தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் ‘பிகில்’.
அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
அடுத்த மாதம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் ஆளும் அதிமுக அரசை கடுமையாக சாடியிருந்தார் விஜய்.
இதற்கு பல அமைச்சர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையில் கறிக்கடை வியாபாரிகள் இப்படத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.
அதாவது பிகில் பட போஸ்டரில் இறைச்சி வெட்டும் முட்டி (கட்டை) மீது செருப்புக் கால் வைத்து விஜய் அமர்ந்திருப்பார். இதனை கண்டித்து தான் புகார் கொடுத்துள்ளனர்.
அவர்களின் மனுவில்…
“இந்தியாவில் உள்ள அனைத்து மீன் வியாபாரிகள், இதர அனைத்து இறைச்சி வியாபாரிகளும் அதிகாலை தொட்டு வணங்கி தொழில் செய்யும் முட்டி, கத்தி மீது செருப்புக்கால் வைத்து போஸ்டர் வெளியிட்டு மொத்த வியாபாரிகளை செறுப்பால் அடித்த உணர்வை ஏற்படுத்து விட்டீர்கள் அந்தக் காட்சியோடு படம் வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு வியாபாரிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும்.
இதைச் சுட்டிக்காட்டி ஏஜிஎஸ் நிறுவனத்துக்கும், இயக்குநர் அட்லீக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதற்கு பதில் நோட்டீசாக ஏஜிஎஸ் நிறுவனம் சார்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் செருப்பு காலால் முட்டி, கத்தியை மிதித்து போஸ்டர் வெளியிட்ட காட்சியை நியாயப்படுத்தி பதில் கோரப்பட்டது.
ஆகவே இந்தியாவில் உள்ள மொத்த இறைச்சி வியாபாரிகளையும் கொச்சைப்படுத்தும் பிகில் திரைப்படத்தில் அந்தக் காட்சி சம்பந்தப்பட்ட பகுதியை நீக்கிவிட்டு படத்தை வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டுமாறு மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் துணை மிதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை கொடுக்க வந்த கறிக்கடை உரிமையாளர்கள் பிகில் பட போஸ்டரை கிழித்து போராட்டம் செய்தனர்.
இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பு நிலவியது.
Meat sellers protest against Vijays Bigil movie