ஜாதி பெயர் கொண்ட நடிகைகளை கலாய்க்கும் மன்னர் வகையறா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விமல் தயாரித்து நடித்துள்ள படம் மன்னர் வகையறா.

பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இப்படத்தில் ஆனந்தி, சாந்தினி, ஜீலி, நீலிமாராணி, பிரபு, ரோபோ சங்கர், ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தை வெளியிடவுள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் புரோமோ வீடியோக்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.

அதில் ஒரு காட்சியில்… விமல் மற்றும் ரோபோ சங்கர் இருவரும் ஒரு திருமண நிகழ்வில் மொய் வைக்க செல்கின்றனர்.

அப்போது தன் பெயருடன் தேவர் என்ற ஜாதி பெயரை சொல்கிறார் ரோபோ சங்கர்.

அதற்கு மொய் எழுதும் பெண்ணோ.. என்ன சார்? இந்த காலத்துல ஜாதி எல்லாம் பெயரோடு வச்சிருக்கீங்க என்று கேட்கிறார்.

ஏம்மா.. ஐஸ்வர்யா ராய், ஷில்பா செட்டி, லட்சுமிமேனன் இவங்க எல்லாம் ஜாதி பெயர வச்சிருக்கும்போது, தமிழ்நாட்டுக்காரன் நான் தமிழ்நாட்டுல என் பெயரை ஜாதியோட சேர்த்து சொல்லக்கூடாதா? என கேட்கும் விதமாக அந்த ஜாதி பெயர் கொண்ட நடிகைகளை கலாய்த்துள்ளார்.

Mannar Vagaiyara movie release more than 300 theatres in TN

இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது; கமல்-ரஜினி-விஜயகாந்த் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதில் பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டள்ளது.

எம்.ஆர்.ராஜகோபால், நாகசாமி, ஞானம்மாள், தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் வாசுதேவன் ஆகியோர் பத்ம விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.

தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் ராஜகோபாலன் வாசுதேவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாளுக்கு(98) பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோர் இளையராஜாவுக்கு தொலைபேசியில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பத்ம விபூஷண் விருது பெற்றது குறித்து இளையராஜா சற்றுமுன் கூறியதாவது…

பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இளையராஜா கூறியுள்ளார். மேலும் மத்திய அரசு என்னை கௌரவித்ததாக கருதவில்லை என்றும் தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்ததாக கருதுகிறேன் என கூறியுள்ளார்.

Ilayaraja gets Padma Vibhushan Award Rajini Kamal Vijaykanth wished him

 எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது .
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இசைத்துறையில் தனக்கென தனிமுத்திரை பதித்தது மட்டுமல்லாமல் தமிழ் இசையையும், கிராமிய இசையையும் உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியவர் இசைஞானி இளையராஜா(1)
பத்ம விபூஷன் விருது பெறும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல விருதுகள் பெற்று, விருதுகளுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.(2)

பிப்-16ல் நாகேஷ் திரையரங்கம்; கின்னஸ் சாதனை இயக்குனரின் அடுத்த அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனத்தின் இராஜேந்திர எம்.இராஜன்அவர்களின்தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படைப்பு “நாகேஷ் திரையரங்கம்”.

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட “அகடம்” திரைப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த இசாக் இயக்கியுள்ள திரைப்படம் இது.

“நெடுஞ்சாலை”, “மாயா” படப்புகழ் ஆரி நாயகனாகநடிக்கும் இந்த படத்தில் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” “இனிமே இப்படி தான்” படங்களில் நடித்த ஆஷ்னா சவேரி ஜோடியாக நடிக்கிறார்.

காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர்மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சிறிய இடைவேளைக்குப் பின் இந்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் எம்.ஜி.ஆர்.லதாவும், நடிகை சித்தாராவும் நடித்திருக்கிறார்கள்.

நௌஷாத் ஒளிப்பதிவில், ஸ்ரீ இசையில்,தேவராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள “நாகேஷ் திரையரங்கம்” வரும் பிப்ரவரி 16 அன்று வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் இன்று வரையிலும் எண்ணற்ற திகில் படங்களும் பேய் படங்களும் வந்திருந்தாலும் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் கதையும் திரைக்கதையும் அமைத்துள்ளார் இயக்குனர் இசாக்.

