தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுந்தர்.சி. – குஷ்புவின் ‘அவ்னி மூவீஸ்’ நிறுவனம் தயாரித்த படம் ‘மீசைய முறுக்கு’.
‘ஹிப் பாப் ’ ஆதி இசையமைத்து, நாயகனாக நடித்த இப்படம் மாபெரும் வசூலை அள்ளியது.
இந்த திரைப்படம் வெளியான 150 நாட்களில் இந்த படத்தின் பாடல்கள் யு-டியூப் , டு-பாடு.காம், கானா, ராகா, ஜியோ மியூசிக் உள்ளிட்ட சமூக இசைத் தளங்கள் வாயிலாக 15 கோடிக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
2017-ல் அதிக Streaming ஆன வீடியோ என்ற பெருமையை ‘மீசையை முறுக்கு’ பெற்றுள்ளது.
இது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமை என்று இப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சாதனையை கொண்டாடும் விதமாக ‘மீசையை முறுக்கு’ ஆல்பத்தை வெளியிட்ட ‘திங்க் மியூசிக்’ நிறுவனம் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த விழா இன்று காலை சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் இந்த படத்தை தயாரித்த குஷ்பு, கதாநாயகனாக நடித்து இயக்கிய ஆதி, இந்த படத்தில் பணியாற்றிய இசை கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் தயாரிப்பாளர் குஷ்புவுக்கும் ‘ஹிப் பாப் தமிழா’ ஆதிக்கும் ‘திங்க் மியூசிக்’ மற்றும் ‘சத்யம் சினிமாஸ்’ நிறுவனங்களின் தலைவர் ஸ்வரூப் ரெட்டி விருதுகளை வழங்கினார்.
இவ்விழாவில் ஆதி தன்னுடைய சம்பளத்தின் ஒரு பகுதியை தன் குழுவுக்கு பரிசளித்து கௌரவம் செய்து பேசும்போது, ‘‘இவர்கள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை.
எனக்கு வாய்ப்பளித்த சுந்தர்.சி., குஷ்பு ஆகியோருக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறேன். இது என் கேரியரில் ஒரு பெரிய மைல்க்கல்!
இதே சத்யம் திரையரங்க வளாகத்தில் தான் 2012-ல் நான் இசை அமைத்த ஆல்பத்தின் வெளியீடும் நடந்தது.
நான் இசையமைத்த ‘ஆம்பள’ படத்தின் இசை வெளியீடும் நடந்தது.
அந்த நிகழ்வுகளை தொடர்ந்து இப்போது ‘மீசையை முறுக்கு’ விழா நடக்கிறது. பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.
நடிகை குஷ்பு பேசும்போது, ‘‘இளைஞர்கள் ஆதியை முன்னுதாரணமாக எடுத்து செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.
அவரது கடின உழைப்புக்கு கிடைத்த கௌரவம் இது’’ என்றார்!