‘டாப்சி’ தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் படப்பிடிப்புகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் ‘பெப்சி’ என்ற கூட்டமைப்பின் மூலம் செயல்பட்டு வந்தனர்.

பெப்சி அமைப்பினரின் ஆதரவு இல்லாமல் எந்த பெரிய நடிகரின் படமும் படபிடிப்புகளை நடத்த முடியாத சூழல் நிலவி வந்தது.

இதன் மூலம் சிறு பட தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்த சூழலில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர், தயாரிப்பாளர் மன்சூர் அலிகான் ‘அதிரடி’ என்ற படத்தை தொடங்கினார்.

அப்போது ‘பெப்சி’ தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மன்சூர் அலிகான் தலைமையில் ‘டாப்சி’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

சுமார் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதில் உறுப்பினகளாக இருக்கிறார்கள். இந்த நிலையில், சென்னையில் நடிகர் மன்சூர் அலிகான் திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்:

2 ஆண்டுகளுக்கு முன்பு “அதிரடி” படத்தின் போது ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக டாப்சி என்ற அமைப்பை தொடங்கி தலைவராக இருந்து வந்தேன்.

பிரதமர் மோடியின் பணமதிப்பு மாற்ற கொள்கையின் காரணமாக படப்பிடிப்புகள் பெரும்பாலும் குறைந்து விட்டது, ஷூட்டிங் நடக்காததால் தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கிறார்கள்.

இந்த டாப்சி அமைப்பில் 700 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வேலை தரவேண்டியது அவசியமாகிறது.

அதோடு, பெப்சி அமைப்போடு இணக்கமான சூழலில் பல படங்களில் பணியாற்ற வேண்டியிருப்பதாலும், வரப்போகும் தயாரிப்பாளர் சங்க தேர்தல், நடிகர் சங்கம் உட்பட பல்வேறு திரைத்துறை அமைப்புகளில் நடைபெற உள்ள தேர்தல்களில் போட்டியிட உள்ளதாலும் டாப்சி என்ற அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்திருக்கிறேன்.

முறைப்படி தலைவர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்தாலும் சாதாரண உறுப்பினராக அதில் தொடர்ந்து நான் நீடிப்பேன். பல்வேறு அதிரடிகள் தொடரவேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுத்திருக்கிறேன்.

நான் வெளியில் இருந்தால்தான் பலருக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்ய முடியும்.

இவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் கூறியிருக்கிறார்.

அஜித்தின் தங்கை கேரக்டரில் விஜய் தங்கை… இயக்குனர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்த வேதாளம் தமிழில் சக்கப் போடு போட்டது. இதில் அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார்.

இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார் ஜில்லா பட இயக்குனர் நேசன்.

அஜித் கேரக்டரில் தெலுங்கு பவர் ஸ்டார் பவன்கல்யாண் நடிக்கிறார்.

இவரின் தங்கை கேரக்டரில் நிவேதா தாமஸ் நடிக்கிறாராம்.

இவர் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையான நடித்திருந்தார்.

மேலும் பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vedhalam telugu remake will have connection between Vijay sister and Ajith Sister

‘பைரவா’ ஆடியோவின் எல்லா தகவல்களும் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கியுள்ள விஜய்யின் ‘பைரவா’ பட பாடல்கள் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது.

வைரமுத்துவின் வரிகளுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளதாம். அவற்றில் ஒரு பாடல் தீம் மியூசிக்.

இதன் பாடல்கள் உரிமை பிரபல லஹரி நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஒரு நாளைக்கு ஒரு பாடலின் தொடக்க வரிகள் என ஒவ்வொன்றாக வெளியிட இருக்கிறார்களாம்.

அதன்படி இன்று முதல்பாடலின் ஆரம்ப வரி ‘அழகிய சூடான பூவே’ என்பதை வெளியிட்டுள்ளனர்.

விஜய்நரேன் மற்றும் தர்ஷனா பாடியுள்ளனர்.

இனி நாளை எந்த பாடல் வருகிறது என்பதை பார்ப்போம்.

ஏற்கெனவே வர்றலாம் பைரவா வா… என்ற பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து வெளியிட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

From Bairavaa movie Azhagiya Soodana Poovey song lyrics revealed

சற்றுமுன் எல்லா பாடல்கள் தகவல்களையும் வெளியிட்டுள்ளனர்.

