விஜய்-செல்வராகவன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த பிரபல நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பைரவா படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள 61வது படத்தை அட்லி இயக்குவார் என்றும், இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது என்பதை பலமுறை பார்த்துவிட்டோம்.

இதனையடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என்ற தகவல்கள் சில நாட்களாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் சந்திக்க ஏற்பாடு செய்த அந்த நபர் யார் தெரியுமா? நடிகர் பிரபுதானாம்.

அவர்தான் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இவர்கள் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.

விநாயகர் சதுர்த்தியன்று இவர்கள் இருவரையும் தன் அன்னை இல்லத்திற்கு அழைத்துள்ளார்.

அப்போது செல்வா ஒரு அருமையான கதை வைத்திருக்கிறார். விஜய் தம்பி கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். கேட்டு பாருங்க.. என்று தொடங்கி வைத்திருக்கிறார்.

கதையை முழுவதுமாக கேட்ட விஜய், தன்னுடைய சில அபிப்ராயங்களை சொல்லி, இயக்குனரிடம் கொஞ்சம் மாற்றம் செய்ய சொல்லி இருக்கிறாராம்.

கதையில் இந்த மாற்றங்கள் உறுதியாகும் பட்சத்தில், இவர்களின் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

மீண்டும் சூர்யாவுடன் இணையும் ஹன்சிகா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கும் எஸ் 3 படத்தை முடித்துவிட்டு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.

இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

தானா சேர்ந்த கூட்டம் என்ற பெயரிடப்பட்ட இப்படத்தில் சூர்யாவுடன் சதீஷ், மொட்டை ராஜேந்திரன், கேஎஸ். ரவிக்குமார், சரண்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக ஹன்சிகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவருடன் மற்றொரு நாயகியும் நடிக்கிறாராம்.

சூர்யாவுடன் சிங்கம் 2 படத்தில் ஹன்சிகா நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

சினிமா ஸ்டார்களுக்கு சவால் விடும் கிரிக்கெட் ஸ்டார் தோனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு சவால் விடும் வகையில் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம் எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படம் மாபெரும் சாதனை படைத்து வருகிறது.

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி இப்படம் தமிழிலும் வெளியானது.

என்னதான் தமிழில் டப் செய்யப்பட்டு இருந்தாலும், இந்தி படங்கள் தமிழகத்தில் ஓடாது என சிலர் நினைத்திருந்தனர்.

ஆனால் அவர்களின் நினைப்பை தூள் தூளாக்கி சிக்ஸர் அடித்து வருகிறார் இந்த தோனி.

தமிழகத்தில் மட்டும் 205 அரங்குகளில் தமிழ் பதிப்பையும் 27 அரங்குகளில் இந்தி பதிப்பையும் திரையிட்டனர்.

இந்த மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 7 கோடி வசூலை நெருங்கியுள்ளது.

மேலும் இதுவரை உலகளவில் ரூ. 66 கோடி வசூலை எட்டியுள்ளதாம்.

விரைவில் இப்படமும் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்து விடும் என கூறப்படுகிறது.

‘படையப்பா’வுடன் கனெக்ஷன் ஆகும் சிம்பு-தனுஷ் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் படையப்பா.

ஒரு மிகப்பெரிய ஸ்டாரான ரஜினியே தனக்கு எதிராக ஒரு நீலாம்பரி என்ற பெண் கேரக்டரை எப்படி கொண்டு வந்தார்? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது.

ரம்யா கிருஷ்ணனும் அப்படியொரு பவர்புல் பெர்மான்ஸை கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது திரைக்கு வரத் தயாராகியுள்ள தனுஷின் கொடி படத்திலும் த்ரிஷா கேரக்டரும் அப்படியானதுதானாம்.

இக்கேரக்டருக்கு ருத்ரா என்று பெயரிட்டுள்ளனர்.

அதுபோல், சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் உள்ள அஸ்வின் தாத்தா கேரக்டர் படையப்பா ஸ்டைலில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டைரக்டர்களை தேர்வு செய்வதில் அஜித்துக்கே குழப்பம் வரலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் தல 57 படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இதனையடுத்து, அவர் யார் படத்தில் நடிப்பார் என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இதனிடையில் சுந்தர் சியின் அரண்மணை படத்தை தயாரித்த விஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் அஜித்தை சந்தித்து கால்ஷீட் கேட்டுள்ளதாம்.

இதற்கு அஜித்தும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையில் அஜித்துக்காக ஒரு கதையுடன் ஷங்கர் காத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஷங்கர், முருகதாஸ் இருவரும் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்கள். எனவே யாருக்கு கால்ஷீட் கொடுப்பது என அஜித்திற்கே நிச்சயம் குழப்பம் வரலாம்.

மீண்டும் வெங்கட் பிரபு-பிரேம்ஜியுடன் கைகோர்க்கும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு தன் சொந்த பேனரில் தயாரித்து இயக்கியுள்ள படம் சென்னை 28 பார்ட் 2.

முதல் பாகத்தில் நடித்த ஜெய், பிரேம்ஜி, மிர்ச்சி சிவா உள்ளிட்ட கலைஞர்களுடன் இரண்டாம் பாகத்தில் நிறைய கலைஞர்களை சேர்த்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை வருகிற அக்டோபர் 7ஆம் தேதி மாலை 7 மணிக்கு மலேசியாவில் வெளியிட இருக்கிறார்களாம்.

இதனை சூர்யா வெளியிட ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மாசு என்கிற மாசிலாமணி படத்தில் சூர்யா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் இணைந்து பணியாற்றியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows