தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நீட் என அழைக்கப்படும் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வுகள் செப்டம்பரில் நடைபெற்று அதன் முடிவுகள் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகின.
இதில் தேர்வுக்கு விண்ணப்பித்த 15,97,435 பேரில் 13,66,945 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். (கொரோனா ஊரடங்கால் பலர் தேர்வு எழுத வரவில்லை.)
அதில் 7,71,500 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
இந்த 56.55 சதவீதமாகும் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
இதில் ஒடிஷாவை சேர்ந்த சோயிப் அஃப்தாப் என்ற மாணவர் 720 மதிப்பெண்கள் பெற்று இந்தியளவில் முதலிடத்தை பிடித்தார்.
அவருக்கு அடுத்து டெல்லி, தெலங்கானா ஆகிய மாநில மாணவர்கள் இடம் பெற்றனர்.
திருப்பூரைச் சேர்ந்த ஆர். ஸ்ரீஜன் 8ஆவது இடம் பிடித்தார். இவர் பெற்ற மொத்த மதிப்பெண் 710.
மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மோகனபிரபா ரவிச்சந்திரன் 14ஆவது இடத்தைப் பிடித்தார். அவரின் மதிப்பெண் 705.
ஜி. ஸ்வேதா என்ற தமிழக மாணவி 701 மதிப்பெண்ணுடன் 18ஆவது இடத்தைப் பிடித்தார்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் தமிழ்நாடு, 48.57% பெற்றிருந்தது. இந்த ஆண்டு 57.44%.
புதுச்சேரி கடந்தாண்டு 48.70%. இந்த ஆண்டு 52.79%.
இந்த நிலையில் இந்தாண்டு 2020 நீட் தேர்வில் 553 மதிப்பெண்கள் பெற்றும் அரசு மருத்துவ கல்லூரியில் சீட் கிடைக்காத ஆர்த்தி என்ற செங்கல்பட்டு மாணவி நடிகர் ரஜினிகாந்துக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அந்த வீடியோ இதோ…
Medical Student Aarthi requests Super Star Rajinikanth