200 கோடியை வசூலிக்கவில்லை; மெர்சல் வசூலுக்கு தியேட்டர் ஓனர் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் ரிலீஸான மெர்சல் படம் அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்திற்கு கிடைத்த எதிர்ப்பே இதற்கு பாப்புலாரிட்டியை கொடுத்தது.

வெளியான 3 நாட்களிலேயே படம் ரூ. 100 கோடியை கடந்துவிட்டதாகவும், தற்போது 200 கோடியை நெருங்கிவிட்டதாகவும் தகவல்கள் வந்தன.

படம் வெளியாகி 12 நாட்களை கடந்துள்ள நிலையில் தமிழக அளவில் மட்டும் ரூ. 100 கோடியை கடந்துவிட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த பிரபல தியேட்டர் அதிபர் ஒருவர் பேட்டியில் கூறும்போது…

மெர்சல் படம் ரூ. 200 கோடியை வசூலிக்கவில்லை. தியேட்டருக்கு மக்களை வரவழைக்கவே இது போன்ற யுக்திகளை கையாள்வது வழக்கம்.

இது எம்ஜிஆர் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது. நாங்கள் தியேட்டர் வசூலை சொன்னால் மட்டுமே வசூலின் உண்மையான நிலவரம் தெரியும்” என கூறியுள்ளார்.

Mersal movie not collected Rs 200 crores in box office

ரஜினி பின்னணியில் சூர்யா பாடலுக்கு சொடக்கு போடும் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள 25வது பாடலான சொடக்கு என்ற பாடலை ஓரிரு தினங்களுக்கு முன் வெளியிட்டனர்.
இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நாயகி தன் ட்விட்டரில் பக்கத்தில் சொடக்கு போட்டு ஆடியுள்ள வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதன் பின்னணியில் ரஜினிகாந்தின் போஸ்டர் டிசைன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Keethy Suresh dance for Sodakku song Video goes viral

Keerthy Suresh‏Verified account @KeerthyOfficial
That’s my #sodakku video ! Snap snap http://bit.ly/SodakkuLyricVideo … @Suriya_offl @VigneshShivN @anirudhofficial @StudioGreen2

மீண்டும் தள்ளிப்போனது 2.0 ரிலீஸ்..?; ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா நிறுவனத்தின் பிரம்மாண்ட்ட தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 2.0

ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடிக்க ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை மும்பையிலும், கடந்த அக். 27ஆம் தேதி இதன் பாடல்களை துபாய் நாட்டிலும் வெளியிட்டனர்.

இப்படம் அடுத்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 26ல் குடியரசு தினம் அன்று ரிலீஸ் ஆகும் என அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் திடீரென இப்படத்தின் ரிலீஸை அடுத்த ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதிக்கு (தமிழ் புத்தாண்டு) ஒத்தி வைத்து இருக்கிறார்களாம்.

கோடை விடுமுறையை கணக்கில் வைத்து படத்தின் ரிலீஸை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ரஜினி ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருக்கிறார்களாம்.

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இந்தாண்டு 2017 தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என முன்பு அறிவித்து இருந்தனர்.

அதன்பின்னர் இது தள்ளிப் போனதால் அன்று மெர்சல் ரிலீஸ் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Rajinikanths 2point0 release date postponed?

தாயம் பட இயக்குனர் கண்ணன் ரங்கசாமி 30 வயதில் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தாயம்’ படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கண்ணன் ரங்கசாமி மாரடைப்பால் இன்று காலமானார்.

சில மாதங்களுக்கு முன் வெளியான தாயம் என்ற தமிழ் திரைப் படத்தை இயக்கியவர் கண்ணன் ரங்கசாமி. இவருக்கு வயது 30.

இன்னும் திருமணம் ஆகவில்லை. இளம் வயதிலேயே இயக்குனராகியுள்ளார் இவர்.

