தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம்…
இன்று நான் மிக முக்கியமான ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன். கடந்த மாதம் நான் ஒரு விஷயத்தை பதிவு செய்திருந்தேன் அரசியலில் நுழையாமல் கூட நாங்கள் சேவை செய்ய முடியும் என்று.
இந்த அறிக்கையின் பின்னணியில் எனது காரணம் என்னவென்றால், நான் பல சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருக்கும்போது, எனது நண்பர்கள், ரசிகர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் பல அரசியல்வாதிகள் என்னிடம் கேட்கிறார்கள், நான் அரசியலில் நுழைவதற்கு இதையெல்லாம் செய்கிறேனா என்றும், மேலும் சிலர் என்னால் அரசியலில் நுழைந்தால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
கொரோனா காலகட்டத்தில் நான் செய்த சேவையின் மூலம் அரசியலில் நுழையும் அழுத்தம் அதிகரித்துள்ளது.
“நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம். இன்று நான் முக்கியமான ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அரசியலுக்குள் நுழையாமல் சமூக சேவை செய்வேன் என்று கடந்த மாதம் எனது சமூகவலைதள பதிவில் தெரிவித்திருந்தேன். அதன் பின்னணியில் இருக்கும் காரணத்தை இங்கே கூறுகிறேன்.
நான் ஏராளமான சமூக சேவை பணிகளை செய்து வருவதால் எனது நண்பர்கள், அரசியல்வாதிகள், செய்தியாளர்கள் ஆகியோர் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்பதால் தான் இவற்றை செய்கிறேனா என்று கேட்கின்றனர். சிலர் அரசியலில் நான் இணைந்தால் இன்னும் அதிகமாக சேவை செய்ய முடியும் என்று அறிவுரை கூறினார்கள்.
முக்கியமாக கொரோனா பிரச்னைக்கு பின்னர் அழுத்தம் அதிகரித்திருக்கிறது. அனைவருக்கும் நான் ஒரு பொதுவான நபர் என்று சொல்ல விரும்புகிறேன். ஆதரவற்ற குழந்தைகளுக்காக எனது வீட்டில் ஒரு ஹோம் நடத்தி வருகிறேன். எனக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் நான் அரசிடம் உதவி கோருகிறேன். கலைஞர், ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பலரது இதய அறுவை சிகிச்சைகளுக்காக உதவி செய்துள்ளனர்.
அதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோரும் நான் சேவை செய்ய பல்வேறு வகைகளில் உதவி வருகிறார்கள்.
அரசியலில் நுழைந்தால் தனி மனிதனாக உதவி செய்வதை விட அதிகம் செய்ய முடியும் என்பதை நான் அறிவேன்.
எதிர்மறை அரசியல் செய்வது எனக்கு பிடிக்காது. அரசியலில் இருந்தால் எதிர்மறையாக ஒருவரை பேச வேண்டியிருக்கும். ஏனென்றால் நான் அனைவரையும் மதிக்கிறேன்.
யாராவது ஒருகட்சி தொடங்கி அதில் எதிர்மறை அரசியல் செய்ய வேண்டாம், யாரைப்பற்றியும் தவறாக பேசி புண்படுத்த வேண்டாம் என்ற நிலை இருந்தால் அப்போது நான் அவர்களுடன் சேர்ந்து பொது சேவையில் ஈடுபடுவேன்.
இந்தியாவில் அப்படி ஒரு நேர்மறை அணுகுமுறையுடைய கட்சியை ஆரம்பிக்க எனது குரு ரஜினிகாந்தால் மட்டுமே முடியும் என்று நம்புகிறேன்.
அரசியல் காரணங்களுக்காக அவர் இதுவரை யாரையும் காயப்படுத்தியதில்லை. அவர் கட்சி ஆரம்பித்தால் யாரையும் காயப்படுத்தமாட்டார் என்று நம்புகிறேன்.
ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் தொடங்கினால் அவரது லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவனாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்ய காத்துக் கொண்டிருக்கிறேன். சேவையே கடவுள்.” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இறுதியாக அந்த அறிக்கையில்… நவம்பர் மாதத்தைக் குறிப்பிட்டு கேள்விக்குறியுடன் முடித்திருக்கிறார்.
இதன் மூலம் நடிகர் ரஜினிகாந்த் நவம்பர் மாதத்தில் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக உறுதியாகியுள்ளது.
Master Raghava Lawrence announces his political entry joining with Rajinikanth