தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள படம் “ஒரு அடார் லவ்”.
இந்த படத்தில் இடம் பெற்ற “மாணிக்க மலராய பூவி” என்ற பாடலும் அந்த பாடலில் பிரியா வாரியர் கொடுத்த ஐப்ரோ எக்ஸ்பிரசன்ஸ்ம் அவரை உலகளவில் பிரபலமாக்கியது.
இதுவரை படத்தின் பாடல்கள் மற்றும் சில காட்சிகள் மட்டுமே வெளியாகியுள்ளது.
இதனிடையில் இந்த பாடலை எதிர்த்து பிரியா மற்றும் டைரக்டர் மீது கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் படக்குழுவுக்கு ஆதரவாக கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த இருவர் தற்போது இப்பாடல் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அவர்களின் மனுவில், “ஒரு அடார் லவ்’ படத்தில் வரும் பாடல் முகம்மதுவையும் அவரது மனைவி கதீஜாவையும் இழிபடுத்துவது போல உள்ளது.
இஸ்லாமியர்களின் உணர்வை அவமதிக்கும் அந்த பாடலை உடனே படத்தில் இருந்து நீக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து டைரக்டர் ஓமர்லூலு கூறியதாவது:-
மலபாரில் உள்ள முஸ்லிம்கள் இந்த பாடலை பல வருடங்களாக கிட்டதட்ட 40 ஆண்டுகளாக பாடி வருகிறார்கள்.
அவர்கள் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
திருமண விழாக்களில் கூட அந்த பாடலை பாடுகிறார்கள். அப்படி இருக்கும்போது, அந்த பாடலை இப்போது திடீரென ரத்து செய்ய சொல்வது ஏன்?” என கேட்டுள்ளார்.
Manikya malaraya poovi song to be removed from oru adaar love movie Case filed