ரஜினியின் ‘மன்னன்’ ரீமேக்… விஜய் இடத்தை கைப்பற்றிய லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் மறக்கவே முடியாத படங்களில் மன்னன் படம் மிக முக்கியமான ஒன்று

பி.வாசு இயக்கிய இப்படத்தை பிரபு தயாரிக்க, ரஜினி, விஜயசாந்தி, குஷ்பூ, கவுண்டமணி, விசு, மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாகி 24 வருடங்களை கடந்துவிட்டாலும் இன்றுவரை டிவி களில் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் இப்படத்தை பி.வாசுவே ரீமேக் செய்யவிருக்கிறாராம்.

இதில் ரஜினி வேடத்தில் ராகவா லாரன்சும், கவுண்டமணி வேடத்தில் வடிவேலும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தில் விஜய் நடிக்கலாம் என்றும் பின்னர் அது பொய்யானதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ரஜினியின் மூன்றுமுகம் ரீமேக்கிலும் லாரன்ஸ் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

P Vasus mannan remake lawrance in rajini character. Vadivelu doing Goundamani Character

மீண்டும் விஜய்யுடன் வடிவேலு; எத்தனையாவது முறை தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சில முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே காமெடி நடிகர்களுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும்.

அதில் முக்கியமானவர் இளைய தளபதி விஜய்யை கூறலாம்.

இவர் கவுண்டமணி, விவேக் மற்றும் வடிவேலு உடன் இணைந்து நடித்துள்ளார்.

விரைவில் அட்லி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

இதில் நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலு உடன் இணையவுள்ளார்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ப்ரெண்ட்ஸ், காவலன், வசீகரா, வில்லு, போக்கிரி, சுறா, பகவதி, மதுர, சச்சின் உள்ளிட்ட 9 படங்களில் விஜய்யுடன் வடிவேலு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பட்டதாரி’ ஜோடி இணையும் ‘நாங்க வேலைக்கு போயிட்டா… ஊரை யார் பாத்துக்கிறது?’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எவர்கிரீன் என்டர்டெயினர்ஸ் நிறுவனம் சார்பில் M.விஜயகாந்த் தயாரிக்கும் படம் ‘நாங்க வேலைக்கு போயிட்டா… ஊரை யார் பாத்துக்கிறது’.

ஆதி நடித்த ‘அய்யனார்’ படத்தை இயக்கிய S.S.ராஜமித்ரன் இந்தப்படத்தை இயக்குவதுடன் இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

ரவுடியிசம் தலைவிரித்தாடும் பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவன், கல்விதான் வாழ்க்கையில் முன்னேற்றம் தரும் என்கிற நம்பிக்கையுடன் கல்லூரியில் படித்து கோல்டு மெடல் வாங்குகிறான்.

ஆனால் காலம் அவனையும் ரவுடியாக மாற்ற முயற்சிக்கிறது. அவன் ரவுடியாக மாறினானா..? அல்லது தான் கற்ற கல்வியை வைத்து பிரச்சனைகளை சாதுர்யமாக எதிர்கொண்டானா என்பதுதான் படத்தின் கதைக்கரு.

சமீபத்தில் வெளியான ‘பட்டதாரி’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அபி சரவணன்-அதிதி இருவரும் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த காமெடி வசனங்களுக்கு சொந்தக்காரரான எழிச்சூர் அரவிந்தன் தான் இந்தப்படத்தின் வசனங்களை எழுதுகிறார்.

பார்த்திபனின் ‘குடைக்குள் மழை’ மற்றும் பா.விஜய் நடித்த ‘இளைஞன்’ உட்பட பல படங்களில் பணியாற்றிய சஞ்சய் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, ‘சாலையோரம்’ படத்திற்கு இசையமைத்த சேதுராஜா.S இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

மொழி, அபியும் நானும், சமீபத்தில் வெளியான மாவீரன் கிட்டு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் இந்தப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

பாடல்களை யுகபாரதி எழுதுகிறார். ஆக்சன் காட்சிகளை சூப்பர் சுப்பராயன் வடிவமைக்கிறார்.

வரும் ஜனவரி முதல் வாரத்தில் இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

More Articles
Follows