தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சில தினங்களுக்கு முன் தன் இணைய பக்கத்தில்…
“தமிழக அரசு கொரோனவை கட்டுப்படுத்த தவறிவிட்டது… இதனால் தமிழக அரசை பிரதமர் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
தன்னை தமிழக முதல்வராக ஆக்கினால் ஒரே வாரத்தில் கொரோனாவை தமிழகத்தில் இருந்தே விரட்டுவேன்.. தமிழகத்தில் உள்ள கிரிமினல்கள் எல்லாரையும் ஒரே மாசத்தில் ஜெயிலுக்குள் தள்ளுவேன்.
அதனால் பிரதமர் மோடி தனக்கு ஒரு வாய்ப்பு அளிக்கனும்” என்று பதிவிட்டார்.
இதை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர்.
தற்போது மற்றொரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில்…:
“தமிழகம் என்னை ஒதுக்கி விட்டது… அதற்கு நன்றி… அதனால் தான் நான் இப்போது சூப்பர் மாடலாக இருக்கிறேன். கோலிவுட் எனக்கு எதிராக இருப்பதால், நான் பாலிவுட், ஹாலிவுட்டில் வேலை பார்த்து வருகிறேன்.
ஆனால் இந்த தமிழ்நாடு ஏன் இன்னும் என்னை டார்கெட் செய்கிறது என்பது தான் எனக்கு புரியவில்லை.
என்னை விமர்சிப்பது தான் இவர்களுக்கு ஒரே வேலையா?
தமிழ்நாடு தமிழர்களுக்கு, இந்துகளுக்கானது. ஆனால் மலையாளிகளும், கிறிஸ்தவர்களும் ஆதிக்கம் செலுத்தி ஒரு தமிழ் பெண்ணுக்கு அநீதி இழைக்கிறார்கள்.
தமிழ்நாடு அழிந்து கொண்டிருக்கிறது. உங்களை எல்லாம் காப்பாற்றிக் கொள்ளுங்கள்….
நான் பத்திரமாக இருக்கிறேன்… கன்னடர் ரஜினிகாந்த், கிறிஸ்தவர் விஜய் ஆகியோர் என் பெயரை கெடுக்க முயற்சி செய்கிறார்கள்?!
சைபர் புல்லியிங் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன்… கடவுள் பார்க்கிறார்” என பதிவிட்டுள்ளார் மீரா மிதுன்
Meera Mitun threatens legal action against Rajini and Vijay