஹேமாருக்மணி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.