தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்திற்கு ஏற்கெனவே எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி. வசனங்கள், மருத்துவ துறை முறைகேடு உள்ளிட்ட பல வசனங்களால் பாஜக சார்பில் எதிர்ப்பு கிளம்பியது.
இதுவே படத்திற்கு விளம்பரமாகிவிட படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியது.
இதனையடுத்து சில தினங்களில் தெலுங்கில் ‘அதிரிந்தி’ என்ற பெயரிலும் வெளியானது. அங்கும் நல்ல வசூல் கிடைத்துள்ளதாம்.
இந்நிலையில், தற்போது இப்படம் 100 நாட்களை கடந்துள்ளதால் இதனை விஜய் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தன் 100வது படைப்பாக தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
