தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கெளதம் மேனன் இயக்கி வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்து வருகிறார் மஞ்சிமா மோகன்.
அதே நேரத்தில் இப்படம் தெலுங்கிலும் தயாராகி வருகிறது. தெலுங்கு பதிப்பிலும் இவரேதான நாயகியாக நடித்து வருகிறார்.
ஆனால் ஹீரோவாக நாக சைதன்யா நடித்து வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் படம் குறித்து மஞ்சிமா மோகன் பேசியதாவது…
“என் அப்பா ஒரு ஒளிப்பதிவாளர். எனவே, மலையாளத்தில் நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன்.
‘மதுரனோம்பார கட்டு’ என்ற படத்தில் நடித்தமைக்காக கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதை 9 வயதில் பெற்றேன்.
‘ஒரு வடக்கன் செல்ஃபி ‘ படத்தில் நாயகியாக அறிமுகமானேன். தற்போது கெளதம் சார் படத்தில் நடித்து வருகிறேன்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளும் தெரியும் என்பதால் நடிப்பதில் பிரச்சினை இல்லை..
ஆனால் ஒரு காட்சியை ஒரு நாயகனுடன் எடுத்துவிட்டு, சில மணி நேரம் கழித்து அடுத்த நாயகனுடன் எடுப்பார்கள்.
முதல் ஹீரோவுடன் எப்படி செய்திருந்தேனோ அப்படியே இவரிடமும் செய்ய வேண்டும். அதனால் ரொம்பவே கஷ்டப்பட்டேன். பின்னர் பழகிவிட்டது.
நாயகி வேடம்தான் வேண்டும் என்பதில்லை. சில சீன்ஸ்தான் என்றாலும், ரசிகர்களுக்கு பிடிக்குமா? என்பதை பார்ப்பேன். பிடித்தால் ஓகே சொல்லிடுவேன்.”
இவ்வாறு மஞ்சிமா தெரிவித்துள்ளார்.