ரஜினி அங்கிள் நீங்க சொன்னா அரசாங்கம் கேட்கும்..; மருத்துவ கனவை தொலைத்து நிற்கும் நீட் மாணவி ஆர்த்தி கோரிக்கை (வீடியோ)

ரஜினி அங்கிள் நீங்க சொன்னா அரசாங்கம் கேட்கும்..; மருத்துவ கனவை தொலைத்து நிற்கும் நீட் மாணவி ஆர்த்தி கோரிக்கை (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthநீட் என அழைக்கப்படும் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வுகள் செப்டம்பரில் நடைபெற்று அதன் முடிவுகள் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகின.

இதில் தேர்வுக்கு விண்ணப்பித்த 15,97,435 பேரில் 13,66,945 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். (கொரோனா ஊரடங்கால் பலர் தேர்வு எழுத வரவில்லை.)

அதில் 7,71,500 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

இந்த 56.55 சதவீதமாகும் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.

இதில் ஒடிஷாவை சேர்ந்த சோயிப் அஃப்தாப் என்ற மாணவர் 720 மதிப்பெண்கள் பெற்று இந்தியளவில் முதலிடத்தை பிடித்தார்.

அவருக்கு அடுத்து டெல்லி, தெலங்கானா ஆகிய மாநில மாணவர்கள் இடம் பெற்றனர்.

திருப்பூரைச் சேர்ந்த ஆர். ஸ்ரீஜன் 8ஆவது இடம் பிடித்தார். இவர் பெற்ற மொத்த மதிப்பெண் 710.

மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மோகனபிரபா ரவிச்சந்திரன் 14ஆவது இடத்தைப் பிடித்தார். அவரின் மதிப்பெண் 705.

ஜி. ஸ்வேதா என்ற தமிழக மாணவி 701 மதிப்பெண்ணுடன் 18ஆவது இடத்தைப் பிடித்தார்.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் தமிழ்நாடு, 48.57% பெற்றிருந்தது. இந்த ஆண்டு 57.44%.

புதுச்சேரி கடந்தாண்டு 48.70%. இந்த ஆண்டு 52.79%.

இந்த நிலையில் இந்தாண்டு 2020 நீட் தேர்வில் 553 மதிப்பெண்கள் பெற்றும் அரசு மருத்துவ கல்லூரியில் சீட் கிடைக்காத ஆர்த்தி என்ற செங்கல்பட்டு மாணவி நடிகர் ரஜினிகாந்துக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அந்த வீடியோ இதோ…

Medical Student Aarthi requests Super Star Rajinikanth

சோனு சூட் தான் எங்கள் கடவுள்..; நடிகருக்கு கோயில் கட்டி வழிபடும் மக்கள். (வீடியோ)

சோனு சூட் தான் எங்கள் கடவுள்..; நடிகருக்கு கோயில் கட்டி வழிபடும் மக்கள். (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sonu soodதமிழில் கள்ளழகர், சந்திரமுகி, ஒஸ்தி, கோவில்பட்டி வீரலட்சுமி என பல படங்களில் நடித்தவர் ஹிந்தி் நடிகர் சோனு சூட்.

இவர் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

பெரும்பாலும் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களிலேயே நடித்தவர் இவர்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் இவர் செய்த உதவிகள் ஏராளம்.

குறிப்பாக இடம்பெயர் தொழிலாளர்கள் அவதிபட்டபோது பேருந்து விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார்.

உதவி செய்வதற்காகவே தன் சொத்துக்களை 10 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்தார்.

மாணவர்கள் ஆன்லைன் கல்வி கற்பதற்காக ஸ்மார்ட்போன்களை வழங்கினார்.

மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவர் வைத்தும் கொடுத்துள்ளார்.

விவசாயிகளுக்கும் பெரும் உதவி செய்துள்ளார்.

கொரோனா காலத்தில் இவரது சேவையைப் பாராட்டி ஐநா சபை சார்பில் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தில் சித்தி பேட் மாவட்டத்தில் உள்ள துப்ப தண்டா என்ற கிராமத்தில் சோனு சூட் சிலை அமைத்து கோயில் கட்டியுள்ளனர்

சிலையை வடிவமைத்த சிற்பியை கொண்டே உள்ளூர் மக்கள் இந்த கோயிலை திறந்துள்ளனர்.

கோயில் சிலைக்கு பிரதிஷ்டை செய்து
ஆரத்தி எடுத்து வழிபட்டு வருகின்றனர்.

உதவி தேவைப்படுபவோர்க்கு வாரிக் கொடுத்த கர்ணன்.. இவர்தான் எங்கள் கடவுள்.

சினிமாவில் வில்லனாக நடித்தாலும் ஏழைகளுக்கு உதவும் இவரே நிஜ ஹீரோ என்று அந்த கிராமவாசிகள் தெரிவித்தனர்.

கூடுதல் தகவல்…

மக்கள் ஆதரவு இவருக்கு பெருகி வருவதால் சினிமாவில் ஹீரோ கேரக்டர்கள் இவரை தேடி வருகிறதாம்.

தற்போது வரை 5 படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

Dubba Tanda village People in Andhra Pradesh build a temple dedicated to Actor Sonu Sood

கட்சியே தொடங்காத ரஜினியை பார்த்து நாங்க ஏன் பயப்படனும்.?.. – உதயநிதி

கட்சியே தொடங்காத ரஜினியை பார்த்து நாங்க ஏன் பயப்படனும்.?.. – உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhayanidhi stalin Rajinikanthகடலூர் அருகேயுள்ள சில்வர் பீச்சில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு இடத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் உதயநிதி.

அவர் பேசியதாவது…

* தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ 5 ஆயிரம் கொடுக்க திமுக வலியுறுத்தியது. ஆனால் ரூ.2,500 தான் தற்போது தமிழக அரசு கொடுக்கிறது.

கடந்த முறை பிரச்சாரம் செய்ய சென்ற போது என்னை தீவிரவாதி போல் போலீசார் அழைத்து சென்றார்கள்.

ரஜினிகாந்த் இன்னும் கட்சியே தொடங்கவில்லை.. கட்சியே தொடங்காத ரஜினியை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.?”

என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து கொண்டார்.

Udhayanidhi Stalin talks about Rajinikanth’s political entry

வயிற்றுப்பிழைப்பிற்காக புரட்சியாளராக வேசம் போடும் போலிப் போராளிகள்..; கிழிக்க வரும் ‘ஓங்காரம்’

வயிற்றுப்பிழைப்பிற்காக புரட்சியாளராக வேசம் போடும் போலிப் போராளிகள்..; கிழிக்க வரும் ‘ஓங்காரம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ongaramநாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதில் சில போலியான போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

அப்படிப்பட்ட போலியான போராட்டங்களை நடத்தும் போலிப் போராளிகளின் முகத்திரையை கிழிக்க வருகிறது ‘ஓங்காரம்’ திரைப்படம்.

‘அய்யன்’, ‘சேதுபூமி’ ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இயக்கி நடிக்கும் இப்படம், வயிற்றுப்பிழைப்பிற்காக
புரட்சியாளராக வேசம் போடும் போலிப் போராளிகள் பற்றியும், அவர்கள் நடத்தும் போலியான போராட்டங்களினால் மக்களுக்கு ஏற்படும்
பாதிப்புகள் பற்றியும் அழுத்தமாக பதிவு செய்கிறது.

மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் கதையின் நாயகனாக ஏ.ஆர்.கேந்திரன்
முனியசாமி நடிக்க, இளம் நாயகனாக யுகேஷ் அறிமுகமாகிறார்.

கதையின் நாயகியாக வர்ஷா விஸ்வநாத் அறிமுகமாகிறார்.

போராளிகளுக்கு உதவி செய்ய போய் சிக்கலில் மாட்டிய விஜய்சேதுபதி

இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

சாம் ரொனால்டு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில், செல்லம் ஜெயசீலன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

மோனீஷ் பாரதி இசையமைக்கிறார். சண்டைப்பயிற்சியை பயர் கார்த்திக் கவனிக்க, மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.

கெளசல்யா ஏழுமலை தயாரிக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் பணியை ரேகா முருகன் கவனிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க மதுரையில் படமாக்கப்பட்டு
வருகிறது. தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Ongaram talks about fake social activists

தியேட்டர்களுக்கு 3 மாத மின் கட்டணம் ரத்து.. ரூ.10 லட்சம் வரை கடனுதவி..; முதல்வர் பிறந்தநாள் பரிசு

தியேட்டர்களுக்கு 3 மாத மின் கட்டணம் ரத்து.. ரூ.10 லட்சம் வரை கடனுதவி..; முதல்வர் பிறந்தநாள் பரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jaganMohanReddyகொரோனா ஊரடங்கால் இந்தியா முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டன.

கிட்டத்தட்ட 7 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த அக்டோபர் மாதம் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

50% பார்வையாளர்களுடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி தியேட்டர்கள் திறக்கபட்டன.

ஆனாலும் தியேட்டர்களில் கூட்டம் இல்லை.

இந்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியான அறிவிப்பை தெரிவித்துள்ளார்.

அதில்…

ஆந்திராவில் உள்ள அனைத்து தியேட்டர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாத மின் கட்டணம் முழுமையாக ரத்து.

தற்போதைய மின் கட்டணத்தை தவணை முறையில் கட்டவும் அனுமதி.

மேலும் நகரங்கள், புறநகர்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த கடனுக்கு வட்டி இல்லை என்றும் ஆந்திர முதல்வர் அறிவிப்பு.

இன்று டிசம்பர் 21ஆம் தேதி
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் 48வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Jagan Mohan Reddy’s birthday gift to the theatre owners

வியக்க வைத்த சிம்பு… மழையிலும் ‘மாநாடு’ நடத்திய வெங்கட்பிரபு

வியக்க வைத்த சிம்பு… மழையிலும் ‘மாநாடு’ நடத்திய வெங்கட்பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maanadu simbuஈஸ்வரன் படத்தை தொடர்ந்து சிலம்பரசன் நடித்து வரும் படம் மாநாடு.. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார்.

அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு, இந்தப்படத்தில் வித்தியாச தோற்றங்களில் சிலம்பரசனின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தின.

கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது..

அங்கே திட்டமிட்டபடி வெளிப்புற காட்சிகளை படமாக்கும்போது புயல் மற்றும் மழை காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

STR & Gautham Karthik’s Next Has Been Titled As #PathuThala

அதேசமயம் அந்த சமயத்திலும் கூட, சிலம்பரசனின் ஒத்துழைப்பால் ஒருநாளை கூட வீணாக்காமல், உள்ளரங்கு காட்சிகள் அனைத்தையும் திட்டமிட்டதற்கு முன்னதாகவே படமாக்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு,

அதன்பின்னும் மழை விடாமல் தொடர்ந்தததால் தான், மாநாடு படக்குழுவினர் வேறு வழியின்றி சென்னை திரும்பவேண்டிய சூழல் ஏற்பட்டது..

விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் பாண்டிச்சேரி மற்றும் ஏற்காடு கிளம்புகிறது மாநாடு படக்குழு..

சிலம்பரசன் TR இன் ஈஸ்வரன் படம் மிக விரைவாக முடிக்கப்பட்டது..

சிம்புவின் ‘போடா போடி 2’.. விக்னேஷ் சிவன் & வரலட்சுமியை கழட்டி விட்ட பதம் குமார்

அதேபோல் மிகப்பெரிய பட்ஜெட், அரசியல் படம் என்பதால் அதிக எண்ணிக்கையிலான துணை நடிகர்கள் கூட்டம் என இருந்தாலும் கூட, மாநாடு படமும் திட்டமிட்டதற்கு முன்னதாகவே படப்பிடிப்பு முடிவடைந்து உரிய நேரத்தில் ரிலீஸுக்கும் தயாராகிவிடும் என்று படக்குழுவினர் கூறியுள்ளார்கள்.

இந்த சுறுசுறுப்பையும் வேகத்தையும் சிலம்பரசன் T R தொடர்ந்தார் என்றால் நிச்சயமாக வருடத்திற்கு மூன்று படங்களை அவரால் கொடுக்க முடியும் என்று திரையுலகில் பேச ஆரம்பித்துவிட்டனர்..

STR’s work is very very much appreciated by Maanaadu team

More Articles
Follows