தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
படத்தலைப்பு வழக்கு, சென்சார் பிரச்சினை உள்ளிட்ட பல தடைகளை தகர்த்து மெர்சல் படம் நேற்று தீபாவளிக்கு வெளியானது.
இப்படத்திற்கு உலகமெங்கும் வரவேற்பு இருந்த போதிலும் நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் தமிழ் படத்தை வெளியிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
மெர்சல் படத்தை வரவேற்று பெங்களூரு மற்றும் மைசூரிலுள்ள விஜய் ரசிகர்கள் பேனர்கள் மற்றும் கட் -அவுட்கள் வைத்திருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த அமைப்புகள் பேனர்கள் மற்றும் கட்-அவுட்களைக் கிழித்தனர்.
இதனால், விஜய் ரசிகர்களுக்கும் கன்னட அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.
இந்த மோதல் சம்பவத்தால், ‘மெர்சல்’ படத்தின் காட்சிகள் ரத்துசெய்யப்பட்டன.
இதனால் ரசிகர்கள் கோஷமிட்டு கொந்தளிப்பில் கலைந்து சென்றனர்.
Mersal movie shows cancelled in Bangalore and Mysore