இவர் கடந்த மாதம் மாரடைப்பு எற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

15 நாட்கள் கோமாவில் இருந்து நினைவு திரும்பியது. 40 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில் இன்று வீட்டில் இருந்த கண்ணனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Dhaayam director Kannan Rangasamy 30 age passed away due to heart attack

நிவின்பாலி-நட்ராஜ் இணைந்துள்ள ரிச்சி பட ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘Ulidavaru Kandanthe’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடித்து வருகிறார் நிவின் பாலி.

கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ‘ரிச்சி’ என தலைப்பிட்டுள்ளனர்.

முக்கிய வேடத்தில் நட்ராஜ் சுப்ரமணியன், ஷ்ரதா, ராஜ்பரத், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளர்.
இப்படத்தின் முழுப்பணிகளும் முடிந்து தணிக்கைக்கு தயாராகி வருகிறது.

தற்போது டிசம்பர் 1-ம் தேதி ‘ரிச்சி’ வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இது குறித்து இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் கூறியதாவது…

“தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரௌடி கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், படகுகளை சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டியும் நடித்துள்ளனர்.

இவர்கள் இருவரையும் மையப்படுத்தி தான் ‘ரிச்சி’ படத்தின் கதை நகரும்.

தமிழில் முதல் முறையாக தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளார் நிவின் பாலி’ என்றார்.

Nivinpauly and Natty starring movie Richie release date is here

ஹார்வேர்டு பல்கலை. தமிழ் இருக்கை; ஏஆர்.ரஹ்மான்-விஷால் நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக உலகெங்கும் உள்ள தமிழர்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

இது தொடர்பான விழிப்புணர்வை நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழக இளைஞர்களிடையே உருவாக்கி வருகிறார்.
ஹார்வேர்டு பல்கலைகழகத்தில் தமிழுக்கு இருக்கை பெற வேண்டும் ‘தமிழானோம்…’ என்ற பாடலை உருவாக்கியிருந்தார்.

மேலும் சில தினங்களுக்கு முன்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை சந்தித்து பேசினார் ஜி.வி.பிரகாஷ்.

‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்திய தமிழரோடு இனிய சந்திப்பு. ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக ஒன்றாக இணைவதில் பெருமை எனவும் தெரிவித்து இருந்தார்.

மேலும் தமிழக அரசு ரூ. 10 கோடியை அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானும் தன் பங்களிப்பாக 25 ஆயிரம் டாலர்களை வழங்கியுள்ளார்.

“இது ஒரு சிறு பங்களிப்புதான். ஆனால் உலகத் தமிழர்கள் இந்த நிதிக்கு தங்களால் ஆன பங்களிப்பைத் தர வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறேன்,” என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியிருந்தார்.

தற்போது இவரை தொடர்ந்து நடிகர் விஷாலும் தன் பங்களிப்பாக ரூ. 10 லட்சம் ரூபாய் செலுத்துகிறேன் என அறிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பான வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

380 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைய அமெரிக்கவாழ் தமிழர்களான மருத்துவர்கள் சம்பந்தமும் ஜானகிராமனும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள்.

அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மூன்று கோடிப் பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடிப் பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வேர்டில் இருக்கைகள் உள்ளன.

ஹீப்ரூ, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கும் இருக்கின்றன. ஆனால் 8 கோடிப் பேர் பேசும் தமிழுக்கு இல்லை என்பது நாம் கவலைப்பட வேண்டியது.

தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு நன்றிகள்!

தமிழுக்கு அங்கே ஓர் இருக்கை அமைக்க சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில் இதுவரை சுமார் 17 கோடி ரூபாய் தான் சேர்ந்துள்ளது.

எனது சார்பில் 10 லட்சம் ரூபாய் செலுத்துகிறேன். உலகளாவிய தமிழர்கள் ஒன்றுபட்டு இதற்கான நிதி விரைவில் சேர உதவ வேண்டும் என்றும் மத்திய அரசும் இந்த வரலாற்று சிறப்புக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். என விஷால் தெரிவித்துள்ளார்.

AR Rahman and Vishal donates for Tamil Chair at Harvard University

More Articles
Follows