திரையரங்கில் பேய் என்னும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் திகில் பட பிரியர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Aari Ashna Zaveri starrer Nagesh Thiraiyarangam release on 16th Feb 2018

பாலியல் தொல்லை கொடுத்தால் கையை வெட்டுவேன்; அனுஷ்கா ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் ஒரு சில நடிகைகள் மட்டுமே ஆக்சனிலும் வெளுத்து கட்டுவார்கள்.

சில ஆண்டுகளுக்கு அந்த இடத்தை விஜயசாந்தி பிடித்து வைத்திருந்தார்.

தற்போது அதுபோன்ற ஆக்சன் படங்களுக்காகவே அனுஷ்காவை இயக்குனர் நாடுகின்றனர்.

இந்நிலையில் படத்தின் ஆக்சனை போன்றே நேரிலும் கொதித்து எழுந்து பேசியுள்ளார் அனுஷ்கா.

சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பாலியல் தொல்லை குறித்து ஆவேசமாக பேசியுள்ளார்.
பாகுபலி-2 படத்தில் நடந்த மாதிரியே ஒருவன் என்னை அத்துமீறி தொட்டான். அவனை கொல்ல வேண்டும் என்று எனக்கு கோபம் வந்தது.

அப்படி செய்ய முடியாமல் ஓங்கி அவனை அறைந்தேன். அந்த சம்பவம் நடந்த அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை.

ஒரு பெண்ணை யாராவது தொட்டால் அதில் அன்பு இருக்க வேண்டும். ஆதரவு இருக்க வேண்டும். பாதுகாப்பை உணர வைக்க வேண்டும். கவுரவமாகவும் இருக்க வேண்டும்.

அந்த உணர்ச்சி ஒரு தைரியத்தை கொடுக்கும். அதற்கு மாறாக அந்த தொடுதலில் ஆசை இருந்தால் அந்த மாதிரி செய்பவன் கைகளை வெட்ட வேண்டும் என்றுதான் தோன்றும்” என்று பேசினார்.

Actress Anushka Shetty speech about Sexual harassment

அஜித்தின் விசுவாசம் என்ன ஆச்ச..? விரக்தியில் தல ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில ஆண்டுகளாக அஜித் நடித்த அனைத்து படங்களும் நல்ல வசூலை பெற்றது.

ஆனால் இறுதியாக வெளியான விவேகம் படம் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

எனவே அவர்கள் சிவா இயக்கத்தை அஜித் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.

ஆனால் மீண்டும் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.

இந்த படம் அறிவிப்பு மட்டுமே வந்தது. அதன்பின்ன்ர சூட்டிங் தொடர்பான எந்த ஒரு தகவலும் இதுவரை இல்லை.

இந்நிலையில் படத்தயாரிப்பு தரப்பில் இருந்து சில தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது.. கடந்த 3 மாதங்கள் படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டு வந்துள்ளதாம்.

அந்த வேலைகள் இன்னும் முடிவடையவில்லையாம்.

அதனை முடித்துவிட்டுடு மற்ற கலைஞர்கள் மற்றும் சூட்டிங் தகவல்களை தெரிவிப்போம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் பிப்ரவரியில் இருந்து படத்தகவல்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ரசிகர்களை மெர்சலாக்கும் கேரளா தளபதி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தை தவிர கேரளாவிலும் விஜய்க்கு மாஸ் பெருகி வருகிறது.

இவர்கள் தமிழக ரசிகர்களே வியக்கும் அளவுக்கு ஏதாவது ஒன்றை செய்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன் விஜய்க்கு சிலை வைத்து கொண்டாடினர்.

தற்போது ஒரு படி மேலே சென்று விஜய்க்காக ஒரு இணையதளம் ஒன்றை உருவாக்கவிருக்கிறார்களாம்.

கேரளாவை சேர்ந்த கில்லி பாய்ஸ் கேரளா விஜய் ரசிகர்கள் விஜய் பற்றிய செய்திகளை மட்டும் அறிய ஒரு சமூக பக்கம் தொடங்கவுள்ளனர்.

விரைவில் அந்த பக்கத்திற்காக அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

More Articles
Follows