மெர்சல் படம் திரையிட எதிர்ப்பு; காட்சிகள் ரத்தானதால் ரசிகர்கள் கொதிப்பு

மெர்சல் படம் திரையிட எதிர்ப்பு; காட்சிகள் ரத்தானதால் ரசிகர்கள் கொதிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mersal movie shows cancelled in Bangalore and Mysoreபடத்தலைப்பு வழக்கு, சென்சார் பிரச்சினை உள்ளிட்ட பல தடைகளை தகர்த்து மெர்சல் படம் நேற்று தீபாவளிக்கு வெளியானது.

இப்படத்திற்கு உலகமெங்கும் வரவேற்பு இருந்த போதிலும் நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் தமிழ் படத்தை வெளியிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

மெர்சல் படத்தை வரவேற்று பெங்களூரு மற்றும் மைசூரிலுள்ள விஜய் ரசிகர்கள் பேனர்கள் மற்றும் கட் -அவுட்கள் வைத்திருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த அமைப்புகள் பேனர்கள் மற்றும் கட்-அவுட்களைக் கிழித்தனர்.

இதனால், விஜய் ரசிகர்களுக்கும் கன்னட அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.

இந்த மோதல் சம்பவத்தால், ‘மெர்சல்’ படத்தின் காட்சிகள் ரத்துசெய்யப்பட்டன.

இதனால் ரசிகர்கள் கோஷமிட்டு கொந்தளிப்பில் கலைந்து சென்றனர்.

Mersal movie shows cancelled in Bangalore and Mysore

அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார் விஜய்.? மெர்சலுக்கு தமிழிசை எச்சரிக்கை

அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார் விஜய்.? மெர்சலுக்கு தமிழிசை எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

BJP Chief Tamilisai Saundrajan slam Vijay for criticizing GST in Mersalசினிமா துறையினரே கதிகலங்கும் அளவுக்கு பல பிரச்சினைகளை முறியடித்து விஜய் நடித்த மெர்சல் படம் நேற்று வெளியானது.

அப்பாடா? ஒருவழியாக பிரச்சினை ஓய்ந்தது என்று படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் மெர்சல் பட பிரச்சினைகளை தீர்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரில் நன்றி தெரிவித்திருந்தார் நடிகர் விஜய்.

இந்நிலையில், மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்குமாறு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்…
‘எங்க ஊரில் பணமேயில்லை, எல்லாம் டிஜிட்டல்தான். ஒரே கியூதான்’ என்று கிழிந்த பர்சை வடிவேலு ஒரு காட்சியில் காட்டுவார்.

மற்றொரு காட்சியில் ஒருவர் புதிய 500 ரூபாய் நோட்டுகளை மொத்தமாக கொண்டுவந்து ஒரு உண்டியலில் போடுவார்.

இப்போ இந்த ஐநூறு ரூபாயும் செல்லாதுன்னு சொல்லிட்டாங்களா’ என்று மத்திய அரசை கிண்டல் செய்வது போல ஒரு காட்சியிருக்கும்.

மேலும் கிளைமாக்ஸ் காட்சியில் அதிரடியாக நம் நாட்டு நடப்புகளை ஆணித்தரமாக பேசியிருப்பார் விஜய்.

சிங்கப்பூரில் ஜிஎஸ்டி வரி குறைவாக இருப்பதாகவும், 28 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கும் இந்தியாவில் இலவச மருத்துவ உதவிகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை என்று கூறியிருப்பார்.

தற்போது இந்த க்ளைமாக்ஸ் காட்சி பன்ச் டயலாக்குகள்தான் பெறும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இந்த காட்சிகளை நீக்கவில்லை என்றால் வழக்கு தொடுக்க போவதாக கூறியுள்ளார் தமிழிசை.

மேலும் அரசியலுக்கு வருவதற்காக விஜய் தவறான தகவல்களை பரப்பிவருவதாகவும் தமிழிசை ஆரூடம் தெரிவித்துள்ளார்.

BJP Chief Tamilisai Saundrajan slam Vijay for criticizing GST in Mersal

விஜய் ரசிகர்களே மெர்சல் நெட்டில் வெளியானால் இதில் புகார் கொடுங்க

விஜய் ரசிகர்களே மெர்சல் நெட்டில் வெளியானால் இதில் புகார் கொடுங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெர்சல் போஸ்டர்அட்லி இயக்கத்தில் ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள படம் மெர்சல்.

இதில் விஜய்யுடன் சமந்தா, காஜல், நித்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது.

எனவே இப்படத்தை இணையத்தில் வெளியிடக்கூடாது என தயாரிப்பாளர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து 2500க்கும் மேற்ப்பட்ட இணையத்தளங்களை முடக்க கோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில் மெர்சல் படம் இணையத்தில் வெளியானால் அந்த சம்பந்தப்பட்ட இணையதள முகவரியை [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

If you found Mersal relesed in Internet you can complaint

விஜய் ரசிகரின் உயிரை பலி வாங்கிய மெர்சல் பேனர்

விஜய் ரசிகரின் உயிரை பலி வாங்கிய மெர்சல் பேனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal posterஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் இன்று தீபாவளி தினத்தில் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் வெளியான தெறி படம் ஹிட்டானதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது.

எனவே ரசிகர்களும் இப்படத்தை வரவேற்க தோரணம் கட்டி, போஸ்டர், பேனர் என அமர்களப்படுத்தி மெர்சல் தீபாவளியாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தை அடுத்த வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே மெர்சல் பட பேனரை கட்ட குடிநீர் குழாய் மூலம் சுவரின் மீது நான்கு விஜய் ரசிகர்கள் ஏறினர்.

இதில் எவரும் எதிர்பாரா வகையில் சுவர் இடிந்து விழுந்ததில் கீழே நின்று கொண்டிருந்த 24 வயது வாலிபர் பலியாகியுள்ளார்.

எனவே வாலாஜாபாத் போலீசார் இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Vijay fan death while keeping Mersal banner on wall

mersal death 1

கர்ஜனை-க்காக த்ரிஷாவுக்கு கைகொடுத்த கார்த்தி

கர்ஜனை-க்காக த்ரிஷாவுக்கு கைகொடுத்த கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi Launches Trishas Garjanai Movie Motion Posterசெஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஜோன்ஸ் தயாரித்து, சுந்தர் பாலு இயக்கத்தில் த்ரிஷா நடித்து வெளிவர இருக்கும் படம் ‘கர்ஜனை’

காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள்.

இதன் பின்னணியில் நடக்கும் கதை ஆக்‌ஷன் திரில்லராக படமாக்கப்பட்டுள்ளது.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் த்ரிஷா நடித்துள்ளார்.

இப்படத்தின் மோஷன் போஸ்டரை ‘பருத்தி வீரன்’ புகழ் கார்த்தி வெளியிட்டார்.

இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

Karthi Launches Trishas Garjanai Movie Motion Poster

https://www.youtube.com/watch?v=dP0aIZcBRu0

மெர்சல் பிரச்சினை; விஜய்க்கு ஆதரவாக தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி

மெர்சல் பிரச்சினை; விஜய்க்கு ஆதரவாக தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Suresh Kamatchi supports Vijay in Mersal issueமெர்சல் படம் நாளை வெளியாகவுள்ளது. ஆனால் இப்படம் தலைப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்தித்து வந்த்து.

இந்நிலையில் இப்படக்குழுவினருக்கு ஆதரவாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது-..

மெர்சலாக வெளியாகி இருக்க வேண்டிய படம். ஆனால் அதிகார வர்க்கத்தின் ஆக்டோபஸ் கரங்களால் குதறப்பட்டு வெளியாகவிருக்கிறது.

மத்தியில் விலங்குகள் நல வாரியம்…இங்குள்ள அவர்களின் ஆட்சியும் இணைந்து இளைய தளபதிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்கள்.

இந்த உலகத்தின் செதுக்கலே மனிதனுக்கு விலங்கும், விலங்குகளுக்கு மனிதனும் பயன்படும்படியான ஒரு சங்கிலித் தொடர் அமைப்பு!

உண்டு வாழ்வதிலும், உணவை உற்பத்தி பண்ணுவதிலும் இவர்கள் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்ந்து வருகிறோம் பல ஆயிரம் ஆண்டுகளாக.

ஆனால் நேற்று முளைத்த விலங்குகள் நல வாரியம் பல கோடிகளில் எடுக்கப்பட்ட மெர்சல் திரைப்படத்தை இப்போ வரைக்கும் நிறுத்தி வைத்து வேடிக்கை பார்க்கிறது. காரணம் விஜய் ஒரு பக்கா தமிழன்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நிற்கிறார். அனிதா வீட்டில் போய் ஆறுதல் சொல்கிறார். இதெல்லாம் செய்தால் நாங்க மட்டும் சும்மா இருந்துவிடுவோமா? எங்கள் அதிகார பலத்தைக் காட்டமாட்டோமா? என குடைச்சல் கொடுக்கிறது இந்த வாரியம் மூலமாக.

இந்த வாரியத்திற்கு குறிக்கோள் விலங்குகள் வதைக்கப்படுவது முக்கியமல்ல. அதை யார் வதைக்கிறார்கள் என்பதே முக்கியம்.

விலங்குகள் வதை என்பது என்ன தெரியுமா? ஒருவன் ஒரு நாயை மாடியிலிருந்து தள்ளிவிட்டானே, அதுதான் வதை.

எங்கள் சினிமாவிற்கு நீங்கள் செய்யும் கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல. சிகரெட் விற்பார்கள். சரக்கு கோடிகோடியாய் விற்பார்கள். ஆனால் சினிமாவில் அதைக் காட்டிவிடக்கூடாது. கீழே எழுத்துப் போட வேண்டும். அல்லது எடுக்கவே கூடாது.

விலங்குகளை பாதுகாக்க இந்த வாரியங்கள் சினிமாவைக் கூர்ந்து நோக்கியதைத் தவிர, தமிழர்களின் சல்லிக்கட்டுக்கெதிராக போர் தொடுத்ததைத் தவிர வேறு உருப்படியாக என்ன செய்திருக்கிறது?

வெயில் நேரங்களில் தாகத்தால் தவிக்கும் பறவைகளுக்கோ விலங்குகளுக்கோ தண்ணீர்கூட வைப்பதில்லை.

சாலைகளில் வாகனங்களில் அடிபட்டு இறந்துபோகும் ஆயிரக்கணக்கான நாய்கள், மான்கள் மற்ற விலங்குகளைப் பாதுகாக்க என்ன செய்தது?

சினிமாவில் எந்த விலங்கையோ பறவைகளையோ பயன்படுத்தினால் உடன் ஒரு மருத்துவரை வைத்து அந்த உயிருக்கு எந்த பாதிப்பும் நேரவில்லை என்ற சான்றிதழ் வரை வாங்கித் தருகிறோம். பின் எப்படி வதைக்கப் பட்டதாய் படம் பார்க்கும்போது முடிவெடுக்கிறீர்கள்?

விஜய் மிக நன்னடத்தை உள்ளவர். மேடைகளில் கவனமாக வார்த்தைகளைக் கையாள்பவர். தானுண்டு தன் சினிமா உண்டு என்று இருப்பவர்.

தன் இனத்தின் மீது எல்லோருக்கும் இருக்கும் அக்கறை அவருக்கும் உண்டு.

யார் யாரெல்லாமோ முதல்வர் கனவோடு கம்பு சுத்தவிட்டு வேடிக்கைப் பார்க்கும் அதிகாரம் ஆளப் போகிறான் தமிழன் என்று பாட்டு போட்டவுடனே உங்களுக்கு குருதி கொதிக்கிறது..

அன்று ஆண்ட அம்மா ரஜினி அவர்களை போக்குவரத்து நெரிசலில் நிற்க வைத்தார். கோபம் கொண்ட ரஜினி இறங்கி கால்நடையாய் போயஸ் போனார். அடுத்த ஆட்சி மாற்றத்தில் அவர் குரல் பெரும்பங்கு வகித்தது.

எங்கள் தமிழ் சூப்பர் ஸ்டார் விஜய் பலகோடி மக்கள் கொண்ட நடிகர். அவர் படங்களில் அவரை நிம்மதியாக நடிக்கவிட்டு மக்களை மகிழ்வாக வைத்திருக்க உதவுங்கள். இந்த சின்ன புள்ளைக சார் குச்சியெடுத்து ஒளிச்சி வச்சிட்டான் சார்ன்ற மாதிரி விலங்குகள் நல வாரியம் போன்ற விளையாட்டை ஆடி இடையூறு செய்யாதீர்கள்.

சும்மா சீண்டி பயமுறுத்துவோம்னு இறக்கி விட்டுறாதீங்க. சினிமாவை இந்த மாதிரி பிரச்சனைகளிலிருந்து காப்பாத்துங்க.

இயக்குநர் இராமநாராயணன் அவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட படங்களை இயக்கியவர். அதில் பாதி விலங்குகளை வைத்தே படமெடுத்துள்ளார். யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காத பண்பாளர்.

தயாரிப்பாளர் சங்க செயல்பாட்டில் முழுமையாக எல்லோரையும் அரவணைத்துச் சென்றவர். அவரின் மகன் முரளி எடுத்திருக்கும் இப்படம் ஏகப்பட்ட இடையூறுகளைக் கடந்து வந்திருக்கிறது. அவருக்காகவும் இந்தப் படம் நல்லபடியாக வெளிவர வேண்டும். வெற்றி பெற வேண்டும்.

மெர்சல் எப்போ வெளியானாலும் மெர்சல் வெற்றி பெற வாழ்த்துகள்.

உங்களுக்கு தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!

– சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர்

Producer Suresh Kamatchi supports Vijay in Mersal issue

More Articles
Follows